Skip to main content

Posts

Showing posts from August, 2025

வீழ்ந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்தியம்!

  போர் முடிந்தவுடன் முதலாளித்துவம் தனது இருத்தலுக்கான மிகச்சிக்கலான நிலைமையை எதிர்கொண்ட உடன் , அது அந்த நிலைமையைச் சமாளிக்க இரட்டைத் தந்திரங்கள் கொண்ட திட்டத்தை தேர்ந்தெடுத்தது‌. முதலாவது, அது “சிவப்பு அபாயம்” என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்பியது; இது எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லாமல் , உள்நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தை அச்சுறுத்தி முதலாளிய அமைப்பை ஒப்புக்கொள்ள வைக்கும் திட்டமாகும். இரண்டாவது, வேறு வழி இன்றி தனது செயல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர நிர்ப்பந்திக்கப்பட்டது; அவற்றில் நான்கு கவனத்திற்கு உரியவை; அவை, முந்தைய காலனி வடிவத்தை அகற்றல், அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியான ஆட்சி நிர்வாகத்தை அமைப்பது , பெரும் திரளான வேலை வாய்ப்பின்மையைக் குறைக்க “வேண்டலை மேலாண்மை செய்வது (Demand management)” {வேண்டலை அதிகரிக்க மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவது –(மொ.பெ).}என்ற கெய்னிசிய கருத்தாக்கதை ஏற்றுக் கொள்வது மற்றும் மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை எல்லா இடங்களிலும், குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில், செயல்படுத்துவது ஆகியவையாகும். இந்தச் சீர்திருத்தங்கள்...

போலிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் அம்பலப்படுத்தும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

  சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள் , பணிநிரந்தரம் , ஊதியத்தைக் குறைக்க கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் சென்னை மாநகராட்சி இயங்கும் ரிப்பன் மாளிகை முன்பு ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . தொழிலாளர்களின் உறுதியான போராட்டம் தமிழகம் முழுவதும் மக்களின் கவனத்தைப் பெற்றதோடு போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகச் செய்தது . முதலாளித்துவ ஒட்டுக்கட்சிகளும் தமது பங்கிற்கு போராட்டம் நடந்த இடத்திற்கு வருகை தந்து ஆதரவைத் தருவதாக வெற்று வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து சென்றனர் . இத்தனை ஆண்டு காலம் மாநகராட்சியின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் தற்காலிகத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தவர்களை பணிநிரந்தரம் செய்யாமல் , ராம்கி என்னும் தனியார் நிறுவனத்திடம் தூய்மை செய்யும் பணியை ஒப்படைத்ததோடு தொழிலாளர்களையும் அந்தத் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்த்து விட்டது திராவிட மாடல் அரசு . தங்களுடைய எதிர்கால வாழ்வினைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டக்களத்தில் இருந்த தொழிலாளர்களின் உறுதித்தன்மையைப் பார்த்து என்ன செய்வதென்ற...

தூய்மைப் பணியாளர்களின் வயிற்றில் அடிக்கும் “திராவிட மாடல்” அரசு!

சென்னை , தமிழ்நாட்டின் தலைநகர் 86 இ லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகரமாக இருப்பதால் தினமும் கொட்டப்படும் ஏராளமான குப்பைகளைச் சுத்தம் செய்து நகரம் தூய்மையாக இருக்க தூய்மைப் பணியாளர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் . தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியை நிறுத்தி விட்டால் “ சிங்காரச் சென்னை ” சீரழிந்து விடும் . ஆனால் , இத்தகைய அத்தியாவசியப் பணிகளில் பணியாற்றும் மக்களின் வாழ்வாதாரமும் உரிமைகளும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பதை நாம் காண்கிறோம் . இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வந்துள்ளனர் . ஆனால் , அவர்களின் கோரிக்கைகளுக்கு   அரசு எப்பொழுதும் செவி சாய்த்ததில்லை . தினசரியும் , பண்டிகைக் காலங்களிலும் , மழை காலங்களிலும் , கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களின் நலனுக்காக வீதியில் இறங்கிச் சுத்தம் செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் . ...