Skip to main content

Posts

Showing posts from September, 2019

நீம் (NEEM) இளைஞர்களின் வளர்ச்சிக்கா? முதலாளிகளின் சுரண்டலுக்கா?

நீம் ( NEEM - National Employment Enhancement Mission) திட்டம் கடந்த 2013-ல் காங்கிரஸ் அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. 2017ல் பாரதிய ஜனதா அரசு அதில் பல மாற்றங்களைச் செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.             ‌ பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து விட்டு வரும் இளைஞர்களுக்குத்   தேவையான   தொழில்நுட்பத்   திறன் இல்லை என்றும், அதனால் அவர்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களில்    வேலை கிடைப்பதில்லை என்றும்,‌ ஆகையால் அவர்களுக்கு தேவையான தொழில்நுட்பத் திறனை வழங்கி அதன் மூலம் அவர்களை வேலைக்குத் தயார் செய்வதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. அதற்காக    படித்து முடித்து விட்டு வரும் இளைஞர்களுக்கு நிறுவனங்கள் மூன்று ஆண்டுகள் பயிற்சி அளிக்க வேண்டும் என இத்திட்டம் கூறுகிறது. உண்மையில் இந்தத் திட்டம் இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்குகிறதா? ‌             உண்மையில் இளைஞர்களின் நலன் மீது இந்த அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் படிக்கும் காலத்திலேயே கல்வி தகுதிக்கேற்ப தொழில்நுட்பப் பயிற்சி அளித்து அவர்களை வேலைக்குத் தயார்படுத்தியிருக்க வேண்ட

முதலாளிய சமூகமும் வேலையில்லாத் திண்டாட்டமும்

     இந்த ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள 459 பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 48% இடங்களே நிரம்பியுள்ளன. அதாவது மொத்தம் உள்ள இடங்கள் 1,67,000. அவற்றில் சுமார் 80,000 இடங்களே நிரம்பியுள்ளன. ஏன் இந்த நிலை?      தமிழ் நாட்டில் முன்பு 550 பொறியியல் கல்லூரிகளுக்கும் மேல் இருந்தன. அவை வருடம்தோறும் சுமார் இரண்டு இலட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கி வேலைச் சந்தையில் குவித்தன. பட்டதாரிகளின் எண்ணிக்கை குவிந்ததால், வேலைக்கான போட்டி அதிகரித்தது. ஐ.டி.. கம்பனி முதலாளிகளுக்கும் இதரத் தொழில்துறை முதலாளிகளுக்கும்   குறைந்த சம்பளத்தில் பொறியியல் பட்டதாரிகள் கிடைத்தனர். ரூபாய் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் எனச் சம்பளம் இருந்த இடத்தில் பத்தாயிரத்திற்கும் பதினைந்தாயிரத்திற்கும் வேலை செய்ய வேண்டிய நிலைக்குப் பட்டதாரிகள் தள்ளப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானப் பட்டதாரிகளுக்கு அந்த வேலைகள் கூடக் கிடைக்கவில்லை; படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேலைகளுக்கும், மிகக் குறைந்த சம்பளத்திற்கும் கூடச் செல்ல வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.      இதன் காரணமாகப் பொறியியல் படிப்புக்கான மதிப்பு சமூகத்தில்

ஜனநாயக விரோத, உழைக்கும் மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கை வரைவு

உலக முதலாளித்துவத்தின் புதிய தாராளவாதம் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளைத் தொடர்ந்து 1991- இலிருந்தே கல்வியில் தனியார்மயமாக்கலும் வணிகமயமாக்கலும் அடுத்தடுத்து வந்த அரசாங்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன . அரசுப் பள்ளிகள் , கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான அரசு நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு , உள்நாட்டு , அயல்நாட்டு தனியார் முதலீடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது . உலகவங்கியின் அழுத்தத்தால் கல்விக்கான ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டு வருவதன் விளைவாக பள்ளிகள் மூடப்படுகின்றன . ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது . பொதுப்பள்ளி , அருகாமைப் பள்ளித் திட்டங்கள் முடக்கப்படுகின்றன . அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது .      இந்நிலையில் தான் பா . ச . க . அரசு புதிய கல்விக் கொள்கை வரைவினை இந்திய மக்கள் முன்பு விவாதத்திற்கு வைத்துள்ளது . இந்தக் கல்விக் கொள்கை வரைவு புதிய தாராளவாதக் கொள்கையை இந்துத்துவாச் சித்தாந்தத்துடன் இணைக்கிறது . பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மொழிகள் பேசும் மக்களிடையே ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே