Posts

புதிய தொழிலாளர் சட்டங்களால் முற்றிலும் சீர்குலைக்கப்படும் தொழிலாளர் உரிமைகளின் ஏழு முக்கியக் கொள்கைகள்

  இலாபத்தையே நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில் , தொழிலாளர்களும் தொழிலாளர்களின் உரிமைகளும் எப்போதும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன . நமது நாட்டில் , ஏராளமான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூடக் கிடைப்பதில்லை . அவர்கள் எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாக , மிகை நேர ஊதியமும் (over time) இல்லாமல் , வார விடுப்பும் இல்லாமல் உழைக்கின்றனர் . இப்போது நிலையான வேலையிடங்களில் , நிலையான அல்லது நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்தத் தொழிலாளர்களே மிகுதியாக இருக்கின்றனர் . தொழிற்சங்க அங்கீகாரம் என்பது குதிரைக் கொம்பாக ஆகிவருகிறது . சமூகப் பாதுகாப்புக்கான பொறியமைவுகள் அதை அடைவதற்கான வழிகளைக் கட்டுப்படுத்துகின்றன , பாகுபாடுகள் காட்டுகின்றன . மேலும் கூடுதலாக , தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் பல்வேறு விதமாக விளக்கங்கள் கொடுக்கக்கூடிய வகையில் பூடகமாகவும் பல்வேறு ஆளுகை வரம்புகள் கொண்டவையாகவும் இருக்கின்றன . சட்டத்தில் இவ்வளவு பலவீனங்கள் இருந்தபோதும் , இருபதாம் நூற்றாண்டில் பலம் வாய்ந்த ஜனநாயகத் தொழிற்சங்கங்கள் தலைமையிலான நீடித்த தொழிலாளர் ...
Recent posts