Skip to main content

Posts

முதலாளிகள் கொழுக்க மக்கள் பட்டினி கிடக்க வேண்டும்!

  10.05.2026 அன்று ஹைதராபாத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சி பேரணியில் இந்திய பிரதமர் இந்திய மக்களுக்கு ஏழு வேண்டுகோள்கள் விடுத்தார் ; அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்ய வேண்டும் ; அடுத்த ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் ; பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் ; சமையல் எரிவாயு உபயோகத்தைக் குறைக்க வேண்டும் ; ரசாயன உரப் பயன்பாட்டை 50% குறைக்க வேண்டும் ; வெளிநாட்டுப் பொருள்களை தவிர்த்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்க வேண்டும் ; மேலும் வெளிநாட்டுப் பயணங்களை ஒரு வருடத்திற்கு தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்நியச் செலாவணி இருப்பை அதிகப்படுத்த, பாதுகாக்க இந்த நடவடிக்கைகள் தேவை என்று காரணம் கூறினார்.   ஆனால் ரிசர்வ் வங்கி கவர்னரும் , நிதி அமைச்சரும் , அமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் நிலைமைகளை ஆராய்ந்து அறிவுறுத்தும் கமிட்டிகளும் , பல்வேறு வகையான நிலைப்பாடு கொண்ட பல பொருளாதார வல்லுநர்களும் , ஊடகங்களும் பொதுமக்களுக்கு மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நாளும் இந்தியா தேவையான அளவு அந்நியச் செலாவணி இருப்பைக் கொண்டிருக்கிறது என்று கூறிக் கொண்டி...
Recent posts

கூலி உயர்வுக்குப் போராடும் தொழிலாளர்கள் கிரிமினல் குற்றவாளிகளா?

  ஏப்ரல் , 2026-- இல் , இந்திய த் தலைநகர் அருகிலுள்ள -- தொழிற்சாலை நகரங்களான மா னெசர் , நொய்டா ஆகியவற்றில் ஒப்பந்த த் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர் ; இவர்களுக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட பாரதிய நாகரிக் சுரக்ஷ சன்ஹிதாவில் குறிப்பிடப்பட்ட விதிகளை ஒட்டி ஏராளமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. முதலில் பார்க்கும்போது இந்த முதல் தகவல் அறிக்கைகள் வழக்கம்போல சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளாக --- சட்டத்திற்கு ப் புறம்பான கூடுதல், கலவரங்கள் , சொத்துக்களை ச் சேதப்படுத் துதல், காவல்துறையினர் மீது தாக்குதல் என்று பதிவு செய்திருப்பது போல் தோன்றும் ; ஆனால் அவற்றை உன்னிப்பாக க் கவனத்துடன் பார்க்கும்போது , ஊதியம் கோரும் உழைப்பாளர்களின் போராட்டத்தை பொது ஒழுங்கு குலைப்பு மற்றும் தீவிரமான குற்ற ச் செயல்களாக பட்டியலிட்டு , திட்டமிட்டு தொழிலாளர்களுக்கு விரோதமாக தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக காவல்துறை பதிவு செய்திருப்பது தெளிவாக த் தெரிய வரும்.   இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்து தொழிலாளர் போராட்டங்களும் வேலை ந...