Skip to main content

பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம்!


கடந்த மூன்றாம் தேதி செய்தி இணைய முகப்பான(News Portal) நியூஸ் க்ளிக் (News Click) மீது பாஜக அரசின் டெல்லி போலீஸ் தாக்குதலைத் தொடுத்து அதன் அலுவலகத்தையும் செயல்பாட்டையும் முடக்கியுள்ளது. அதனோடு தொடர்புடைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அதில் பணிபுரியும் பணியாளர்கள் என 46 பேரின் வீடுகளில் சோதனை இட்டு, ஆறு மணி நேரங்களுக்கு மேலாக அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி. அவர்களிடமிருந்து மடிக்கணினி, அலைபேசி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளது; நியூஸ் கிளிக்கின் தலைமை ஆசிரியரான பிரபீர் பர்க்யஸ்தா என்பவரையும் அதன் மனித வளத் துறைத் தலைவரான அமித் சக்கரவர்த்தியையும் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. நியூஸ் கிளிக்கின் மீது குறிப்பான எந்தக் குற்றச்சாட்டையும் கூறாமல் பொத்தாம்பொதுவாக அது இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற ஒரே காரணத்தைக் கூறி இந்தப் பாசிச நடவடிக்கையில் இறங்கி உள்ளது இந்திய பாஜக அரசு.

அனைத்து முதலாளிய ஊடகங்களையும் பாஜக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தனக்கு ஆதரவாக மாற்றியுள்ளது. இந்த நிலையில் அதனை எதிர்த்து அதனுடைய அநீதிகளையும் தவறுகளையும் மக்கள் விரோதச் செயல்களையும் அம்பலப்படுத்தும் பத்திரிகைகளை அது தனது விரோதிகளாகப் பார்க்கிறது.

அந்தப் பத்திரிகைகள் மீது அடக்கு முறையை ஏவி விடுகிறது. இல்லாவிட்டால் அதனை விலைக்கு வாங்குகிறது. தன்னை விமர்சித்துக் கொண்டிருந்த NDTV ஐ அதானி மூலம் விலைக்கு வாங்கியது. தனது தவறுகளை அம்பலப்படுத்திக் கொண்டிருந்த இந்த The Wire இணையதள இதழின் மீது தாக்குதலைத் தொடுத்தது. இப்பொழுது நியூஸ் கிளிக் இணைய முகப்பின் மீது தனது பாசிசத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் பிரபிர் பர்கயஸ்தா 1975இல் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையின் போதும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அப்பொழுது அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தார். பாசிச சக்திகள் எந்த வண்ணத்தில் இருந்தாலும் அவற்றிற்கு உண்மை பேசுபவர்கள் எதிரிகளாகத்தான் தோன்றுவார்கள். இதைத்தான் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. உண்மை மீதும், நீதி மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான இந்தப் பாசிசத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

                             சோசலிசத் தொழிலாளர் இயக்கம் 

Comments

  1. கட்டுரை நன்று. பாசிச போக்கை கடுமையாக எதிர்க்க வேண்டும்.

    ஜனநாயகம் குழி தோண்டி புகைப்பதை அனைவரும்
    எதிர்க்க வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

“சோசலிசப் புரட்சி ஒரு செயல்தந்திரம்” - அ.கா.ஈஸ்வரன் கண்டுபிடித்துள்ள புதிய கோட்பாடு!

MELS இணைய வழிப் பயிலரங்கில் லெனின் எழுதியுள்ள ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் பற்றி தோழர். அ.கா.ஈஸ்வரன் அறிமுக உரை ஆற்றியுள்ளார். அந்த உரையில் ஒரு புதிய கோட்பாட்டை அவர் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். ஈஸ்வரன் நிறுவ விரும்பும் புதிய கோட்பாடு என்ன? ‘ஒரு நாட்டில் முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும் அங்கு சோவியத் அதிகாரம் இணையாக நிலவும்போதே சோசலிசப் புரட்சியை நடத்த வேண்டும். இரட்டை ஆட்சிமுறை என்ற பிரத்யேக நிலைமை ரசியாவில் நிலவியதால்தான் லெனின் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைத்தார். இந்தியாவில் இரட்டை ஆட்சியும் இல்லை. உழைப்பாளர்களின் சோவியத்தும் இல்லை. சோவியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. இரட்டை அதிகார அமைப்பு நிலவாவிட்டால் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைக்க முடியாது’ என்பதுதான் அவருடைய புதிய கோட்பாடு. சோசலிசப் புரட்சி பேசுபவர்கள் லெனின் தனது ஆய்வுரைகளில் கூறியுள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புகின்றனர் என்கிறார் அவர். உண்மையில் தானும் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புவது அவர்தான் என்ப...