கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைமையில் தில்லி ஜந்தர்மந்தரில் நடந்த நீட் ( NEET) தேர்வுத் தாள் கசிவு மற்றும் பல்வேறு தேர்வு முறை முறைகேடுகளுக்கு எதிரான இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் ஆட்சியாளர்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . ஜூலை 20 ந் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிடச் சென்ற இளைஞர்கள் மீதும் மாணவர்கள் மீதும் கொடுரமான அடக்கு முறையை போலீஸ் கட்டவிழ்த்து விட்டது ; ஆணிகள் பதித்த தடிகளாலும் , பெல்லட் குண்டுகளாலும் தாக்கியது ; பெண்கள் மீதும் அநாகரிகமான தாக்குதல்களை நடத்தியது . அதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என ஆட்சியாளர்கள் நினைத்தனர் . ஆனால் இளைஞர்களும் மாணவர்களும் அடக்குமுறையைக் கண்டு அஞ்சவில்லை . விடாப்பிடியாக , உறுதியுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர் . கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானை பதவி விலக வைத்தனர் . அண்டை நாடுகளான இலங்கை , நோபாளம் , வங்காளதேசம் ஆகியவற்றில் நடந்த இளைஞர்களின் போராட்டங்கள் அந்த நாடுகளில் ஆட்சியாளர்களை விரட்டி அடித்தன . அதைப் போல இங...
செந்தழல்
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்