Skip to main content

Posts

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...
Recent posts

பற்றிப் படரும் தொழிலாளர் போராட்டங்கள்– விடுதலையை நோக்கி!

  தொழிலாளி வர்க்கம் எட்டு மணி நேர வேலைக்கான உரிமையை நிலை நாட்டி 140 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் , இன்று தொழிலாளர்களின் நிலைமைகளோ 200 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய நெருக்கடியை தணித்துக் கொள்ள ஒருபுறம் தொழிலாளர்களின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்தும் அதே வேளையில் , மற்றொருபுறம் சிறிய நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு யுத்தம் தொடுத்து அங்கிருந்து வளங்களைக் கொள்ளையடித்தும், ஆயுதங்களைக் கொண்டு அந்த நாட்டின் மக்களையும், கட்டமைப்புகளையும் அழித்தொழித்து ம் வருகின்றன. மீண்டும் அந்த நாடுகளில் மறு கட்டமைப்புப் பணிகளைச் செய்வதன் மூலமும் , ஆயுத விற்பனை செய்வதன் மூலமும் இலாபங்களைக் குவித்தும் வருகின்றன. இதற்கு . பாலஸ்தீனம் , வெனிசுலா , ஈரான் , கியூபா ஆகியவை சமீபத்திய உதாரணங்களாகும். ஏகாதிபத்திய சக்திகளில் முக்கிய சக்தியான அமெரிக்காவில் , இந்த ஆக்கிரமிப்புப் போர்களுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வுகளுக்கு எதிராகவும் ஆயிர க் கணக்கான தொழிலாளர்கள் நாள் தோறும் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெர...