Posts

இந்திய ஆட்சியாளர்களைப் பயமுறுத்தும் "கரப்பான் பூச்சிகள்"

  இந்திய ஆட்சியாளர்களைக் கரப்பான் பூச்சிகள் பயமுறுத்தத் தொடங்கியுள்ளன . ஆச்சரியமாக உள்ளதா ? ஆச்சரியப்பட்டாலும் உண்மை அது தான் . உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் , ' இந்த நாட்டில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் , ஒட்டுண்ணிகள் ` என ஒரு விசாரணையின்போது குறிப்பிட்டு தனது அதிகாரச் சாட்டையை இளைஞர்கள் மீது சொடுக்கினார் . அது இருக்கும் இடம் தொியாமல் வசித்து வந்த " கரப்பான்பூச்சிகளை " உசுப்பி விட்டுவிட்டது . ' ஆம் , நாங்கள் கரப்பான்பூச்சிகள்தான் ' என்று கூறிக்கொண்டு இளைஞர் பட்டாளம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் அணி திரளத் தொடங்கி விட்டது . அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வரும் அபிஜித் தீப்கே என்னும் மகாராட்டிரத்தைச் சேர்ந்த . இளைஞரால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் ஓர் இணையதளக் கட்சி மே , 16 அன்று தொடங்கப்பட்டது . அது " வேலை இல்லாமல் , சோம்பேறிகளாக உள்ள , மறக்கப்பட்ட குடிமகன்களுக்கான இந்தியாவின் மிகவும் உண்மையான ...
Recent posts