அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது அகோரப் பசிக்கு உலக நாடுகளின் மீதான ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலை நாட்டி வருகின்றது. பின் தங்கிய, வளரும் நாடுகளின் இயற்கை வளங்களைச் சூறையாடவும், சந்தையைக் கைப்பற்றவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தங்கள் தருகின்றன. தமது எண்ணம் நிறைவேறாத நிலையில் அங்குள்ள ஆட்சியை அகற்றி, தமக்குச் சாதகமான பொம்மை ஆட்சியை நிறுவி அந்த நாட்டைக் கொள்ளையடித்து வருகின்றது. இந்தப் போக்கானது சமீபத்தில் அதிகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஈராக் , லிபியா , சிரியா , பாலஸ்தீனம் , வெனிசுலா, நைஜீரியா, ஏமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் , தென் அமெரிக்க நாடுகள் , ஆப்பிரிக்க நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை அமெரிக்கா நிலை நிறுத்தி வருகின்றது . கிரீன்லாந்தை பிடிக்கப் போவதாகவும் அச்சுறுத்தி வருகின்றது. சதாம் புஷ் ஆட்சியில் கொல்லப்பட்டார்; கடாபி ஒபாமா ஆட்சிக் காலகட்டத்தில் கொல்லப்பட்டார்; டிரம்ப் அதிகாரத்தின் கீழ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இ...
தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரப் போகின்றது. ஆளும் கட்சியான திமுகவும் எதிர்க் கட்சியான அதிமுகவும் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கான சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆட்சியில் உள்ள திமுக ஏற்கனவே 1.3 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது; அரசு பள்ளிகளில் பயின்று பிறகு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. மேலும் மகளிருக்கு இலவசமாக நகரப் பேருந்துப் பயணச் சலுகைகளை வழங்கி வருகிறது; பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 3000 ரூபாயை தைப் பொங்கலின்போது வழங்கியது. போதாக்குறைக்கு மகளிர் உரிமைத் தொகையில் மூன்று மாதத் தொகையான 3000ரூபாயை முன் கூட்டி வழங்குவதுடன், அத்தோடு கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாயையும் சேர்த்து 5000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகையாக இந்த மாதம் வழங்கி மகளிரைத் திக்குமுக்காட வைத்துள்ளது. இவை அனைத்தும் தேர்தலில் வாக்குகளாக மாறி தன்னை வெற்றி பெறச் செய்து மீண்டும் ஆட்சிக் கட்...