உயர்கல்வி நிறுவனங்களின் மீதும் பல்கலைக்கழகங்களின் மீதும் அதிகரிக்கும் தாக்குதல்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் உள்ளார்ந்த அச்சத்தை உணர்த்துகின்றன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மீது கூறும் விமர்சனங்களும் , கொலம்பியா , ஹார்வர்ட் போன்ற பல்கலைக்கழகங்களின் மீது நடத்தும் தாக்குதல்களும் , கல்வி நிறுவனங்களான ஜவஹர்லால் பல்கலைக்கழகம் , ஹைதராபாத் பல்கலைக்கழகம் , ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீதான பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்துள்ள பாஜக அரசாங்கத்தின் தாக்குதல்களும் கேள்வி எழுப்பும் கல்வி நிறுவனங்களின் மீது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிகரிக்கும் வன்முறைக்குச் சில சான்றுகளாகும். இவை அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடப்பதோடு நிற்கவில்லை ; ஐரோப்பாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களும் மற்ற பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் இதே போன்ற அச்சுறுத்தல்களைத் தினம் தோறும் சந்தித்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் நிதி உதவிகளை நிறுத்துவது , அரசியல் ரீதியான மிரட்டல்கள் , அதிகார வர்க்கத்தின் தொல்லைகள் , அரசாங்கம் மற்றும் சட்ட ...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்