Skip to main content

Posts

Showing posts from July, 2025

வெடிக்கும் பட்டாசு ஆலைகளும் பறிக்கப்படும் மனித உயிர்களும்!

  இந்தியாவின் பட்டாசு உற்பத்தி மையமாக தமிழ்நாட்டில் உள்ள சிவகாசி நகரம் திகழ்கிறது . மொத்த பட்டாசு உற்பத்தியில் 80% முதல் 90% வரை சிவகாசியில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது . இந்தியாவில் உறபத்தி செய்யப்படும் பட்டாசுகளின் மதிப்பு தோராயமாக ரூ . 6,000 கோடி என்று மதிப்பிடப்படுகிறது . வெளிநாடுகளுக்கும் கணிசமான அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது . சுமார் 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அதிக அளவு அமெரிக்கா , நேபாளம் , பூட்டான் ஆகிய நாடுகளுக்கு   ஏற்றுமதி செய்யப்படுகிறது .  ஜூலை 1 ஆம் தேதி , விருதுநகர் மாவட்டம் , சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர் . இதனைத் தொடர்ந்து , மூன்று வாரங்களில் ஜூலை 22 ஆம் தேதி சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . ஒவ்வொரு சம்பவமும் உழைக்கும் மக்களின் உயிர்களைப் பலி வாங்கி , அவர...

ஏன் வேண்டும் சோசலிசம்? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

  ( ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகப்புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் . இந்தக் கட்டுரை மன்த்லி ரிவ்யூ முதல் இதழில் (1949 மே ) முதன்முதலாக வெளியிடப்பட்டது . அது பின்னர் மன்த்லி ரிவ்யூ இதழில் ஐம்பதாவது ஆண்டு (1998 மே இல் ) வெளியிடப்பட்டது .) பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சனைகளில் நிபுணத்துவம் பெற்றிராத ஒருவர் சோசலிசம் பற்றிக் கருத்துகளைத் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா ? பல காரணங்களுக்காக அது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றே நான் நம்புகிறேன் . இந்த விடயத்தை நாம் முதலில் அறிவியல் அறிவின் கண்ணோட்டத்திலிருந்து கருத்தில் எடுத்துக்கொள்வோம் . வானவியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் எந்த சாராம்சமான முறைமையியல் வேறுபாடுகளும் இல்லை என்று தோன்றலாம் . நிகழ்வுகளுக்கு இடையில் உள்ள பரஸ்பரத் தொடர்பை முடிந்தவரை தெளிவாகப் புரிந்துகொள்ளச் செய்வதற்காக , இந்த நிகழ்வுகளின் சுற்றுவட்டக்குழு பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதிகளைக் கண்டுபிடிக்க இரு துறைகளிலும் உள்ள அறிவியலாளர்கள் முயற்சி செய்கிறார்கள் . ஆனால் மெய்நிலையில் , அப்படிப்பட்ட முறைமையியல...