நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ந்தேதி பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ‘இந்தியா’ கூட்டணியும் தம்முடைய தேர்தல் அறிக்கைகளில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளன. ‘இந்தியா’ கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓர் அரசாங்க வேலை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாதம் தோறும் ரூ.2000 உதவித் தொகை, அனைத்துப் பெண்களுக்கும் மாதம் தோறும் ரூ.2500 உதவித் தொகை, விதவைப் பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் மாதம் தோறும் ரூ.1500 உதவித் தொகை, அனைவருக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் எனப் பல சலுகைகளுக்கு உறுதி அளித்துள்ளது. எதிர்க் கட்சிகள் தேர்தலின் போது மக்களுக்கு இலவச சலுகைகளை அறிவிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தைச் சூறையாடுகின்றன; அதனால் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்ட முடிவதில்லை என எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து வரும் பாஜக நடைமுறையில் தனது போலித்தனத்தை அம்பலப்படுத்திக் கொள்கிறது. கர்நாடகாவிலும் மராட்டியத்திலும் நடந்த சட்ட சபைத் தேர...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்