Skip to main content

இலஞ்சத்தின் மீதும் ஊழலின் மீதும் கட்டமைக்கப்பட்டுள்ள முதலாளிய வர்க்கத்தின் ஆட்சி

 


ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருவதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜக கட்சி 2024-2025 நிதி ஆண்டில் மட்டும் முதலாளிகளிடமிருந்து 6088 கோடி ரூபாய்களை தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது. 2023-2024 நிதி ஆண்டில் அது முதலாளிகளிடமிருந்து பெற்ற தேர்தல் நிதி 3967 கோடி ரூபாய்கள். தேர்தல் பத்திரம் மூலம் நிதி வசூலிப்பது சட்ட விரோதமானது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும் தேர்தல் அறக் கட்டளைகள் என்ற அமைப்புகளின் மூலம் முதலாளிகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்து வருகின்றனர். அவை மட்டுமல்லாமல் தனி நபர்கள் மூலமாகவும் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்று வருகின்றன.

2023-2024 நிதி ஆண்டில் 1129 கோடி ரூபாயைத் தேர்தல் நிதியாகப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 2024-2025 நிதி ஆண்டில் 522.13 கோடி ரூபாயைத் தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது. இதை விட 12 மடங்கு அதிகமாக பாஜக பெற்றுள்ளது. ஆட்சியில் உள்ள கட்சிக்குத் தேர்தல் நிதி அளிப்பதன் மூலம்தானே முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிக்கும் ஒப்பந்தங்களையும் இலட்சக்கணக்கான ரூபாய் மானியங்களையும் அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். முதலாளிகளிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் பணத்தை வாரி இறைத்து மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமரும் இவர்கள் முதலாளிகளின் ஏஜண்டுகளாகச் சேவை செய்கின்றனர்; முதலாளிகளுக்குத் தேவையான சட்டங்களை, மக்கள் விரோதச் சட்டங்களை, பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றனர். நிதி அளிக்கும் முதலாளிகளுக்குச் சலுகை காட்டுகின்றனர். மக்களுடைய வரிப் பணத்திலிருந்து இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மானியமாக அளிக்கின்றனர்; முதலாளிகளுடன் சேர்ந்து இவர்களும் அவற்றில் கொள்ளை அடிக்கின்றனர்.

முதலாளிகளிடமிருந்து பெறும் இலஞ்சத்தை தேர்தல் நிதி என்ற பெயரில் சட்டபூர்வமாக்கி உள்ளனர் இந்த முதலாளிகளின் ஏஜண்டுகள். இலஞ்சத்தின் மீதும் ஊழலின் மீதும் கட்டப்பட்டுள்ள இந்த அமைப்பைத்தான் ஜனநாயக ஆட்சி என்று இந்த முதலாளியக் கட்சிகளும் அவர்களின் ஊதுகுழல்களான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தம்பட்டம் அடித்து வருகின்றன.

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

“சோசலிசப் புரட்சி ஒரு செயல்தந்திரம்” - அ.கா.ஈஸ்வரன் கண்டுபிடித்துள்ள புதிய கோட்பாடு!

MELS இணைய வழிப் பயிலரங்கில் லெனின் எழுதியுள்ள ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் பற்றி தோழர். அ.கா.ஈஸ்வரன் அறிமுக உரை ஆற்றியுள்ளார். அந்த உரையில் ஒரு புதிய கோட்பாட்டை அவர் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். ஈஸ்வரன் நிறுவ விரும்பும் புதிய கோட்பாடு என்ன? ‘ஒரு நாட்டில் முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும் அங்கு சோவியத் அதிகாரம் இணையாக நிலவும்போதே சோசலிசப் புரட்சியை நடத்த வேண்டும். இரட்டை ஆட்சிமுறை என்ற பிரத்யேக நிலைமை ரசியாவில் நிலவியதால்தான் லெனின் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைத்தார். இந்தியாவில் இரட்டை ஆட்சியும் இல்லை. உழைப்பாளர்களின் சோவியத்தும் இல்லை. சோவியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. இரட்டை அதிகார அமைப்பு நிலவாவிட்டால் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைக்க முடியாது’ என்பதுதான் அவருடைய புதிய கோட்பாடு. சோசலிசப் புரட்சி பேசுபவர்கள் லெனின் தனது ஆய்வுரைகளில் கூறியுள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புகின்றனர் என்கிறார் அவர். உண்மையில் தானும் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புவது அவர்தான் என்ப...