Skip to main content

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

 

உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை, உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார். ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார். இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல, மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும். தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே  முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும். இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர். தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்குகூட்டப்படும் மதிப்பைகுறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டக் கூடும் என்பதை அவர்கள் எப்போதாவது ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தச் சித்திரம் என்பது சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை பற்றியதாகும். தனது தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் குறைத்துக் கொடுக்க முயற்சிக்கும் பேராசை பிடித்த  முதலாளிகளை தடையில்லாச் சந்தை கவனித்துக்கொள்ளும் என அவர்கள் உறுதியளிக்கின்றனர். தொழிலாளர்கள் அப்படிப்பட்ட வேலையைக் கைவிட்டு, வேறு எங்கு வேண்டுமானாலும் நல்ல வேலையைத் தேடிக்கொள்ள முடியும். தொழிலாளர்கள் இல்லாமல் கஞ்சத்தனமான முதலாளி தொழிலை விட்டுச் சென்றுவிடுவார். ஆனால் தொழிலாளர்கள் கடுமையாக உழைத்தால் முதலாளி அவர்களை நன்றாக நடத்துவார், தொழில் வளர்ச்சியடையும்,  முதலாளிகள் மிகுதியாகப் பணம் ஈட்டுவார்கள், அதனால் தொழிலாளர்கள் தங்களுக்குரிய நியாயமான பங்கினைப் பெறுவார்கள் என அவர்கள் கூறுகின்றனர். 

இந்தச் செழிப்பான சித்திரம் உழைப்பின் மெய்நிலைக்குப் பொருந்துவதில்லை. தடையில்லாச் சந்தையின் தூணாகவும் உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாகவும் உள்ள அமெரிக்காவில் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கான உண்மை ஊதியங்கள் மிகமிகக் குறைவாகும். ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் இன்றியமையாத் தேவையை ஈடுகட்டுவதற்கே பல வேலைகளைச் செய்கிறார்கள்.

உண்மையில், முதலாளித்துவ உலகில் எங்குமே ஊதியங்கள் நியாயமாக இருக்கமாட்டா, ஏனென்றால் முதலாளிகள் தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்புக்கு நெருக்கமான ஊதியத்தை கொடுத்துவிட முடியாது, அப்படிக் கொடுத்தால் தொழிலைவிட்டுப் போய் விடுவார்கள். அது ஏன்?

