2005ல் கொண்டு வரப்பட்ட ‘மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்குப்’ பதிலாக ‘வளர்ந்த இந்தியாவிற்கான ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதம் அளிக்கும் திட்டம் (Viksik Bharath Gurantee for Rozgar and Ajeevika Mission Gramin)’ என்னும் சட்டத்தை அவசர அவசரமாக டிசம்பர் 18 ந்தேதி எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் பாஜக ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. 2005ல் கொண்டு வரப்பட்ட திட்டம் மகாத்மா காந்தி தேசியஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வேலைக்கான உரிமை என்ற கொள்கை அடிப்படையில் கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டாலும் முதலாளியப் பொருளாதார அமைப்பின் நெருக்கடியைக் குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் என்பதுதான் உண்மையாகும். கடந்த நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளிலிருந்து முதலாளிய ஆளும் வர்க்கம் கடைப்பிடித்து வரும் புதிய தாராளவாதக் கொள்கை சமூகத்தில் கடுமையான பொருளாதார ஏற்றத் தாழ்வை உருவாக்கக் கூடியதாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காத வளர்ச்சியாக உள்ளது. ஏனென்றால் மூலதனச் செறிவு கொண்ட தொழிற்சாலைகள...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்