4.6.2025 புதன்கிழமை அன்று இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 1200 பேராசிரியர்களும் நிர்வாகிகளும், இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்தி வரும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான கொடிய குற்றங்களை எதிர்த்து வெளிப்படையான கண்டனக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இஸ்ரேலின் பல்கலைக்கழகங்களின் தலைவர்களின் சங்கம், பொதுக் கல்லூரிகளின் பேராசிரியர்களின் மன்றம், இஸ்ரேல் விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் கழகம் மற்றும் இஸ்ரேல் ஜனநாயகத்திற்கான கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்தக் கடிதத்தை எழுதி உள்ளனர். மார்ச் மாதத்தில் இருந்து கிடியோன்'ஸ் சேரியட்ஸ் நடவடிக்கை (Operation Gideon’s chariots) என்ற பெயரில் காசாவின் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம் பாலஸ்தீன மக்களைப் பட்டினியில் தள்ளி முற்றிலுமாக அழித்தொழித்து காசாவைத் தூய்மைப்படுத்தும் இஸ்ரேலின் கொள்கையின் வெளிப்பாடாகும் இந்தக் கடிதம் பின் வருமாறு கூறுகிறது: 18.03.2025ல் போர் நிறுத்த விதிகளை இஸ்ரேல் மீறியதில் இருந்து, காசாவில் ஏறத்தாழ 3000 பேர...
27.5.2025 செவ்வாய்க்கிழமை அன்று தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் உதவி வேண்டி இருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் குறைந்தபட்சம் ஐந்து பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் ; 46 பேர் காயமடைந்தனர். பாலஸ்தீனர்களுக்கு மற்ற உலக நாடுகள் அளிக்கும் எந்த உதவியும் கிடைக்காமல் மூன்று மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் உறுதியாகத் தடுத்து வந்த நிலையில் , அமெரிக்காவும் இஸ்ரேலும் அறிவித்த அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கும் மையங்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உணவும் அத்தியாவசியப் பொருள்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குவிந்தனர். ஆனால் ஆய்வாளர்களால் இந்நிகழ்வு படுகொலைக்காகத் திட்டமிட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது. குவட்ஸ் செய்தித் தளத்தின் , (Quds News Network) காசா ஊடக அலுவலகம் , " இன்று ரஃபாவில் நடந்த நிகழ்வு பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கத் திட்டமிடப்பட்ட ஒரு செயலாகும் ; இது முழு அளவிலான போர்க் குற்றமாகும் ; சாதாரண குடிமக்களை--- ஏறத்தாழ 90 நாட்கள் முற்றுகை என்ற பெயரில் பட்டினிக்குள் தள்ளப்பட்டு பலவீனமாக இருந்த மக்களைத் திட்டமிட்டுச் சிறிதும்...