2012-- ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை போர்களாலும் மோதல்களாலும் வருடத் திற்கு 5 லட்சம் சாதாரண குடிமக்களின் உயிர்கள் பறிபோனதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இதையும் விட அதிகமாகவே பொருளாதாரத் தடையால் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் பல்கலைக்கழகமான பிரவுன் நடத்திய ஒரு ஆய்வு தெளிவுபடுத்தி உள்ளது. இந்தப் பொருளாதாரத் தடைகள் பெரும்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் ஐரோப்பாவாலும் வளரும் நாடுகள் மற்றும் வறுமையில் திணறிக் கொண்டிருக்கும் நாடுகள் மீது திணிக்கப்படுகின்றன. பேராசிரியர் பிரான்சிஸ்கோ ரோட்ரிக்ஸ் , டாக்டர் சில்வியா ரெண்டான் மற்றும் டாக்டர் மார்க் வெய்ஸ்ப்ரோட் ஆகியவர்களால் நடத்தப்பட்ட , " சர்வதேசப் பொருளாதாரத் தடைகளால் பல்வேறு நாடுகளில் ஏற்படும் ' குறிப்பான வயது மரணங்கள் '--- பற்றிய ஆய்வு" 2025-- ஆம் ஆண்டு ' த லேண்ட்செட் குளோபல் ஹெல்த் ' ( The Lancet Global Health ) இதழில் தனது அறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வு 2012 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை ஒரு வருடத்தில் சராசரியாக பொருளாதார நடவடிக்கைகளால் 5, 64, 258 மரணங்கள் ஏற்பட்...
பிப்ரவரி 1- ந் தேதி பாராளுமன்றத்தில் 2026 - 27 க்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் . இந்த நிதி நிலை அறிக்கையை '140 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வரலாற்று பட்ஜெட் ' எனப் பாராட்டியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி . உண்மையில் இந்த நிதிநிலை அறிக்கை அவ்வாறுதான் அமைந்துள்ளதா ? இந்த நிதிநிலை அறிக்கையை முதலாளிகளின் அனைத்து அமைப்புகளும் பாராட்டி வரவேற்றுள்ளன என்பது உண்மைதான் . ஆனால் இதைக் குறை கூறி குறு , சிறு , நடுத்தர முதலாளிகள் விமர்சித்துள்ளனர் என்பதும் , விவசாயிகளின் அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன என்பதும் உண்மை . இவை உணர்த்தும் உண்மை என்னவென்றால் உண்மையில் இந்த நிதிநிலை அறிக்கை , பிரதமர் மோடி கூறுவது போல் , 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கவில்லை என்பதும் பெரும் குழுமங்களின் ( கார்ப்பரேட் ) விருப்பங்களையே பிரதிபலிக்கின்றன என்பதும்தான் உண்மை . விவசாயத் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வ...