இந்தியாவின் அதிகார வர்க்கமும் , முதலாளித்துவச் சுரண்டலும் ஒன்றுக்கொன்று துணையாக இணைந்து செயல்படும் சூழலை நாம் தொடர்ந்து காண்கிறோம் . அரசின் கொள்கைகளாக முன்னேற்றம் , வளர்ச்சி , எதிர்கால நலன் , பாதுகாப்பு என்று அறிவிக்கப்படுகின்றன . ஆனால் , அதன் உண்மையான விளைவு கனிம வளங்களை, இயற்கையைச் சூறையாடுவது , உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு எதிர்காலப் பாதுகாப்பு இன்மை , தொடரும் வேலை இழப்பு , குறைந்த ஊதியம் , அதிக வேலை நேரம் என்ற வடிவில் வெளிப்படுகிறது . பொதுத்துறை நிறுவனங்களும் கூட லாப நோக்கை முதன்மை இலக்காகக் கொண்டு இயங்கும் சூழலில் , உழைப்பின் மீதான சுரண்டல் தீவிரப்படுத்தப்படுகின்றது. ஒப்பந்த வேலை , நிரந்தரமற்ற வேலை , சமூக பாதுகாப்புத் திட்டங்கள் நீக்கம் , தொழிற்சங்க உரிமை மீதான கட்டுப்பாடு இவை அனைத்தும் தனித்தனியான நிகழ்வுகள் அல்ல, ஒரு பெரிய பொருளாதார – அரசியல் அமைப்பின் நெருக்கடியின் அறிகுறிகள் . இந்த அமைப்பில் லாபமே முதன்மை. மனித வாழ்வே நவீன அடிமை முறையாக மாறுகிறது . தொழிலாளர்களின் உழைப்பு வளர்ச்சியின் அடித்தளமாக இருந...
செந்தழல்
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்