முதலாளிகள் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறபோது தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை, உழைப்பதற்கான திறனைத்தான் உண்மையில் விலைகொடுத்து வாங்குகிறார்கள். இது ஒன்றுதான் இயந்திரங்களையும் மூலப் பொருட்களையும் இணைத்து ஒரு புதிய உற்பத்திப் பொருளை, அதற்காக செலவிட்ட முதலீடுகளை விடவும் கூடுதலான மதிப்புள்ள பொருளை உருவாக்கும் ஒரே வழியாகும். இந்தப் பண்டங்களை (விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் என்று பொருள்படும்) உற்பத்தி செய்வதில், தொழிலாளர்கள் புதிய மதிப்பை உருவாக்குகிறார்கள். அந்த மதிப்பில் ஓரளவு அவர்களுக்கு ஊதியமாகத் திருப்பி அளிக்கப்படுகிறது. மார்க்ஸ் இதைமாறுகின்ற மூலதனம்என்று குறிப்பிடுகிறார் (ஏனென்றால் அது மாறுகிறது, மதிப்பின் அளவை அதிகரிக்கிறது). ஆனால் உருவாக்கப்பட்ட புதிய மதிப்பின் ஒரு பகுதி முதலாளிக்குச் செல்கிறது. இதை மார்க்ஸ்உபரி மதிப்புஎன்று குறிப்பிடுகிறார். தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த உபரி மதிப்பிலிருந்து நிறுவனத்தின் இலாபங்கள் பெறப்படுகின்றன ஆனால் அவர்களுக்கு ஊதியங்களாகத் திருப்பி அளிக்கப்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக, காஃபி தயாரிக்கும் ஒரு பெண்மணி ஒருமணி நேரத்துக்கு 26 டாலர்கள் ஊதியம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில், அவர் ஒவ்வொன்றும் 4.20 டாலருக்கு விற்கக்கூடிய 30 காஃபி தயாரிக்கிறார். அந்த விற்பனை விலையில் 1.60 டாலரில் அந்தப் பெண்ணின் ஊதியம் தவிர மீதி அனைத்தின் செலவினங்களும், அதாவது காஃபிக் கொட்டை, கோப்பை, மூடி, பால், காஃபி தயாரிக்கும் இயந்திரத்தின் தேய்மானம், தண்ணீர், மின்சாரச் செலவு, நிறுவன வாடகை ஆகிய அனைத்துச் செலவினங்களும் உள்ளடங்குகின்றன என்று வைத்துக்கொள்வோம். அனைத்து முதலீடுகளையும் கழித்தபிறகு வருகிற வருவாய்  மணிக்கு 78 டாலர் ஆகும். இதில் அந்தப் பெண்ணின் ஊதியம் 26 டாலர்களைக்  கழித்தால் எஞ்சிய 52 டாலர் இலாபமாகக் கிடைக்கிறது. ஊதியத்துக்கும் மேலான இலாபத்தின் சுரண்டல் விகிதம் 200 விழுக்காடு ஆகும். அந்தப் பெண் தொழிலாளருக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு 1 டாலருக்கும் அவர் முதலாளிக்காக 2 டாலர்களை ஈட்டித் தருகிறார்.

அந்தப் பெண்ணிற்கு இந்த எண்ணிக்கையின் பொருள் என்ன? ஒரு மணிநேரத்துக்கு அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் ஊதியம் அவர் தயாரிக்கும்  10 வது காஃபியில் கிடைத்துவிடும். எஞ்சியுள்ள 20 காஃபிகளின் உற்பத்தியின் இலாபம் முதலாளிக்குச் சென்றுவிடும். அவருடைய ஒரு நாளின் ஒன்பது மணிநேர வேலையில் முதல் மூன்று மணி நேரம் அவருக்குக் கிடைக்கும் ஊதியத்துக்காக உழைக்கிறார், எஞ்சிய ஆறுமணி நேரம் முதலாளிக்கு சேரும் செல்வத்திற்காக உழைப்பதற்குச் சென்றுவிடுகிறது. அந்தத் தொழிலாளியினால் உருவாக்கப்படும் மதிப்புக்குச் சமமாக அந்த முதலாளி கொடுக்க வேண்டுமானால் மணிக்கு 78 டாலர் கொடுக்க வேண்டியிருக்கும்.  

இவ்வாறுதான் சுரண்டல் நிகழ்கிறது, இந்த வகையில் இலாபம் ஈட்ட முடியாது போனால் மிகச் சிறிய காஃபிக் கடை முதலாளியிலிருந்து பெரிய சுரங்க   முதலாளிகள் வரை, எந்த முதலாளியும் யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்.  இது தவிர வேறுவகையில் செயல்படுவது சாத்தியமில்லை. ஏனென்றால் அனைத்து முதலாளிகளையும் ஒருவரோடு ஒருவர் இலாபத்திற்காகப்  போட்டியிட சந்தை நிர்ப்பந்திக்கிறது.  தங்கள் தொழிலாளர்களைச் சுரண்டாத எந்த முதலாளியும் முழுவதுமாக அழிந்து விடுவார். தாங்கள் சுரண்டப்படும் வேலையை தொழிலாளர்கள் விட்டுவிட முடியும் --- ஆனால் அவர்களுக்கு இருக்கும் ஒரே மாற்று சுரண்டும் இன்னொரு முதலாளியிடம் வேலை செய்வதுதான்.

