09.03.2026 அன்று உலக அளவில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 100 டாலர்களுக்கும் அதிகமாக அதாவது 110 அமெரிக்க டாலர்களாக விலை உயர்ந்தது. மேற்காசியா நாடான இரான் மீதான அராஜகமான அமெரிக்க மேலாதிக்கத்தின் போருக்கு முன் , ஒரு பேரலுக்கு 69 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை , மிகச் சில நாட்களிலேயே --- ஒரு வாரத்திலேயே மிக அதிகமான அளவில் விலை ஏறியது. உண்மையில் இந்த விலை ஏற்றம் ஹொர்முஸ் நீரிணை இரானால் மூடப்பட்டதால் ஏற்பட்டது என்பதைவிட எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பினாலேயே ஏற்பட்டது. இந்த விலை உயர்வு 1973- இல் ஏற்பட்ட விலை உயர்வுடன் ஒப்பிட்டால் சற்றும் வித்தியாசம் இல்லாதது ; அப்போதும் பற்றாக்குறையால் விலை உயரவில்லை --- ஆனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பினால் பல மடங்கு விலை ஏற்றப்பட்டதால் ஏற்பட்டதாகும் ; அதேபோல 2008---2022 வரையிலான காலத்தில் ஏற்பட்ட விலை உயர்வுடன் ஒப்பிட்டால் இது வேறுபட்டதாகும். இந்த இரண்டு விலை உயர்வுகளும் அவற்றின் இயல்புப்படி குறுகிய காலமே இருந்தன:-- 2008 ஆம் ஆண்டு விலை உயர்வு எதிர்பாராத விதமாக சீனாவின் தேவை அதிகரித்ததாலும் , மற...
சர்வதேச அதிகார வர்க்கத்தினர் , அரசியல் அதிகாரம் படைத்தவர்கள் ஆகியோரின் பாலியல் கொடுமைக்கு சிறுமிகளை இரையாக்கி காரியம் சாதித்து வந்த அதிகாரத் தரகன் அமெரிக்காவின் எப்ஸ்டீனுடன் தொடர்பு கொண்டவர்கள் குறித்து “ நேர்மை நிறைந்த வலிமை மிக்க” மோடி மௌனம் காக்கிறார். 2014 - 17 வருடங்களில் , இன்றைய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சரான ஹர்தீப் புரி சிங்கும் அனில் அம்பானியும் எப்ஸ்டீனுடன் அன்றைய ஆளும் கட்சியான பிஜேபியின் ராஜ்ய ரீதியான உறவுகள் , வெளியுறவுக் கொள்கையை தீர்மானிப்பது பற்றி விவாதித்து முடிவெடுத்தார்கள். இதன் அடிப்படையிலேயே இன்று மோடி அரசாங்கம் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கைகள் மோடியால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கான உறுதி செய்யப்பட்ட நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பிறகும் கூட பிரதமர் மோடி மௌனம் காக்கிறார். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. வியாபார உறவுகள் தொடர்ந்த போதும் கூட , தங்கள் நாட்டு மக்களும் உலக மக்களும் தங்களைப் பற்றி கொண்டுள்ள பிம்பம் உடைந்து விடுமோ என்ற அச்சத்தால் , பாலஸ்தீனத்தின...