நோபல் பரிசுக் குழு உலக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஆதரவுடன் வெனிசுலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான திட்டங்களில், செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மரியா கொரினா மகடோவுக்கு வழங்கி உள்ளது. அதன் மூலம் அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலாவின் மீது போர் தொடுப்பதற்காக வழி செய்து உள்ளது. மரியா கொரினா வெனிசுலா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான ஏராளமான சதிகளில் ஈடுபட்டார்; ஆனால் அவை தோல்வியில் முடிந்தன ; வெனிசுலாவின் தெருக்களில் பல வன்முறையான கலவரங்களைத் தூண்டி ஏராளமானவர்களின் மரணத்துக்கு வழி வகுத்தார் ; வன்மம் நிறைந்த தனது அரசியல் வெற்றிக்கு நிதி பெறுவதற்காக தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களை ட்ரம்பின் "மீண்டும் அமெரிக்காவை சிறப்பானதாக்குவோம்" என்ற அடிப்படையில் ஒன்றிணைந்துள்ள மகா கோடீஸ்வரர்களுக்கு வழங்கத் திட்டமிட்டு செயல் புரிந்து வருகிறார். " அமைதியான முறையில் தனது நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முயன்றார்" என்று நோபல் பரிசுக் குழு அவரைப் பாராட்டியது. ஆனால் மரியா கொரினா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வெனிசுலாவின் மேல் ராணுவ நட...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்