காஃபி தயாரிக்கும் பெண்ணின் எடுத்துக்காட்டு ஒருபுறம் இருக்க,  சுரண்டலை அளவிடுவது கடினமான ஒன்றாகும். அதைக் கணக்கிடுவது ஒரு புறம் இருக்கட்டும்; முதலாளிகளும் முதலாளியப் பொருளியலாளர்களும் இதை ஒப்புக்கொள்வது கூடக் கிடையாது.  எவ்வாறாயினும், சில எளிய ஊகங்களையும் கிடைக்கும் தரவுகளையும் பயன்படுத்தி, தோராயமான புள்ளி விவரங்களை  வைத்து, சுரண்டலின் அடிப்படை உண்மை நிலையை  மார்க்சியவாதிகள் எடுத்துக்காட்டினார்கள்.

ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை, மார்க்சியப் பொருளியலாளர் டாம் பிரேம்பிள் பின்வரும் தொழில்துறைகளில் கடந்த ஆண்டின் சுரண்டல் விகிதத்தைக் கணக்கிடுவதற்கு ஆஸ்திரேலிய புள்ளிவிவரத் துறையிலிருந்து தரவுகளைப் பெற்றுப் பயன்படுத்தினார். கட்டுமானப் பணி 85 விழுக்காடு (85 விழுக்காடுஇதுவரை அவர்கள் ஊதியங்களாகக் கொடுக்கும் ஒவ்வொரு டாலருக்கும் அந்தத் தொழில்துறை முதலாளிகளுக்கு 85 சென்ட்கள் எடுத்துக்கொண்டனர்) சில்லறை விற்பனைத் துறையில் 71 விழுக்காடு, ஆற்றல் துறையில் 273 விழுக்காடு, சுரங்கத் துறையில் 661 விழுக்காடு. சுரங்கத் தொழிலாளர்கள் உயர்ந்த அளவுக்கு ஊதியம் பெற்றாலும், அந்தத் தொழில்துறை தான் ஆஸ்திரேலியாவில் சுரண்டல் மிகுந்த ஒன்றாக இருக்கிறது. அது தொழிலாளர்களின் ஊதியத்தைவிட ஆறு மடங்குக்கும் மேலாக இலாபமாகப் பெறுகிறது. சுரங்க முதலாளியான ஜினா ரைனார்ட் தான் அந்த நாட்டில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை.

ஊதியங்கள் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட முழு மதிப்பின் பிரதிபலிப்பு இல்லை என்றால், அவை எதைக் குறிக்கின்றன? சாரத்தில், அவை தொழிலாளர்களை மறு உற்பத்தி செய்வதற்கான குறைந்தபட்ச செலவினம் ஆகும். அதாவது தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும்  உணவு, உடைகள், வீடு, கல்வி ஆகியவற்றுக்கான செலவினம் ஆகும். நடைமுறையில், அனைத்து வகையான சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளும் உழைப்பின் விலையைத் தீர்மானிப்பதில் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உணவு, வீடுகள், உடைகள், கல்வி மற்றும் பயிற்சியின் உண்மையான செலவினம், தொழிலாளர்களின் இருப்பிடம் அல்லது தொழில்துறையின் அடிப்படையில்  வேறுபடுகிறது. அதன் பின்னர் உழைப்புச் சக்தியின் வழங்கல் மற்றும் தேவை இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அதிக அளவு வேலைவாய்ப்பின்மை நிலவும் அவலநிலை முதலாளிகளுக்கு  குறைந்த ஊதியத்தைக் குறைத்துக் கொடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

தொழிற்சங்கப் போர்க்குணமும் சுரண்டல் விகிதத்தின் மீது விளைவை ஏற்படுத்துகிறது. வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்கள் ஊதிய உயர்வைப் பெறுவதற்கான மிகவும் திறனுள்ள பொறியமைவாக இருந்துவருகின்றன. தொழிலாளர்களின் போராட்டங்கள் சில நேரங்களில், ஒரு நாளின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற, சுரண்டலைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றுவதற்கு அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கின்றன. ஆனால் ஊதியங்களுக்காக எவ்வளவுதான் போராடினாலும் முதலாளித்துவப் பொருளாதாரத்திலிருந்து சுரண்டலை ஒழிக்க முடியாது.

