டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வந்ததும் " மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக மாற்றுவேன் " எனக் கூறி உலக நாடுகளின் மீது வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளார் . பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான அளவில் வரிகளை உயர்த்தி உள்ளார் . பல்வேறு நாடுகளுக்கும் 10% முதல் 145% வரை வரிகளை உயர்த்தி உள்ளார் . அமெரிக்காவிற்குப் போட்டியாக இருக்கும் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 145% வரியை ட்ரம்ப் விதித்துள்ளார் ; பிறநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை 90 நாட்களுக்குத் தள்ளி வைத்துள்ளார் ; ஆனால் சீனாவின் மீதான வரிகளை மட்டும் தள்ளி வைக்கவில்லை . அதன் மூலம் சீனாவை வர்த்தக நெருக்கடிக்குள் தள்ளி , அதை வீழ்த்த நினைக்கிறார் . ட்ரம்ப்பின் இந்த அடாவடித்தனமான நடவடிக்கை ஒட்டு மொத்தமாக உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் எனக் கூறி பல நாடுகள் அவருடைய வரிவிதிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரித்துள்ளன . சீனா ட...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்