MELS இணைய வழிப் பயிலரங்கில் லெனின் எழுதியுள்ள ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் பற்றி தோழர். அ.கா.ஈஸ்வரன் அறிமுக உரை ஆற்றியுள்ளார் ( https://senthalam.com/1402 ) . மார்க்சியத்தைப் பற்றிய அவருடைய தவறான புரிதலை விளக்கி “சோசலிசப் புரட்சி ஒரு செயல்தந்திரம்” - அ.கா.ஈஸ்வரன் கண்டுபிடித்துள்ள புதிய கோட்பாடு! என்னும் கட்டுரையை வெளியிட்டோம் ( https://senthazhalmagazine.blogspot.com/2025/06/blog-post_30.html ) . ஆனால், எமது விமர்சனத்தை புரிந்துக் கொண்டு பதிலளிக்காமல் தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கின்றார். எமது கட்டுரையின் மீது அ.கா.ஈஸ்வரன் எழுதிய மறுப்புரைக்கான பதில் தான் இந்தச் சிறிய பதிவு. நீங்கள் (அ.கா.ஈஸ்வரன்) கூறுவது போல ரசியாவில் அக்டோபரில் லெனின் சோசலிசப் புரட்சியை நடத்தியதற்குக் காரணம் ரசியாவில் தோன்றிய இரட்டை ஆட்சிமுறை காரணமல்ல. முதல் கட்டத்தில் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்தது. அதனால் முதலாளியப் புரட்சி கட்டம் முடிவுற்றது. அதன் காரணமாகவே சோசலிசப் புரட்சி திட்டத்தை லெனின் முன் வைத்தார். அதனைத் தெளிவாகவே லெனின் கீழ்க்காணும் வரிகளில் குறிப்பிடுகிறார். “ இன்...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்