Skip to main content

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

 

உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை, உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார். ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார். இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல, மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும். தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே  முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும். இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர். தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்குகூட்டப்படும் மதிப்பைகுறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டக் கூடும் என்பதை அவர்கள் எப்போதாவது ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தச் சித்திரம் என்பது சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை பற்றியதாகும். தனது தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் குறைத்துக் கொடுக்க முயற்சிக்கும் பேராசை பிடித்த  முதலாளிகளை தடையில்லாச் சந்தை கவனித்துக்கொள்ளும் என அவர்கள் உறுதியளிக்கின்றனர். தொழிலாளர்கள் அப்படிப்பட்ட வேலையைக் கைவிட்டு, வேறு எங்கு வேண்டுமானாலும் நல்ல வேலையைத் தேடிக்கொள்ள முடியும். தொழிலாளர்கள் இல்லாமல் கஞ்சத்தனமான முதலாளி தொழிலை விட்டுச் சென்றுவிடுவார். ஆனால் தொழிலாளர்கள் கடுமையாக உழைத்தால் முதலாளி அவர்களை நன்றாக நடத்துவார், தொழில் வளர்ச்சியடையும்,  முதலாளிகள் மிகுதியாகப் பணம் ஈட்டுவார்கள், அதனால் தொழிலாளர்கள் தங்களுக்குரிய நியாயமான பங்கினைப் பெறுவார்கள் என அவர்கள் கூறுகின்றனர். 

இந்தச் செழிப்பான சித்திரம் உழைப்பின் மெய்நிலைக்குப் பொருந்துவதில்லை. தடையில்லாச் சந்தையின் தூணாகவும் உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாகவும் உள்ள அமெரிக்காவில் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கான உண்மை ஊதியங்கள் மிகமிகக் குறைவாகும். ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் இன்றியமையாத் தேவையை ஈடுகட்டுவதற்கே பல வேலைகளைச் செய்கிறார்கள்.

உண்மையில், முதலாளித்துவ உலகில் எங்குமே ஊதியங்கள் நியாயமாக இருக்கமாட்டா, ஏனென்றால் முதலாளிகள் தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்புக்கு நெருக்கமான ஊதியத்தை கொடுத்துவிட முடியாது, அப்படிக் கொடுத்தால் தொழிலைவிட்டுப் போய் விடுவார்கள். அது ஏன்?

