தொழிற்சாலைகள் பல நேரங்களில் தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் கூடங்களாக மாறி வருவது தொடர்கதையாகி வருகிறது . அந்த வரிசையில் , திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நடந்துள்ள அம்மோனியா வாயு கசிவு விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது . இலாபத்திற்காக தொழிலாளர்களைப் பலி கொடுக்கும் கார்ப்பரேட் ஆதிக்கத்தின் கொடூர முகத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் உள்ள கன்னிகைபேர் என்ற கிராமத்தில் , கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் செயிண்ட் பீட்டர் & பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் ('St. Peter & Paul Sea Foods Exports ) என்ற ஆலை இயங்கி வருகிறது . கடல் சார்ந்த மீன் , இறால் போன்ற உணவுகளைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த ஆலையின் வருவாய் ஆண்டிற்கு 250 கோடி ரூபாய் அளவில் உள்ளது . தமிழகத்தில் திருவள்ளூர் மட்டுமல்லாது , கடலூர் , ராமநாதபுரம் , காஞ்சிபுரம் , சென்னை , நாகப்பட்டினம் , தூத்துக்குடி , கன்னியாகுமரி , புதுக்கோட்டை போன்ற கடலோர மற்றும...
10.05.2026 அன்று ஹைதராபாத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சி பேரணியில் இந்திய பிரதமர் இந்திய மக்களுக்கு ஏழு வேண்டுகோள்கள் விடுத்தார் ; அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்ய வேண்டும் ; அடுத்த ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் ; பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் ; சமையல் எரிவாயு உபயோகத்தைக் குறைக்க வேண்டும் ; ரசாயன உரப் பயன்பாட்டை 50% குறைக்க வேண்டும் ; வெளிநாட்டுப் பொருள்களை தவிர்த்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்க வேண்டும் ; மேலும் வெளிநாட்டுப் பயணங்களை ஒரு வருடத்திற்கு தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்நியச் செலாவணி இருப்பை அதிகப்படுத்த, பாதுகாக்க இந்த நடவடிக்கைகள் தேவை என்று காரணம் கூறினார். ஆனால் ரிசர்வ் வங்கி கவர்னரும் , நிதி அமைச்சரும் , அமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் நிலைமைகளை ஆராய்ந்து அறிவுறுத்தும் கமிட்டிகளும் , பல்வேறு வகையான நிலைப்பாடு கொண்ட பல பொருளாதார வல்லுநர்களும் , ஊடகங்களும் பொதுமக்களுக்கு மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நாளும் இந்தியா தேவையான அளவு அந்நியச் செலாவணி இருப்பைக் கொண்டிருக்கிறது என்று கூறிக் கொண்டி...