Skip to main content

Posts

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...
Recent posts

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

இயற்கையைச் சூறையாடும் முதலாளிகளும் அதிகாரவர்க்கமும்!

  28.8.25 அன்று பருவநிலை மற்றும் சூழலியல் நீதி க்கான தேசியக் கூட்டமைப்பு , சத்தீஸ்கர் வனத்துறை ,1740 ஹெக்டேர் பரப்பளவு உள்ள ஹேஸ்டியோ காட்டின் அடர்ந்த வனப்பகுதியில் மேலும் அதிக அளவில் நிலக்கரி எடுப்பதற்காக கெண்டே விரிவாக்கப் பகுதிக்கு அனுமதி அளித்ததை வன்மையாக கண்டித்துள்ளது. நிலக்கரி எடுப்பதற்கான இந்தப் பகுதி ராஜஸ்தானின் ராஜ்ய வித்யுத் உட்பாடன் நிகம் லிமிடெட் ( RRVUNL) நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது ; இந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு சுரங்கம் தோண்டும் வேலையை ஒப்படைத்துள்ளது. அளிக்கப்பட்ட 137 ஹெக்டேர் வனப்பகுதியில் - ஹேஸ்டியோ வனத்தின் ஏராளமான வன உயிரினங்கள் நிறைந்த இந்த வனப்பகுதியில் - பார்சா ஈஸ்ட் மற்றும் கந்தா பேசன் ( PEKB) நிறுவனம் நிலக்கரி எடுப்பதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் ஏற்கனவே வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. உடனடியாக அதிகாரப்பூர்வமாக சத்தீஸ்கர் மாநிலத்தின் வனத்துறை அளித்த இந்த அனுமதி நீக்கப்பட வேண்டும் என்று நாம் உறுதிபடக் கூறுகிறோம். "வனப்பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு சட்டபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் , இந்திய வனப்பகுதியை சார்ந்த பழங்குடியினருக...