Skip to main content

வங்க தேசப் புரட்சியாளர் ரானோ

கனவு காணும் இன்றைய மனிதர்கள் அபாயகரமானவர்கள், ஏனென்றால் அவர்கள் விழித்திருக்கும் கண்களில் கனவுகளைக் காண்கிறார்கள், அவற்றை நனவாக்கவும் செய்கிறார்கள்

                            - டி.எச்.லாரன்ஸ்

வங்காள தேசத்தின் விடுதலைக் கனவை நனவாக்கிய வீரமிக்க முன்னணிப் போராளிகளில் ஒருவரான ஹைதர் அக்பர் கான் ரானோ கடந்த மே 11 (2024) அன்று தனது 81 வது வயதில் தாக்கா மருத்துவமனையில் உயிர் நீத்தார். வங்காள தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகரப் பங்கேற்ற அவருடைய இறப்புக்கு வங்காளதேசத்தின் அனைத்து செய்தி ஊடகங்களும், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைத்து அரசியல் தலைவர்களும் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலைக்கான மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க ஆர்வம் கொண்டுள்ள இளம் தலைமுறையினருக்கு ரானோ அண்ணாவழிகாட்டியாக இருந்தார். புரட்சிகரக் கனவுடன் இருந்த இளைஞர்கள் சமூகப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையை எட்டுகிற துணிகரமான ஒளிமிக்க கனவுடன் அவரைச் சூழ்ந்திருந்தனர், அவருடன் தொடர்பில் இருந்தனர்.

ஹைதர் அக்பர் கான் ரானோ பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாகாணத்தில் கல்கத்தாவில் 1942 ஆகஸ்டு 31 அன்று பிறந்தார். பின்னர் வங்காள தேசக் குடிமகன் ஆனார். தாக்கா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பு மாணவராகச் சேர்ந்த அவர் அரசியல் ஈடுபாடு காரணமாக அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டார். பின்னர் சிறையிலிருந்தவாறே இளங்கலை சட்டம் படித்து முடித்தார்.

உழைக்கும் மக்களின் இலட்சியத்திற்கான போராளியான ரானோ மிகவும் இளம் வயதிலேயே வர்க்கப் போராட்டம் என்ற நெடுஞ்சாலையில் தனது பயணத்தை தொடங்கினார். முதலாவதாக மாணவச் செயல்வீரராக, அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானில், இப்போதைய வாங்காளதேசத்தில், ஜனநாயகக் கல்வி முறைக்கான மாணவ சமுதாயத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றார். கல்வியில் ஏற்றத்தாழ்வு மேலோங்கியிருந்தது. ஒரு சில பணக்காரர்களின் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைத்தது. அதேவேளையில் உழைக்கும் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வாழ்கைக்கான கல்வி எட்டாக்கனியாக இருந்தது. அந்த நாட்களில் ஃபீல்டு மார்ஷல் என்று பட்டம் சூட்டிக்கொண்ட இராணுவத் தலைவரான அயூப் கான் ஆட்சியில் இருந்தார். ஹைதர் அக்பர் கான் ரானோ இராணுவ ஆட்சிக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் முக்கியத் தலைவராக இருந்தார். அப்போது தாக்காவின் முன்னணி செய்தித்தாள்களில் ஒன்று அவர் மாணவர்களின் பிரம்மாண்டக் கூட்டத்தில் ஆற்றிய தீரமிக்க உரையைக் குறித்துத் தலையங்கம் வெளியிட்டிருந்தது. அந்த மெலிந்த ஒடிசலான  மாணவர் தலைவர் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியாக இருந்த வங்காளத்தின் மூலை முடுக்குகளில் இருந்த நகரங்களில் மாணவர்களிடையே உரையாற்றி அவர்களை அமைப்பாகத் திரட்டினார். இயற்பியலில் சிறந்து விளங்கிய மாணவரான அவர் அர்ப்பணிப்பும் தியாகமும் கொள்கைப் பிடிப்பும் கொண்ட சமரசமற்ற மாணவப் போராளியாக இருந்தார்.  அரசியல் ஈடுபாடு காரணமாக அவர் நான்கு முறை சிறைத் தண்டனையை அனுபவித்தார், ஏழுமுறை தலைமறைவு வாழ்க்கையை ஏற்றார். கடின உழைப்பும் ஓய்வறியா உழைப்பும் எளிய வாழ்வும், அவருக்கு உழைக்கும் மக்களிடையேயும் தொழிலாளர்களிடையேயும் மரியாதையைப் பெற்றுத்தந்தது.

ரானோ வசதிபடைத்த குடும்பத்திலிருந்து வந்தவர், ஆனாலும் அவருடைய மனிதநேயப் பண்பு அவரை ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் களத்திற்கு இட்டுச் சென்றது. தனிச் சொத்து, தனிப்பட்ட வாழ்க்கைத் தொழில் மீதான நாட்டத்தைத் தவிர்த்து கம்யூனிச சித்தாந்ததை, அறிவியபல்பூர்வமான தத்துவத்தைத் தழுவிக் கொண்டார்.

