Posts

அமெரிக்க, இஸ்ரேல்- ஈரான் யுத்தமும் பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறையும்!

  கடந்த பிப்ரவரி 28- ல் தொடங்கிய இப்போரானது மூன்று மாதத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கொமேனியின் கொடுங்கோன்மை எனும் நுகத்தடியின் கீழ் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈரான் மக்களை விடுவிப்பதற்காகவும் , அணு ஆயுத அச்சுறுத்தல்களில் இருந்து தன்னையும் தனது நட்பு நாடுகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஈரான் மீது போர் தொடுத்திருப்பதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறிவருகிறது . ஆஹா ! ஈரான் மக்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எவ்வளவு அக்கறை ? " ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை " தான் . மறுபுறம் அமெரிக்க , இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது . ஆனால் இவர்களின் கூற்றுக்களை மெய்விவரங்களில் இருந்து ஆராய்ந்து பார்த்தோமேயானால் அவை உண்மை அல்ல என்பது விளங்கும் . இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ( ஏகாதிபத்தியத்தினதும் , பாட்டாளி வர்க்க சர்வாதிகார சகாப்தத்தினதுமான ) நடைபெறும் அனைத்து வகையான யுத்தங்களும் அது உலக ய...
Recent posts