4.6.2025 புதன்கிழமை அன்று இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 1200 பேராசிரியர்களும் நிர்வாகிகளும், இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்தி வரும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான கொடிய குற்றங்களை எதிர்த்து வெளிப்படையான கண்டனக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இஸ்ரேலின் பல்கலைக்கழகங்களின் தலைவர்களின் சங்கம், பொதுக் கல்லூரிகளின் பேராசிரியர்களின் மன்றம், இஸ்ரேல் விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் கழகம் மற்றும் இஸ்ரேல் ஜனநாயகத்திற்கான கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்தக் கடிதத்தை எழுதி உள்ளனர். மார்ச் மாதத்தில் இருந்து கிடியோன்'ஸ் சேரியட்ஸ் நடவடிக்கை (Operation Gideon’s chariots) என்ற பெயரில் காசாவின் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம் பாலஸ்தீன மக்களைப் பட்டினியில் தள்ளி முற்றிலுமாக அழித்தொழித்து காசாவைத் தூய்மைப்படுத்தும் இஸ்ரேலின் கொள்கையின் வெளிப்பாடாகும் இந்தக் கடிதம் பின் வருமாறு கூறுகிறது: 18.03.2025ல் போர் நிறுத்த விதிகளை இஸ்ரேல் மீறியதில் இருந்து, காசாவில் ஏறத்தாழ 3000 பேர...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்