அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது அகோரப் பசிக்கு உலக நாடுகளின் மீதான ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலை நாட்டி வருகின்றது. பின் தங்கிய, வளரும் நாடுகளின் இயற்கை வளங்களைச் சூறையாடவும், சந்தையைக் கைப்பற்றவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தங்கள் தருகின்றன. தமது எண்ணம் நிறைவேறாத நிலையில் அங்குள்ள ஆட்சியை அகற்றி, தமக்குச் சாதகமான பொம்மை ஆட்சியை நிறுவி அந்த நாட்டைக் கொள்ளையடித்து வருகின்றது. இந்தப் போக்கானது சமீபத்தில் அதிகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஈராக் , லிபியா , சிரியா , பாலஸ்தீனம் , வெனிசுலா, நைஜீரியா, ஏமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் , தென் அமெரிக்க நாடுகள் , ஆப்பிரிக்க நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை அமெரிக்கா நிலை நிறுத்தி வருகின்றது . கிரீன்லாந்தை பிடிக்கப் போவதாகவும் அச்சுறுத்தி வருகின்றது. சதாம் புஷ் ஆட்சியில் கொல்லப்பட்டார்; கடாபி ஒபாமா ஆட்சிக் காலகட்டத்தில் கொல்லப்பட்டார்; டிரம்ப் அதிகாரத்தின் கீழ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இ...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்