6.02.26- அன்று அறிவிக்கப்பட்ட இந்தியா அமெரிக்கா வணிக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை ப் பெரிதும் பாதிக்கும் என்ற பெரும் அச்சத்தை இந்திய விவசாயிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இந்த ஒப்பந்தம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளி , ஆயத்த ஆடைகள் , தோல் பொருட்கள் , காலணிகள் , பிளாஸ்டிக் , ரப்பர் , கரிம வேதியியல் பொருள்கள் மற்றும் குறிப்பிட்ட இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா 18% வரி விதிக்கும் ; ஆனால் இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அமெரிக்க த் தொழில்துறை பொருள்கள் , உணவு மற்றும் விவசாய ப் பொருள்களுக்கு மிகவும் குறைவான அளவு அல்லது 0% வரி முதலிய பல சலுகைகளையும் நம் நாடு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெளிவாக உறுதியாக அறிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்க பொருள்களை வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் , அமெரிக்கா அதிபர் இந்த ஒப்பந்தத்தை அறிவித்த 40 நிமிடங்கள் கழித்து மோடி இந்த ஒப்பந்தத்தை க் கொண்டாடி இது இந்தியாவிற்கான புதிய வாய்ப்புகளையும் , இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும்...
இந்தியாவின் அதிகார வர்க்கமும் , முதலாளித்துவச் சுரண்டலும் ஒன்றுக்கொன்று துணையாக இணைந்து செயல்படும் சூழலை நாம் தொடர்ந்து காண்கிறோம் . அரசின் கொள்கைகளாக முன்னேற்றம் , வளர்ச்சி , எதிர்கால நலன் , பாதுகாப்பு என்று அறிவிக்கப்படுகின்றன . ஆனால் , அதன் உண்மையான விளைவு கனிம வளங்களை, இயற்கையைச் சூறையாடுவது , உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு எதிர்காலப் பாதுகாப்பு இன்மை , தொடரும் வேலை இழப்பு , குறைந்த ஊதியம் , அதிக வேலை நேரம் என்ற வடிவில் வெளிப்படுகிறது . பொதுத்துறை நிறுவனங்களும் கூட லாப நோக்கை முதன்மை இலக்காகக் கொண்டு இயங்கும் சூழலில் , உழைப்பின் மீதான சுரண்டல் தீவிரப்படுத்தப்படுகின்றது. ஒப்பந்த வேலை , நிரந்தரமற்ற வேலை , சமூக பாதுகாப்புத் திட்டங்கள் நீக்கம் , தொழிற்சங்க உரிமை மீதான கட்டுப்பாடு இவை அனைத்தும் தனித்தனியான நிகழ்வுகள் அல்ல, ஒரு பெரிய பொருளாதார – அரசியல் அமைப்பின் நெருக்கடியின் அறிகுறிகள் . இந்த அமைப்பில் லாபமே முதன்மை. மனித வாழ்வே நவீன அடிமை முறையாக மாறுகிறது . தொழிலாளர்களின் உழைப்பு வளர்ச்சியின் அடித்தளமாக இருந...