முதலாளிகள் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறபோது தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை, உழைப்பதற்கான திறனைத்தான் உண்மையில் விலைகொடுத்து வாங்குகிறார்கள். இது ஒன்றுதான் இயந்திரங்களையும் மூலப் பொருட்களையும் இணைத்து ஒரு புதிய உற்பத்திப் பொருளை, அதற்காக செலவிட்ட முதலீடுகளை விடவும் கூடுதலான மதிப்புள்ள பொருளை உருவாக்கும் ஒரே வழியாகும். இந்தப் பண்டங்களை (விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் என்று பொருள்படும்) உற்பத்தி செய்வதில், தொழிலாளர்கள் புதிய மதிப்பை உருவாக்குகிறார்கள். அந்த மதிப்பில் ஓரளவு அவர்களுக்கு ஊதியமாகத் திருப்பி அளிக்கப்படுகிறது. மார்க்ஸ் இதைமாறுகின்ற மூலதனம்என்று குறிப்பிடுகிறார் (ஏனென்றால் அது மாறுகிறது, மதிப்பின் அளவை அதிகரிக்கிறது). ஆனால் உருவாக்கப்பட்ட புதிய மதிப்பின் ஒரு பகுதி முதலாளிக்குச் செல்கிறது. இதை மார்க்ஸ்உபரி மதிப்புஎன்று குறிப்பிடுகிறார். தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த உபரி மதிப்பிலிருந்து நிறுவனத்தின் இலாபங்கள் பெறப்படுகின்றன ஆனால் அவர்களுக்கு ஊதியங்களாகத் திருப்பி அளிக்கப்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக, காஃபி தயாரிக்கும் ஒரு பெண்மணி ஒருமணி நேரத்துக்கு 26 டாலர்கள் ஊதியம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில், அவர் ஒவ்வொன்றும் 4.20 டாலருக்கு விற்கக்கூடிய 30 காஃபி தயாரிக்கிறார். அந்த விற்பனை விலையில் 1.60 டாலரில் அந்தப் பெண்ணின் ஊதியம் தவிர மீதி அனைத்தின் செலவினங்களும், அதாவது காஃபிக் கொட்டை, கோப்பை, மூடி, பால், காஃபி தயாரிக்கும் இயந்திரத்தின் தேய்மானம், தண்ணீர், மின்சாரச் செலவு, நிறுவன வாடகை ஆகிய அனைத்துச் செலவினங்களும் உள்ளடங்குகின்றன என்று வைத்துக்கொள்வோம். அனைத்து முதலீடுகளையும் கழித்தபிறகு வருகிற வருவாய்  மணிக்கு 78 டாலர் ஆகும். இதில் அந்தப் பெண்ணின் ஊதியம் 26 டாலர்களைக்  கழித்தால் எஞ்சிய 52 டாலர் இலாபமாகக் கிடைக்கிறது. ஊதியத்துக்கும் மேலான இலாபத்தின் சுரண்டல் விகிதம் 200 விழுக்காடு ஆகும். அந்தப் பெண் தொழிலாளருக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு 1 டாலருக்கும் அவர் முதலாளிக்காக 2 டாலர்களை ஈட்டித் தருகிறார்.

அந்தப் பெண்ணிற்கு இந்த எண்ணிக்கையின் பொருள் என்ன? ஒரு மணிநேரத்துக்கு அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் ஊதியம் அவர் தயாரிக்கும்  10 வது காஃபியில் கிடைத்துவிடும். எஞ்சியுள்ள 20 காஃபிகளின் உற்பத்தியின் இலாபம் முதலாளிக்குச் சென்றுவிடும். அவருடைய ஒரு நாளின் ஒன்பது மணிநேர வேலையில் முதல் மூன்று மணி நேரம் அவருக்குக் கிடைக்கும் ஊதியத்துக்காக உழைக்கிறார், எஞ்சிய ஆறுமணி நேரம் முதலாளிக்கு சேரும் செல்வத்திற்காக உழைப்பதற்குச் சென்றுவிடுகிறது. அந்தத் தொழிலாளியினால் உருவாக்கப்படும் மதிப்புக்குச் சமமாக அந்த முதலாளி கொடுக்க வேண்டுமானால் மணிக்கு 78 டாலர் கொடுக்க வேண்டியிருக்கும்.  

இவ்வாறுதான் சுரண்டல் நிகழ்கிறது, இந்த வகையில் இலாபம் ஈட்ட முடியாது போனால் மிகச் சிறிய காஃபிக் கடை முதலாளியிலிருந்து பெரிய சுரங்க   முதலாளிகள் வரை, எந்த முதலாளியும் யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்.  இது தவிர வேறுவகையில் செயல்படுவது சாத்தியமில்லை. ஏனென்றால் அனைத்து முதலாளிகளையும் ஒருவரோடு ஒருவர் இலாபத்திற்காகப்  போட்டியிட சந்தை நிர்ப்பந்திக்கிறது.  தங்கள் தொழிலாளர்களைச் சுரண்டாத எந்த முதலாளியும் முழுவதுமாக அழிந்து விடுவார். தாங்கள் சுரண்டப்படும் வேலையை தொழிலாளர்கள் விட்டுவிட முடியும் --- ஆனால் அவர்களுக்கு இருக்கும் ஒரே மாற்று சுரண்டும் இன்னொரு முதலாளியிடம் வேலை செய்வதுதான்.

