Skip to main content

Posts

கூலி உயர்வுக்குப் போராடும் தொழிலாளர்கள் கிரிமினல் குற்றவாளிகளா?

  ஏப்ரல் , 2026-- இல் , இந்திய த் தலைநகர் அருகிலுள்ள -- தொழிற்சாலை நகரங்களான மா னெசர் , நொய்டா ஆகியவற்றில் ஒப்பந்த த் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர் ; இவர்களுக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட பாரதிய நாகரிக் சுரக்ஷ சன்ஹிதாவில் குறிப்பிடப்பட்ட விதிகளை ஒட்டி ஏராளமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. முதலில் பார்க்கும்போது இந்த முதல் தகவல் அறிக்கைகள் வழக்கம்போல சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளாக --- சட்டத்திற்கு ப் புறம்பான கூடுதல், கலவரங்கள் , சொத்துக்களை ச் சேதப்படுத் துதல், காவல்துறையினர் மீது தாக்குதல் என்று பதிவு செய்திருப்பது போல் தோன்றும் ; ஆனால் அவற்றை உன்னிப்பாக க் கவனத்துடன் பார்க்கும்போது , ஊதியம் கோரும் உழைப்பாளர்களின் போராட்டத்தை பொது ஒழுங்கு குலைப்பு மற்றும் தீவிரமான குற்ற ச் செயல்களாக பட்டியலிட்டு , திட்டமிட்டு தொழிலாளர்களுக்கு விரோதமாக தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக காவல்துறை பதிவு செய்திருப்பது தெளிவாக த் தெரிய வரும்.   இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்து தொழிலாளர் போராட்டங்களும் வேலை ந...
Recent posts

அமெரிக்க, இஸ்ரேல்- ஈரான் யுத்தமும் பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறையும்!

  கடந்த பிப்ரவரி 28- ல் தொடங்கிய இப்போரானது மூன்று மாதத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கொமேனியின் கொடுங்கோன்மை எனும் நுகத்தடியின் கீழ் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈரான் மக்களை விடுவிப்பதற்காகவும் , அணு ஆயுத அச்சுறுத்தல்களில் இருந்து தன்னையும் தனது நட்பு நாடுகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஈரான் மீது போர் தொடுத்திருப்பதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறிவருகிறது . ஆஹா ! ஈரான் மக்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எவ்வளவு அக்கறை ? " ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை " தான் . மறுபுறம் அமெரிக்க , இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது . ஆனால் இவர்களின் கூற்றுக்களை மெய்விவரங்களில் இருந்து ஆராய்ந்து பார்த்தோமேயானால் அவை உண்மை அல்ல என்பது விளங்கும் . இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ( ஏகாதிபத்தியத்தினதும் , பாட்டாளி வர்க்க சர்வாதிகார சகாப்தத்தினதுமான ) நடைபெறும் அனைத்து வகையான யுத்தங்களும் அது உலக ய...