Skip to main content

Posts

Showing posts from December, 2023

சர்வதேச மூலதனத்திற்கு எதிரான வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் போராட்டம்!

வங்கதேசத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி 2023 ல் குறைந்தபட்ச ஊதிய உயர்விற்கான பேச்சு வார்த்தை அரசு, ஆயத்த ஆடை முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர்களுக்கு இடையே  நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மாத ஊதியமாகத் தற்போது பெற்றுவரும் 72 டாலருக்குப் பதிலாக  (அதாவது வங்கதேச ரூபாய் மதிப்பிலான 8300 டாக்காவிலிருந்து) 203 டாலராக (அதாவது 23000 டாக்காவாக) உயர்த்தித்  தரவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர். இதை நிராகரித்த தொழிற்துறை முதலாளிகள் குறைந்தபட்ச ஊதியமாக 113 டாலர் (அதாவது 12500 டாக்காவாக) மட்டுமே உயர்த்தித்  தரமுடியும் எனத் தெரிவித்துள்ளனர்.  முதலாளிகளின் தர முன்வந்த குறந்தபட்ச ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தலைநகரான டாக்கா மற்றும் தொழில்துறை மாவட்டமான காசிப்பூரில் அரசு மற்றும் ஆயத்த ஆடை முதலாளிகளுக்கு எதிராக வீரியமிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். போலிசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். போராட்டத்தில

நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக் குண்டுகள் வீச்சும் முதலாளியக் கட்சிகளின் திசை திருப்புதலும்!

  டிசம்பர் 13 ந் தேதி நாடாளுமன்றத்தில் இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து திடீரெனக் குதித்து வண்ணப் புகைக் குண்டுகளை வீசி நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தனர். ஒட்டு மொத்த நட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தனர். இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பாராளுமன்றத்தின் மீது நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலால் ஒன்பது பேர் உயிரிழந்ததை நினைவு கூர்ந்து, “நாட்டின்  ஒற்றுமையையும் இறையாண்மையையும்” காக்க உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகு, “தேசப் பற்றுள்ள” நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் “மக்களின் நலன்களுக்கான” முக்கியமான விவாதங்களில் ஈடுபட்டிருந்தபோது  இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. “ஜனநாயகக் கோயிலின்” மீது நடந்த இந்த அத்து மீறிய தாக்குதலைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத “வீரம் செறிந்த” நமது உறுப்பினர்கள் அந்த இளைஞர்களைச் சுற்றி வளைத்துத் தாக்கிக் காவலர்களிடம் ஒப்படைத்துத் தங்களுடைய ஜனநாயகக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினர்.  நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக் குண்டுகளை வீசிய இந்த இளைஞர்கள் யார்? தீவிரவாதிகளா? இல்லை பயங்கரவாதிகளா?  அந்த இளைஞர்களில் ஒருவர் 34 வயது கொண்ட மனோரஞ்சன், க

மகான் சிங்: மாபெரும் தொழிற்சங்கத் தலைவர், விடுதலைப் போராளி. மறைக்கப்பட்ட வரலாறு.

  மகான் சிங் (27 டிசம்பர் 1913 --- 18 மே 1973) பிரிட்டிஷ் இந்தியாவில் , முன்பு பாகிஸ்தானின் பகுதியாக இருந்த , பஞ்சாப் மாகாணத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசித்த , குஜ்ரன்வாலா மாவட்டத்தில் கர்ஜாக் என்ற கிராமத்தில் பிறந்தார் . 1927 இல் , பதிமூன்றாவது வயதில் அவரது குடும்பம் கென்யாவில் நைரோபிக்குக் குடியேறியது . அப்போது நைரோபி பிரிட்டிஷின் கிழக்கு ஆப்பிரிக்க ஆட்சிக்காவலின் நிர்வாகத் தலைநகராக இருந்தது . பிரிட்டிஷார் தங்கள் வணிக நலனுக்காக கென்யாவில் மொம்பாசாவிலிருந்து கிசுமு வரை தொடர்வண்டி இருப்புப் பாதையை நிறுவுவதற்காக இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அழைத்துச் சென்றனர் . பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் இந்தியாவிலிருந்த அவர்களுடைய காலனியான கோவாவிலிருந்து கடற்கரை இயேசு கோட்டையை கட்டுவதற்காகத் தொழிலாளர்களை அழைத்துச் சென்றிருந்தனர் . ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் தான் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களால் இரும்புப் பாம்பு என்று அழைக்கப்பட்ட அந்த இருப்புப் பாதையைக் கட்டியமைக்கக் பஞ்சாப்பிலிர