Skip to main content

Posts

Showing posts from May, 2025

பல்கலைக்கழகங்களைக் கண்டு நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!

  உயர்கல்வி நிறுவனங்களின் மீதும் பல்கலைக்கழகங்களின் மீதும் அதிகரிக்கும் தாக்குதல்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் உள்ளார்ந்த அச்சத்தை உணர்த்துகின்றன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மீது கூறும் விமர்சனங்களும் , கொலம்பியா , ஹார்வர்ட் போன்ற பல்கலைக்கழகங்களின் மீது நடத்தும் தாக்குதல்களும் , கல்வி நிறுவனங்களான ஜவஹர்லால் பல்கலைக்கழகம் , ஹைதராபாத் பல்கலைக்கழகம் , ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீதான பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்துள்ள பாஜக அரசாங்கத்தின் தாக்குதல்களும் கேள்வி எழுப்பும் கல்வி நிறுவனங்களின் மீது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிகரிக்கும் வன்முறைக்குச் சில சான்றுகளாகும். இவை அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடப்பதோடு நிற்கவில்லை ; ஐரோப்பாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களும் மற்ற பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் இதே போன்ற அச்சுறுத்தல்களைத் தினம் தோறும் சந்தித்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் நிதி உதவிகளை நிறுத்துவது , அரசியல் ரீதியான மிரட்டல்கள் , அதிகார வர்க்கத்தின் தொல்லைகள் , அரசாங்கம் மற்றும் சட்ட ...

பயங்கரவாதத் தாக்குதலும் – பாஜகவின் திசைதிருப்பலும்!

ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் "சின்ன கவிட்சர்லாந்து" என அழைக்கப்படும் பைசரன் புல் வெளிப் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் கொடூரமான துப்பாக்கித் தாக்குதலுக்கு இரையாகி 26 அப்பாவி மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அவர்களில் 24 பேர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த பயணிகள். ஒருவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். ஒருவர் பயங்கரவாதிகளின் தாக்குதலிலிருந்த சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற முயற்சி செய்த சையத் அடில் ஹுசேன் ஷா. அவர் குதிரையில் பயணிகளை அழைத்து வந்தவர். இந்தக் கொடூரமான, மிருகத்தனமான செயலுக்கு எதிர்ப்பு முன்னணி (The Resistance Front) என்னும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் தாய் அமைப்பு லஸ்கர் இ- தைபா எனக் கூறப்படுகிறது. உலகிலேயே இராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள இடமாக காஷ்மீர் பகுதி இன்று உள்ளது. காஷ்மீரின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இராணுவம், போலீஸ் ஆகியவற்றின் கண்காணிப்பிலிருந்து யாரும் அவ்வளவு எளிதாகத் தப்ப முடியாது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்தக் கொடூரமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ...