தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக வரலாற்றைத் திரித்து, மதவெறி சாயம் பூசி , திட்டமிட்டுத் தொடர்ந்து முஸ்லிம்களின் மீது வெறுப்பை அதிகரித்து 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-- ஆம் நாள் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பிற சங் பரிவாரங்களுடன் இணைந்து பிஜேபி இந்துத்துவ சக்திகள் 1528 – 1529 இல் கட்டப்பட்ட பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கின. பிறகு அந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்டப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட 22.01.2024 அன்று "இது காலண்டரில் குறிக்கப்பட்ட நாள் மட்டுமல்ல ஒரு புது யுகத்தின் விடியலாகும்" என்று பிரதமர் மோடி பிரகடனம் செய்தார். இந்தியா முழுவதும் பரவலாகப் பல ஆண்டுகளாகப் போராட்டங்களை நடத்திக் கட்டப்பட்டது ராமர் கோவில். இந்தக் கோவிலின் நிர்வாகம் மிகுந்த அதிகாரம் கொண்ட "ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா ட்ரஸ்ட்" கீழ் உள்ளது. பக்தர்கள் வழங்கிய சிறு தொகை முதல் தங்கம் , வெள்ளி மற்றும் விலையுயர்ந்த நகைகள் , பெரும் தொகை நன்கொடைகளை இது நிர்வகித்து வருகிறது. இந்த ட்ரஸ்ட் பிரதமர் மோடியால் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அவர...
2026 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமையால் ( NTA) மே 3 ஆம் தேதியன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது . இந்தத் தேர்வில் 22 இலட்சத்திற்கும் அதிகமான மாணாக்கர்கள் பங்கேற்றனர் . தேர்வு நடந்த இரண்டு நாட்களில் வினாத்தாள் கசிந்த செய்தி வெளியானது . இந்த வினாத்தாள் கசிவு முறைகேடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது அம்பலமானது . மேலும் , மத்திய இடைநிலைக் கல்வி ( CBSE) வாரியத் தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன உளைச்சல்களையும் , அரசின் மீதான அதிருப்தியையும் அதிகப்படுத்தியது . நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டதால் மன அழுத்தத்திற்காக ஆளான 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் . இதனால் , நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது . வேலையில்லா இளைஞர்களை ' கரப்பான் பூச்சிகள் ' மற்றும் ' ஒட்டுண்ணிகள் ' என்று ஒப்பிட்டு இந்தியத் தலைமை நீதிபதி கூறிய கருத்துகளுக்கு எதிர்வின...