காஃபி தயாரிக்கும் பெண்ணின் எடுத்துக்காட்டு ஒருபுறம் இருக்க,  சுரண்டலை அளவிடுவது கடினமான ஒன்றாகும். அதைக் கணக்கிடுவது ஒரு புறம் இருக்கட்டும்; முதலாளிகளும் முதலாளியப் பொருளியலாளர்களும் இதை ஒப்புக்கொள்வது கூடக் கிடையாது.  எவ்வாறாயினும், சில எளிய ஊகங்களையும் கிடைக்கும் தரவுகளையும் பயன்படுத்தி, தோராயமான புள்ளி விவரங்களை  வைத்து, சுரண்டலின் அடிப்படை உண்மை நிலையை  மார்க்சியவாதிகள் எடுத்துக்காட்டினார்கள்.

ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை, மார்க்சியப் பொருளியலாளர் டாம் பிரேம்பிள் பின்வரும் தொழில்துறைகளில் கடந்த ஆண்டின் சுரண்டல் விகிதத்தைக் கணக்கிடுவதற்கு ஆஸ்திரேலிய புள்ளிவிவரத் துறையிலிருந்து தரவுகளைப் பெற்றுப் பயன்படுத்தினார். கட்டுமானப் பணி 85 விழுக்காடு (85 விழுக்காடுஇதுவரை அவர்கள் ஊதியங்களாகக் கொடுக்கும் ஒவ்வொரு டாலருக்கும் அந்தத் தொழில்துறை முதலாளிகளுக்கு 85 சென்ட்கள் எடுத்துக்கொண்டனர்) சில்லறை விற்பனைத் துறையில் 71 விழுக்காடு, ஆற்றல் துறையில் 273 விழுக்காடு, சுரங்கத் துறையில் 661 விழுக்காடு. சுரங்கத் தொழிலாளர்கள் உயர்ந்த அளவுக்கு ஊதியம் பெற்றாலும், அந்தத் தொழில்துறை தான் ஆஸ்திரேலியாவில் சுரண்டல் மிகுந்த ஒன்றாக இருக்கிறது. அது தொழிலாளர்களின் ஊதியத்தைவிட ஆறு மடங்குக்கும் மேலாக இலாபமாகப் பெறுகிறது. சுரங்க முதலாளியான ஜினா ரைனார்ட் தான் அந்த நாட்டில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை.

ஊதியங்கள் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட முழு மதிப்பின் பிரதிபலிப்பு இல்லை என்றால், அவை எதைக் குறிக்கின்றன? சாரத்தில், அவை தொழிலாளர்களை மறு உற்பத்தி செய்வதற்கான குறைந்தபட்ச செலவினம் ஆகும். அதாவது தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும்  உணவு, உடைகள், வீடு, கல்வி ஆகியவற்றுக்கான செலவினம் ஆகும். நடைமுறையில், அனைத்து வகையான சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளும் உழைப்பின் விலையைத் தீர்மானிப்பதில் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உணவு, வீடுகள், உடைகள், கல்வி மற்றும் பயிற்சியின் உண்மையான செலவினம், தொழிலாளர்களின் இருப்பிடம் அல்லது தொழில்துறையின் அடிப்படையில்  வேறுபடுகிறது. அதன் பின்னர் உழைப்புச் சக்தியின் வழங்கல் மற்றும் தேவை இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அதிக அளவு வேலைவாய்ப்பின்மை நிலவும் அவலநிலை முதலாளிகளுக்கு  குறைந்த ஊதியத்தைக் குறைத்துக் கொடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

தொழிற்சங்கப் போர்க்குணமும் சுரண்டல் விகிதத்தின் மீது விளைவை ஏற்படுத்துகிறது. வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்கள் ஊதிய உயர்வைப் பெறுவதற்கான மிகவும் திறனுள்ள பொறியமைவாக இருந்துவருகின்றன. தொழிலாளர்களின் போராட்டங்கள் சில நேரங்களில், ஒரு நாளின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற, சுரண்டலைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றுவதற்கு அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கின்றன. ஆனால் ஊதியங்களுக்காக எவ்வளவுதான் போராடினாலும் முதலாளித்துவப் பொருளாதாரத்திலிருந்து சுரண்டலை ஒழிக்க முடியாது.

