Skip to main content

Posts

Showing posts from April, 2020

கொடிது கொரானா! அதனினும் கொடிது பட்டினி!

      ’ பசியினால் சாவதைவிட நோய்த் தொற்றுகளால் செத்துப்போனாலும் பரவாயில்லை’ என்கிறார் உத்திரப்பிரதேசத் தொழிலாளி (தீக்கதிர், 30.03.2020). நொய்டாவில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த இவர் சொந்த ஊரான கான்பூருக்கு செல்ல 500 கி.மீ நடந்தே செல்ல வேண்டிய அவல நிலைக்குத்   தள்ளப்பட்டார். மார்ச் 25 முதல் அமலாக்கப்பட்ட முடக்கத்தால் இவர் வேலை பார்த்து வந்த ஜவுளிக்கடையும் மூடப்பட்டது. இதனால் வருமானமின்றி பசியால் வாடிவந்த நிலையில் வேறு வழியின்றிச்   சொந்த ஊருக்குத்   திரும்பினார். போக்குவரத்து வசதி எதுவுமில்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்களோடு இவரும் நடைபயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பினார்.      வேலை செய்து வந்த இடத்தில் பசியால் சாவதைக் காட்டிலும் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் சொந்த ஊரில் சாவதே மேல் என இவர் மட்டும் கூறவில்லை. இடம்பெயர் தொழிலாளர்கள் அனைவரின் நிலையுமே இத்தகையதாகத்தான் உள்ளது.      இந்த நிலை இடம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அன்றாடக் கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையும் இது தான். வேலை இல்லாத காரணத்தால் வருவாய் எதுவுமின்றி எத்தனை நாள் இவர்கள் பட்டினியை எதிர்க் கொள

மக்கள் அனைவருக்கும் உண்மையான குடியுரிமையை உறுதிப்படுத்தும் சோசலிச சமுதாயத்தைப் படைப்போம்!

இந்திய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் 11 ந் தேதி மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடெங்கும் மாபெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மாணவர்களும் இளைஞர்களும் இஸ்லாமிய மக்களும் குறிப்பாகப் பெரும் அளவில் இஸ்லாமியப் பெண்களும் இடதுசாரி அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் நாடு முழுவதும்   போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லி, கொல்கத்தா, சென்னை, கயா, கான்பூர், அலகாபாத், பெங்களூரு என நாட்டின் முக்கிய நகரங்களில் எல்லாம் மக்கள் ஏராளமான அளவில் தொடர்ந்து இரவும் பகலும் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் ஷாகீன்பாக் என்னும் இடத்தில்   டிசம்பர் 15 முதல் மக்கள் இரவும் பகலும் தொடர்ந்து அமர்ந்து இந்தச் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பை அமைதியான வழியில் தெரிவித்து வருகின்றனர். சென்னையிலும் வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடிய மக்கள் மீது போலிஸ் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து, தில்லி ஷாகீன்பாக் வழியில் போராட்டத்தை அப்பகுதி