Skip to main content

Posts

Showing posts from July, 2020

அரசு: வர்க்க ஆட்சியை பாதுகாப்பதற்கான ஒரு கருவி

  பால் டிஅமேட்டோ தமிழில்: நிழல்வண்ணன்   தற்போதைய அரசாங்கத்தின் கட்டமைப்புக்கள் முதலாளித்துவத்தின் கீழ் வளர்ந்துள்ளவை; அவை முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கபட்டவையாகும்.     “நவீன அரசின் நிர்வாகத் தலைமை என்பது ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுவான விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவாகும்” என்று கம்யூனிஸ்டு அறிக்கையில் கார்ல் மார்க்சும் பிரடெரிக் எங்கல்சும் எழுதுகின்றனர்.   நவீன அரசு என்பது மேலாதிக்க வர்க்கத்தின் – பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் – அரசாகும். உண்மையில் அரசு என்பது அதன் தோற்றத்திலிருந்தே மேலாதிக்க வர்க்கத்தின் அரசாகவே இருந்து வந்துள்ளது, மேலும் அதன் முதன்மையான நோக்கம் அந்தக் குறிப்பிட்ட வர்க்கத்தின் ஆட்சியைக் காப்பாற்றுவதே ஆகும் என்று எங்கல்ஸ் வாதிடுகிறார்.   அரசு என்பது வர்க்கப் பகைமைகளைத் தடுத்துநிறுத்தி வைக்கும் தேவையிலிருந்து தோன்றியது மட்டுமின்றி, வர்க்கங்களிடையே நடந்த மோதலிலேயே தோன்றியதால், அது இயல்பாகவே பொருளாதார ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த ஆளும் வர்க்கத்தின் அரசாகவே இருக்கிறது, அது அதன் சாதனங்கள் மூலம் அரசியல்ரீதியாகவும

முதலாளிய வர்க்க ஆட்சியின் அடியாளான போலிசும் அதைக் காப்பாற்றும் முதலாளியக் கட்சிகளும்!

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை ஒட்டிக் காவல் சித்ரவதைக்கு எதிரான ஒரு கூட்டியக்கம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தி,மு.க., ம.தி.மு.க. சிபிஐ, சிபிஎம் உட்பட 24 அரசியல் கட்சிகளும், வெள்ளையனின் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை உட்பட   16   அமைப்புகளும், தியாகுவின் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உட்பட 30 இயக்கங்களும் இணைந்துள்ளதாகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் தியாகு என்றும்   தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க. ம.தி.மு.க. போன்ற முதலாளிய ஆளும் கட்சிகள்   காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தில் இணைந்திருப்பது அல்லது ஒருங்கிணைப்பாளர்   தியாகு அவற்றை இணைத்திருப்பது வினோதமான நிகழ்வாகும். தி.மு.க. காவல்துறையின் சித்ரவதைக்கு எதிரான கட்சியல்ல. அதன் வரலாறு அதை மெய்ப்பிக்கிறது. அது ஆட்சியில் இருந்த போதெல்லாம் காவல்துறையின் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. மக்களின் நினைவுகளுக்கு அவற்றைக் கொண்டு வருவது அவசியம். கருணாநிதி ஆட்சியில் 1970ல் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது போலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.   பெருமாநல்லூரில் மூன்று விவசாயிகளைக் கொன