சீர்திருத்தவாதிகள் பலநேரங்களில்அளவுக்கு மிஞ்சிய சுரண்டலின்சில வடிவங்களுக்குத் தீர்வு காண முயற்சி செய்கிறார்கள், அதேவேளையில் முதலாளித்துவ அமைப்பின் மீதான எந்த விமர்சனத்தையும் எதிர்க்கிறார்கள். எடுத்துக்காட்டாக, மார்க்சின் காலத்தில், தாராளவாதிகள்ஒருநாளின் நியாயமான உழைப்புக்கு நியாயமான ஊதியம்கோரினார்கள், மார்க்ஸ் அதைபழமைவாதக் கொள்கைஎன்று குறிப்பிட்டார், ஏனென்றால் அது தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான உறவு உண்மையில் நியாயமானதாக இருக்கமுடியும் என்று தொழிலாளர்களுக்குக் கூறுவதாக இருக்கிறது. தொழிற்சங்கப் பொறுப்பாளர்களும் சமூக ஜனநாயகவாதிகளும் அதே முழக்கத்தைப் பின்பற்றி சீர்திருத்தங்களுக்காகக் கிளர்ச்சி செய்வதற்கு அனுமதிக்கிறார்கள், ஆனால் அதை முதலாளித்துவ அமைப்பின் வரம்புகளுக்குள் செய்யுமாறு கூறுகிறார்கள். அந்த அமைப்பின் வரம்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர்கள் தொழிலாளர்கள் உருவாக்கும் உபரி மதிப்பு திட்டமிட்ட முறையில் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்கிறார்கள். நடைமுறையில், அதன் பொருள் முதலாளித்துவ வர்க்கத்திற்குஏற்றுக்கொள்ளத் தக்கதாககருதப்படும் வரம்புக்குள் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும், அதாவது, சுரண்டலை முற்றாக ஒழிப்பதற்குப் பதிலாக சுரண்டலின் விகிதத்தில் ஒரு மாற்றத்தைக் கோருவதாகும்.

புரட்சிகர சோசலிசவாதிகள் அதை வேறுவகையில் பார்க்கிறார்கள். தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், மேம்படுத்திக் கொள்வதற்காகவும், அவர்களுடைய போராடும் உணர்வை ஊக்குவிப்பதற்காகவும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான ஒவ்வொரு கோரிக்கையையும் ஆதரிக்கலாம். ஆனால் ஊதிய உயர்வு மட்டுமே போதுமானது அல்ல. முதலாளித்துவத்தின் கீழ் அவற்றுக்காகப் போராடுவது கிரேக்க புராணத்தில் வரும் சிசிஃபசின் உழைப்பைப் போல, ஒரு மலை உச்சியை நோக்கிப்  பெரும் கற்பாறையை உருட்டிக்கொண்டு செல்வதும் அது திரும்பவும் கீழ்நோக்கி உருண்டு வருவதுமாக என்றென்றைக்கும் சபிக்கப்பட்டது போன்றதாகும்.



தொழிலாளர்கள் தங்கள் பதாகையில் நியாயமான ஊதியத்திற்குப்பதிலாககூலி முறையை ஒழிப்போம்என்ற புரட்சிகர முழக்கத்தைப் பொறிக்க வேண்டும் என்று மார்க்ஸ் வாதிட்டார்.

எம்மா நார்டன்

தமிழில்: நிழல்வண்ணன்

 _______________________________________

நன்றி: ஆஸ்திரேலிய சோசலிசக் குழுவானசோசலிச மாற்றுவெளியீடான செங்கொடி (Red Flag).

நன்றி: ஜனதா வீக்லி.

Comments

  1. உபரி மதிப்பை விளக்கும் அருமையான கட்டுரை. புள்ளி விவரங்களோடு எளிமையாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...