சீர்திருத்தவாதிகள் பலநேரங்களில்அளவுக்கு மிஞ்சிய சுரண்டலின்சில வடிவங்களுக்குத் தீர்வு காண முயற்சி செய்கிறார்கள், அதேவேளையில் முதலாளித்துவ அமைப்பின் மீதான எந்த விமர்சனத்தையும் எதிர்க்கிறார்கள். எடுத்துக்காட்டாக, மார்க்சின் காலத்தில், தாராளவாதிகள்ஒருநாளின் நியாயமான உழைப்புக்கு நியாயமான ஊதியம்கோரினார்கள், மார்க்ஸ் அதைபழமைவாதக் கொள்கைஎன்று குறிப்பிட்டார், ஏனென்றால் அது தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான உறவு உண்மையில் நியாயமானதாக இருக்கமுடியும் என்று தொழிலாளர்களுக்குக் கூறுவதாக இருக்கிறது. தொழிற்சங்கப் பொறுப்பாளர்களும் சமூக ஜனநாயகவாதிகளும் அதே முழக்கத்தைப் பின்பற்றி சீர்திருத்தங்களுக்காகக் கிளர்ச்சி செய்வதற்கு அனுமதிக்கிறார்கள், ஆனால் அதை முதலாளித்துவ அமைப்பின் வரம்புகளுக்குள் செய்யுமாறு கூறுகிறார்கள். அந்த அமைப்பின் வரம்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர்கள் தொழிலாளர்கள் உருவாக்கும் உபரி மதிப்பு திட்டமிட்ட முறையில் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்கிறார்கள். நடைமுறையில், அதன் பொருள் முதலாளித்துவ வர்க்கத்திற்குஏற்றுக்கொள்ளத் தக்கதாககருதப்படும் வரம்புக்குள் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும், அதாவது, சுரண்டலை முற்றாக ஒழிப்பதற்குப் பதிலாக சுரண்டலின் விகிதத்தில் ஒரு மாற்றத்தைக் கோருவதாகும்.

புரட்சிகர சோசலிசவாதிகள் அதை வேறுவகையில் பார்க்கிறார்கள். தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், மேம்படுத்திக் கொள்வதற்காகவும், அவர்களுடைய போராடும் உணர்வை ஊக்குவிப்பதற்காகவும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான ஒவ்வொரு கோரிக்கையையும் ஆதரிக்கலாம். ஆனால் ஊதிய உயர்வு மட்டுமே போதுமானது அல்ல. முதலாளித்துவத்தின் கீழ் அவற்றுக்காகப் போராடுவது கிரேக்க புராணத்தில் வரும் சிசிஃபசின் உழைப்பைப் போல, ஒரு மலை உச்சியை நோக்கிப்  பெரும் கற்பாறையை உருட்டிக்கொண்டு செல்வதும் அது திரும்பவும் கீழ்நோக்கி உருண்டு வருவதுமாக என்றென்றைக்கும் சபிக்கப்பட்டது போன்றதாகும்.



தொழிலாளர்கள் தங்கள் பதாகையில் நியாயமான ஊதியத்திற்குப்பதிலாககூலி முறையை ஒழிப்போம்என்ற புரட்சிகர முழக்கத்தைப் பொறிக்க வேண்டும் என்று மார்க்ஸ் வாதிட்டார்.

எம்மா நார்டன்

தமிழில்: நிழல்வண்ணன்

 _______________________________________

நன்றி: ஆஸ்திரேலிய சோசலிசக் குழுவானசோசலிச மாற்றுவெளியீடான செங்கொடி (Red Flag).

நன்றி: ஜனதா வீக்லி.

Comments

  1. உபரி மதிப்பை விளக்கும் அருமையான கட்டுரை. புள்ளி விவரங்களோடு எளிமையாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட