Skip to main content

நவம்பர் சோசலிசப் புரட்சியின் படிப்பினையிலிருந்து கற்போம்!


ரசியாவில் ஜார் மன்னனைத் தூக்கி எறிந்த 1917 பிப்ரவரி முதலாளியப் புரட்சிக்குப் பிறகு  லெனின் தனது புகழ் பெற்ற  ஏப்ரல் ஆய்வுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:



”ரசியாவில் இப்போதுள்ள சூழ்நிலையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த நாடு புரட்சியின் முதல் கட்டத்திலிருந்து இரண்டாவது கட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதாகும். முதல் கட்டம், பாட்டாளி வர்க்கத்துக்குப் போதுமான வர்க்க உணர்வும் அமைப்பும் இல்லாமையினால் முதலாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை வழங்கியது. இரண்டாவது கட்டம், பாட்டாளி வர்க்கத்தின் கையிலும் உழவர் வர்க்கத்தின் மிகவும் வறிய பிரிவினரின் கையிலும் அதிகாரத்தை         வழங்க வேண்டும்.”
(லெனின்  தொகுப்பு நூல்.24 பக்.22 )



ஓராண்டுக்குப் பிறகு நவம்பர் புரட்சியைத் திரும்பிப் பார்த்த லெனின் பின்வருமாறு எழுதினார்:


 நமது கருத்தின் சரியான தன்மையை புரட்சி மேற்கொண்ட பாதை உறுதி செய்திருக்கிறது. முதலாவது, ’அனைத்து’ உழவர்களையும் ஒருங்கிணைத்து முடியரசுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் மத்தியகாலத்தன்மைக்கும் எதிராக நடத்திய போராட்டம்; இந்த அளவுக்கு முதலாளிய வர்க்க ஜனநாயகப் போக்குடையதாக புரட்சி அமைந்திருந்தது. பிறகு கிராமப் பணக்காரர்கள், குலாக்குகள், கொள்ளை இலாபக்காரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய முதலாளியத்துக்கு எதிராக ஏழை உழவர்கள், அரைப் பாட்டாளிகள் மற்றும் சுரண்டப்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து நடத்திய போராட்டம்; இந்த அளவுக்கு புரட்சி ஒரு சோசலிசப் போக்குடையதாக அமைகிறது. முதல் கட்டத்துக்கும் இரண்டாவது கட்டத்துக்கும் இடையில் ஒரு செயற்கையான சீனச் சுவரை எழுப்ப முயல்வதும் பாட்டாளி வர்க்கத்தின் ஆயத்த நிலைமை, பாட்டாளி வர்க்கம் ஏழை உழவர்களோடு  கொண்டிருந்த ஐக்கியத்தின் அளவு என்பதை விடுத்து வேறு எதனைக் கொண்டும் இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்க முயல்வதும் மார்க்சியத்தை அபாயகரமான வழியில் சிதைப்பதாகும்; அதைக் கொச்சைப்படுத்துவதாகும்; அதற்குப் பதிலாக மிதவாதத்தைக் கொண்டு வருவதாகும்.          
-(லெனின்,தொகுப்பு நூல்..28,பக்.300)


Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட