Posts

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டமும் – இடதுசாரிகளின் அரசியல் பலவீனமும்!

  2026 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமையால் ( NTA) மே 3 ஆம் தேதியன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது . இந்தத் தேர்வில் 22 இலட்சத்திற்கும் அதிகமான மாணாக்கர்கள் பங்கேற்றனர் . தேர்வு நடந்த இரண்டு நாட்களில் வினாத்தாள் கசிந்த செய்தி வெளியானது . இந்த வினாத்தாள் கசிவு முறைகேடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது அம்பலமானது . மேலும் , மத்திய இடைநிலைக் கல்வி ( CBSE) வாரியத் தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன உளைச்சல்களையும் , அரசின் மீதான அதிருப்தியையும் அதிகப்படுத்தியது . நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டதால் மன அழுத்தத்திற்காக ஆளான 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் .   இதனால் , நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது . வேலையில்லா இளைஞர்களை ' கரப்பான் பூச்சிகள் ' மற்றும் ' ஒட்டுண்ணிகள் ' என்று ஒப்பிட்டு இந்தியத் தலைமை நீதிபதி கூறிய கருத்துகளுக்கு எதிர்வின...
Recent posts