Skip to main content

Posts

Showing posts from April, 2022

தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தம் சரியான திசைவழியில் செல்கிறதா?

இந்திய அரசின் தொழிலாளர் விரோத , மக்கள் விரோதச் சட்டங்களுக்கு  எதிராக 10 க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய 48 மணி நேர பொது வேலை நிறுத்தம் கடந்த மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில்  நடைபெற்றது . கடந்த சில ஆண்டுகளாகவே ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் பொது வேலைநிறுத்தம் வெறும் சடங்குத்தனமாகவே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது . பல ஆண்டுகளாகப் பொதுக் கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப் பெறும் இந்த வேலைநிறுத்தங்கள் ஆளும்வர்கக்கங்களையோ அல்லது அதற்குத் துணை நிற்கும் அரசாங்கத்தையோ சிறிதும் அசைக்க முடியவில்லை . ஆட்சியாளர்கள் அதைச் சிறிதும் சட்டை செய்வதில்லை. போதுமான தயாரிப்புகள் இல்லாமல் , முறையான பிரச்சாரங்கள் இல்லாமல் , பரந்துபட்ட அளவில் தொழிலாளர்களை அணி திரட்டாமல் , மேம்போக்கான அறிவித்தல்களின் மூலம் , பெயரளவில்தான் தொழிலாளர்கள் அணி திரட்டப்படுகின்றனர். தொழிலாளர்களிடம்  ஆளும் முதலாளிய வர்க்கத்தைப் பற்றியும், அதன் சுரண்டலுக்கு  ஆதரவான  அரசின் சட்டங்களைப் பற்றியும்   விரிவான முறையில் பிரச்சாரம் செய்யப்படாததால் அவர்கள் மத்தியில் வர்க்க உணர்வும் அரசியல் உணர்வும் மிகக

ஆளும் வர்க்கத்தை நடுநடுங்க வைக்கும் இலங்கை மக்களின் போராட்ட அலைகள்

               இலங்கை மக்கள் வரலாறு காணாத கடுமையான பொருளாதார நெருக்கடியில் இன்று சிக்கிக் கொண்டுள்ளனர். அரிசி, காய்கறிகள், சமையல் எண்ணெய் என அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. எரிவாயு உருளைகள், மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் ஆகியவற்றுக்காக மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை. நாள் ஒன்றுக்கு பன்னிரண்டு, பதின்மூன்று மணி நேரம் மின் வெட்டு. மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுவதில்லை. போதிய தாள்கள் இல்லாததால் பல செய்தித்தாள்கள் தங்கள் வெளியீட்டை நிறுத்தி விட்டன. எழுதுவதற்குத் தாள்களும் மையும் இல்லாததால் பள்ளிகளில் தேர்வுகள் தள்ளிப் போடப்பட்டுள்ளன. வாழ்வா சாவா என்ற நிலையில் மக்கள் எவ்வளவு நாட்கள் இருக்க முடியும்? இந்த நிலையில்தான் இலங்கை மக்கள் அனைவரும் இன, மத வேறுபாடின்றி, ஆண்களும் பெண்களும் பேராசிரியர்களும் மாணவர்களும் இளைஞர்களும் வழக்குரைஞர்களும் பேராயர்களும் பாதிரிமார்களும் வீதிகளில் இறங்கி ஆட்சியாளர்களை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அடக்குமுறைக் கருவிகளில்