Skip to main content

நோபல் அமைதிப் பரிசு -வெனிசுவேலாவின் மீதான போருக்கு!

 

நோபல் பரிசுக் குழு உலக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஆதரவுடன் வெனிசுலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான திட்டங்களில், செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மரியா கொரினா மகடோவுக்கு வழங்கி உள்ளது. அதன் மூலம் அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலாவின் மீது போர் தொடுப்பதற்காக வழி செய்து உள்ளது. மரியா கொரினா வெனிசுலா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான ஏராளமான சதிகளில் ஈடுபட்டார்; ஆனால் அவை தோல்வியில் முடிந்தன; வெனிசுலாவின் தெருக்களில் பல வன்முறையான கலவரங்களைத் தூண்டி ஏராளமானவர்களின் மரணத்துக்கு வழி வகுத்தார்; வன்மம் நிறைந்த தனது அரசியல் வெற்றிக்கு நிதி பெறுவதற்காக தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களை ட்ரம்பின் "மீண்டும் அமெரிக்காவை சிறப்பானதாக்குவோம்" என்ற அடிப்படையில் ஒன்றிணைந்துள்ள மகா கோடீஸ்வரர்களுக்கு வழங்கத் திட்டமிட்டு செயல் புரிந்து வருகிறார். 

"அமைதியான முறையில் தனது நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முயன்றார்" என்று நோபல் பரிசுக் குழு அவரைப் பாராட்டியது. ஆனால் மரியா கொரினா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வெனிசுலாவின் மேல் ராணுவ நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தார்.  

தனது நாட்டை அழிக்க இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்த ஓராண்டு காலம் கழித்து, அமெரிக்கா லிபியாவின் மீது போர் தொடுத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அதே முறையில் தனது நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வெனிசுலாவின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று கேட்டார். 

வாஷிங்டனின் தனியார்மயப்படுத்தும் திட்டத்தையும் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதிகளைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் எதிர்க்கும் இலத்தின் அமெரிக்க நாடு எதுவானாலும் பயங்கரவாதத்தையும் ராணுவ முற்றுகையையும் ஏற்படுத்த அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையின் (CIA) நிதி ஆதரவு பெற்ற மார்க்கோ ரூபியோவின் கைப் பொம்மை மகடோ. அது மட்டுமல்ல, மகடோ வெனிசுலாவின் ஜனாதிபதியாக மிராஃபோளோரெஸ் அரண்மனை - ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் - ஆட்சி அதிகாரத்திற்கு ஒருவேளை வந்து விட்டால், வெனிசுலாவின் முன்னாள் தலைவர் ஹ்யூகோ சாவெஸின் மக்கள் நல திட்டங்களின் எச்சங்கள் கூடத் தெரியாமல் அவற்றை முழுவதுமாக வேரோடு அழித்து விடுவார். சிலியின் சர்வாதிகாரியாக இருந்த அகஸ்ட்டோ ஜோஸ் ரமோன் பினோசெட்டின் பெண் வடிவ சர்வாதிகாரி போல இருப்பார். 

மகடோ அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வெனிசுலா அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக வேண்டிக் கொண்டிருக்கின்றார். இதனால் ஏராளமான மக்கள் வெனிசுலாவிலிருந்து அலையலையாக அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார்கள்; இதனால் உள்நாட்டு அமெரிக்கர்களின் கோபத்திற்கு உள்ளானார்கள்; இது ட்ரம்ப் பதவிக்கு வர வழி வகுத்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புலம்பெயர்ந்த வெனிசுலா மக்களை எல் சல்வடாரின் சித்திரவதை முகாம்களுக்கு இந்த ஆண்டு வலுக்கட்டாயமாக அனுப்பியபோது எதிர்பார்த்தபடியே வெனிசுலாவில் தற்போது இருக்கும் ஆட்சியை கவிழ்க்கத் தனக்கு நிதி ஆதரவு தரும் ட்ரம்ப்புக்கு ஆதரவாக மகடோ இருந்தார். 

ஆகவே, மகடோவுக்கு உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுப்பது வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ட்ரம்புக்கு மிகப் பிரமாகாசமான பச்சை விளக்கு காட்டுவது போல ஆகும். மேலும், இந்த முடிவு மேற்கு உலக பேரரசின் மென்மையான அதிகாரக் கருவியாக நோபல் குழு இருக்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒபாமா முதல்முறையாக பதவிக்கு வந்த ஆரம்பத்தில் இந்தக் குழு அவருக்கு அமைதிப் பரிசைக் கொடுத்தது; அதன் மூலம் லிபியாவை மிகக் கொடூரமாக அழிப்பதற்கும், இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது போர் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும், காசாவை அழிப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அவருக்கு அளவில்லாத சட்டபூர்வமான ஆதரவை வழங்கியது. 

மகடோவின் அரசியல் வாழ்க்கையில் வாஷிங்டனின் ஆதரவும் வழிகாட்டுதலும் இல்லை என்றால் எதுவும் நடக்காது; இந்த நிலையில் நோபல் பரிசு குழுவின் இந்த முடிவானது நார்வேயின் ஆஸ்லோவில் துவங்கிய சதி வெனிசுலாவில் ஒரு போர் நடக்க வழிவகுக்கும். 

ஆங்கிலத்தில்: மேக்ஸ் ப்ளூமென்தால்

தமிழில்: சூர்யா

 

ஆசிரியர் பற்றிய குறிப்பு:

மேக்ஸ் ப்ளூமென்தால் பல பரிசுகளைப் பெற்ற பத்திரிக்கையாளர் ஆவார். அவர் Republican Gomorrah, Goliath, The fifty one day war மற்றும் The management of Savagery உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்; அவர் ஏராளமான கட்டுரைகளை பிரசுரித்துள்ளார்; ஏராளமான வீடியோ பதிவுகளையும், Killing Gaza உள்ளிட்ட ஏராளமான ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். ப்ளூ மென்தால் The Grayzone இணையதளத்தை அமெரிக்காவின் திட்டமிட்ட போர்களையும் அபாயகரமான உள்நாட்டுப் போராட்டங்களை அடக்க அதன் எதிர்வினைகளையும் வெளிச்சமிட்டு காட்டுவதற்காகத் துவங்கினார். அவரை Twitter at @Maxblumenthal வலைதளத்தில் தொடர்பு கொள்ளலாம்

 நன்றி: Monthly Review online

Comments

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...