Skip to main content

Posts

Showing posts from September, 2022

சிறுபான்மை மதவாதத்தைப் பெரும்பான்மை மதவாதத்தால் ஒழிக்க முடியாது!

  செப்டம்பர் 22ந் தேதி தேசியப் புலனாய்வு அமைப்பும் (NIA) அமலாக்கத் துறையும் போலிசும் இணைந்து இந்திய ஒன்றியம்   முழுவதும்   பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (popular Front of India), இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI)   ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், ஊழியர்கள் என 109 பேரைக் கைது செய்துள்ளது. மத வெறியைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்துகின்றன; உடற்பயிற்சி என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் மத வெறியையும் வன்முறை எண்ணங்களையும் உருவாக்குகின்றன; நாட்டுக்கு எதிராகச் சதி செய்கின்றன; அந்நிய நாடுகளிலிருந்து இரகசியமாகப் பணம் வாங்கி அதை நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்துகின்றன ஆகிய காரணங்களுக்காக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசின் புலனாய்வு நிறுவனமும் போலீசும் கூறுகின்றன.   மத வெறுப்பைத் தூண்டுவது, மத அடிப்படையில் கலவரங்களைத் தூண்டுவது, தம்மைக் கடுமையாக விமர்சிக்கும் ஜனநாயக சக்திகளைக் கொலை செய்வது, அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறுவது ஆகிய செயல்களில்   ஆர்.எஸ்.எஸ்ஸும், சங்கப் பரிவாரங்களும் கூட ஈடுபட்டு வருகின்றன. ஆனால் தேசியப் புலானாய்வு நிறுவனம...

பார் சிரிக்கும் பாராளுமன்ற “ஜனநாயகம்!”!

  பா.ஜ.க.விடமிருந்து பாராளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக கன்னியாகுமரியிலிருந்து   காஸ்மீர் வரையிலான   “ பாரதத்தை ஒன்றிணைக்கும் நடைபயணத்தை”   காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தொடங்கிய சில நாட்களிலேயே, கோவாவில் அவருடைய கட்சியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மகிமையை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளனர். செப்டம்பர் 14 ஆம் தேதி 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைவதற்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்- ஐ சந்தித்தனர் கோவாவின் சட்டசபையில் காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்த 11 பேர்களில் 8  பேர் பா.ஜ.க.விற்குத் தாவியுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்து விட்டனர். மத்தியப் பிரதேசம், மகாராஸ்டிரம் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு பா.ஜ.க., தனது பண பலத்தின் மூலம் “ஜனநாயகத்தை” மீண்டும் ஒரு முறை பலமாக நிலைநாட்டியுள்ளது. இதில் வியப்பு என்னவென்றால் கட்சி தாவிய உறுப்பினர்கள் அனைவரும் வேட்பாளராக நிற்கும்போது வெற்றி பெற்றால் கட்சி தாவ மாட்டோம் என இந்துக் கோவில்களிலும்   கிருத்துவத் திருக்கோவில்களிலும் இஸ...

ஓ.என்.ஜி.சி.க்கு ஆதரவான தொழிற்சங்கங்களின் போராட்டமும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வும்!

ஓ . என் . ஜி . சியைக் ( எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம்)  காப்போம் ! ஓ . என் . ஜி . சி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பாதுகாப்போம் என்ற பெயரில் ஏஐடியூசி மற்றும் சிஐடியூ தலைமையில் விவசாயிகள் - தொழிலாளர்கள் ஒற்றுமைப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஒன்று  கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி திருவாரூரில் நடத்தப்பட்டு  இறுதியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றும் அளிக்கப்பட்டது தலைப்பை பார்த்தால் தொழிலாளர்கள் - விவசாயிகள் ஒற்றுமையை வலியுறுத்துவது போன்றும் , அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவே ஓ . என் . ஜி . சியின் செயல்பாடுகள் அவசியம் என்பது போலவும் உள்ளது . ஆனால் , இத்தகைய ப் போலியான முழக்கத்தின் மூலம் இந்த இரண்டு தொழிலாளர் அமைப்புகளும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் தாமாகவே அம்பலப்பட்டு நிற்கின்றன . இந்தப் போராட்டத்தில் இவர்கள் முன்வைக்கும் பிரதான கோரிக்கைகள் என்ன ? பொதுத் துறையில் இயங்கும் ஓ . என் . ஜி . சி.யின் செயல்பாடுகள் தடைபடாமல் இருக்க வேண்டும். அதன் மூலம் தொழிலாளர்கள் - விவசாயிகள் வர்க்கம் செழிப்போடு இருக்க முடியும் என்பது தான் . இதற்காக அவர்கள் ஓ . என் . ஜி . சியின் ...