Skip to main content

Posts

ஒரு விரல் புரட்சி!

  தேர்தல் காலம் - சந்தையின் பார்வையில் மனிதர்கள் சரக்குகளாக மாறிவிட்டதைப் போல , தேர்தல் ( கட்சிகளின் ) பார்வையில் அவர்கள் வாக்குகளாக மாறிப்போனதையும் , அவற்றை எப்படியெல்லாம் அறுவடை செய்வது என்று கட்சிகள் பரபரப்பில் பணியாற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது . பொருளுற்பத்தியில் அனைத்தையும் பணமாகப் பார்க்கும் ஆளும் வர்க்கம் , அரசியலில் மனிதர்களை வாக்குகளாக நோக்கும் பார்வையை தனது காவலாளியான கட்சிகளுக்குக் ( ஆளும் , எதிர்க் கட்சிகள் ) கையளித்திருக்கிறது . வாக்களிப்பது ஜனநாயகக் கடைமை ; உயிரோடு இருப்பதற்கான ஒற்றை சாட்சியம் ; வாக்கு செலுத்துவதை புறக்கணிப்பது மனிதத்தன்மையற்றவர்களின் செயல் ; அப்படியான செயல் தீவிரவாதமாக இணைவைக்கப்படும் என்றெல்லாம் வேண்டிக்கேட்பதும் , அறம் பாடுவதும் ; அச்சப்படுத்துவதும் தொடர்கிறது - அச்சு று த்துவது ஜனநாயகமல்ல என்பதைகூட அறியாமல் . வழக்கத்துக்கு மாறாக இந்தத் தேர்தலில் முக்கியமான நிரலாக முன்வந்திருப்பது பாசிசமும் , பாசிச எதிர்ப்பும் . களத்தில் எதிரும் , புதிருமான இரண்டு அணிகள் ; மற்றவை அவற்றின் மறைமுகங்கள் ( ப...

கூட்டுக் கொள்ளையர்களின் ஆட்சியை அம்பலப்படுத்தும் தேர்தல் பத்திர ஊழல்!

  தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் நிதி வழங்கலாம். அந்த விவரங்கள் இரகசியமாக இருக்கும். கட்சிகளும் அதை வெளியிடத் தேவை இல்லை. இதற்கு ஏதுவாக நிதிச் சட்டம் 2017ல் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தத் திருத்தங்களை, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்கள வையில் (Rajya sabha) நிறைவேற்ற முடியாது என்ற காரணத்தினால், பண மசோதா என்ற பெயரில் மக்களவையில் மட்டும் நிறைவேற்றி அதைச் சட்டமாக்கியது பா.ஜ.க. அரசாங்கம். இந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்த்து, ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான அமைப்பு (Association for Democratic Reforms), பொது நலன் (Common cause) என்ற இரு அமைப்புகளும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யும் வழக்குத் தொடுத்தன. பிப்ரவரி 15 ஆம் நாள் தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வசூல் செய்வது வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமைக்கு எதிரானது என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், கூறி நிதிச் சட்டம் 2017ல் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் செல்லாது என உச்ச நீதி...

ஜெர்மனியில் தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான இயக்கம்--- மூன்று முக்கியமான புரிதல்கள்

2024-- ஆம் ஆண்டுத் தொ டக்கத் தில் ஜெர்மனியில் வான்சீ  2.0 ஊழல் வெளிப்பட்டதிலிருந்து , ஏறத்தாழ பதினைந்து இலட்சம் மக்கள் வலதுசாரிகள் , வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் புதிய பாசிஸ்ட் கட்சியான AfD (Alternate for Deutschland - ஜெர்மனிக்கு மாற்று ) க்கு எதிராக ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர்.   சமீ பத்தில் நடந்த வான்சீ மாநாட்டில் , ஜெர்மனியின் தீவிர வலதுசாரிகளின் திட்டம் ஒன்று என்னவென்றால், “ ஜெர்மன்” இனம் இல்லை என AfD- கருதும் பெருந்திரளான மக்களை   வெளியேற்றுவது என்பதாகும். இதைத் தொடர்ந்து பெர்லினில் மட்டும் பிப்ரவரியின் முதல் வார இறுதியில் 1 , 50,000 பேர்   பெருந்திரளாக தீவிர வலதுசாரிகளுக்கு   எதிராக ப் போராட்டங்களை நடத்தினர். இந்த ப் பெருந்திரள் மக்கள் போராட்டங்களை ப் புரிந்துகொள்ள அரசியலில் ஈடுபாடு கொண்ட மக்களின் ஆறு கதைகள் உள்ளன. அ வர்கள்   வலதுசாரிகளுக்கு   எதிராக ஜெர்மனி முழுவதும் ஏராளமான ஊர்வலங்களை நடத்தினர். சில வாரங்களுக்கு முன் , ஜெர்மனி முழுவதும் 300- க்கும் அதிகமான இடங்களில் நடந்த " AfD-- க்கு எதிரா ன " பேரணிகளில் குறைந்த பட்சமாக 8,20,00...