தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரப் போகின்றது. ஆளும் கட்சியான திமுகவும் எதிர்க் கட்சியான அதிமுகவும் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கான சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆட்சியில் உள்ள திமுக ஏற்கனவே 1.3 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது; அரசு பள்ளிகளில் பயின்று பிறகு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. மேலும் மகளிருக்கு இலவசமாக நகரப் பேருந்துப் பயணச் சலுகைகளை வழங்கி வருகிறது; பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 3000 ரூபாயை தைப் பொங்கலின்போது வழங்கியது. போதாக்குறைக்கு மகளிர் உரிமைத் தொகையில் மூன்று மாதத் தொகையான 3000ரூபாயை முன் கூட்டி வழங்குவதுடன், அத்தோடு கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாயையும் சேர்த்து 5000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகையாக இந்த மாதம் வழங்கி மகளிரைத் திக்குமுக்காட வைத்துள்ளது. இவை அனைத்தும் தேர்தலில் வாக்குகளாக மாறி தன்னை வெற்றி பெறச் செய்து மீண்டும் ஆட்சிக் கட்...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்