ரானோவுக்கு அறிவியலில், குறிப்பாக இயற்பியலில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆற்றல் அலை வீச்சு (Quantum) இயற்பியல் தொடர்பான சிக்கல்களையும் கேள்விகளையும் விளக்கும் நூல் ஒன்றை எழுதினார். அது எளிய மக்களிடையே பணியாற்றும் செயல்வீரர்களுக்கு அறிவியலைப் பரப்புவதற்கு பெரிதும் உதவக் கூடியது.

 வங்க மொழியில் ரான் என்றால் போர், அவர் வர்க்கப் போரில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டதால் ரானோ என்று பெயரில் அறியப்பட்டார். உழைக்கும் மக்களின் நலனுக்காகப் போராடுவதிலும் வர்க்க அமைப்புக்களை கட்டியமைப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தலைநகரிலிருந்து பல மைல்கள் தொலைவிலிருந்த டோங்கி நகரில் தொழில்துறை தொழிலாளர்களை அமைப்பாக்கிய காலம் அவருக்கு ஒளிமிக்க காலமாக இருந்தது. அங்குதான் அவர் புகழ்பெற்ற விடுதலைப் போருக்கான கெரில்லா அணியை அமைத்தார்.

அங்கு தொழிலாளர் குடியிருப்புக்களில் பல நாட்களைக் கழித்தார். அந்தக் குடியிருப்புக்கள் மிகவும் தாழ்வாக இருக்கும், அவரால் நிமிர்ந்துகூட நிற்கமுடியாது. அங்கு பல தொழிற்சங்கங்களுக்கு வழிகாட்டியாகவும் பல படிப்பு வட்டங்களை உருவாக்கியும் செயல்பட்டு வந்தார். தொழிலாளர்களுக்காகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது, பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பது அவருடைய வாழ்வின் அன்றாடப் பகுதிகளாயின. இந்தக் காலகட்டத்தில், 1969—70 இல், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சாலை நிர்வாகிகளை முற்றுகையிட்டனர், அதற்காகத் திட்டமிடும் பணியில் ரானோ செயலூக்கத்துடன் பணியாற்றினார்.

கிழக்குப் பாகிஸ்தானின் விடுதலைப் போரில் 1971 இல் பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் நர்சிங்டி பகுதியில் கம்யூனிஸ்டுகள் தீவிரமாகப் போராடிவந்தனர். அங்கு பல விடுதலைப் பகுதிகளை நிறுவினர். அந்த ஆயுதப் போருக்குத் தயாரிப்புச் செய்வதில் ரானோ தீவிரப் பங்காற்றினார். நர்சிங்டி என்ற பகுதியில் இயங்கிவந்த கம்யூனிஸ்டு குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார். அங்கு கெரில்லா மண்டலங்கள், கள மருத்துவமனைகள், ஆயுதப் பயற்சிக் கூடங்கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றை நிறுவுவது, தேசிய அளவில் அரசியல் தலைமைகள் மற்றும் இராணுவத் தலைமைகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, ஆயுதங்கள் வெடிமருந்துகளைச் சேகரிப்பது, அறிவிப்புக்களை வெளியிடுவது ஆகியவற்றில் ரானோ முக்கியப் பங்காற்றினார். கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதிக்குள் பாகிஸ்தான் படைகளால் நெருங்கக் கூட முடியவில்லை. அங்கு மக்கள் ஜனநாயக வங்காள தேசத்தை நிறுவுவதற்காக விவசாயிகளும் தொழிலாளர்களும் ஆயுதம் தாங்கிப் போரிட்டனர்.

சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்துக்கான கொள்கைப் பிடிப்புடன் கூடிய நிலைப்பாட்டில் ரானோ இருந்தார். இது குருசேவியத் திரிபுவாதிகளின் நிலைப்பாட்டிற்கு எதிரானதாக இருந்தது. வங்க தேசக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமைக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். அவர் ஸ்டாலினைப் பின்பற்றினார். ஸ்டாலினைப் பற்றிய ஒரு நூலையும் எழுதினார். மேலும் புரட்சியாளர்களின் ஒரு புதிய தலைமுறையைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் மார்க்சியம், வரலாறு, முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், முதலாளிகளும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளும், சோசலிசம், சோவியத் ஆட்சி முறை, கம்யூனிச முகாம்களில் அரசியல் விவாதம், வங்காள தேச விடுதலைப் போரில் இடதுசாரிகளின் பாத்திரம் ஆகிய தலைப்புக்களில் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 2022 ஜனவரியில் அவருக்கு வங்காள அகாடமி இலக்கிய விருது அளிக்கப்பட்டது.. “நாம் ஏராளமாகக் கற்க வேண்டியுள்ளது, ஏராளமான சமூக அரசியல் பிரச்சனைகள் குறித்த ஆய்வே இல்லாத நிலை இருக்கிறதுஎன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மக்களை நேசித்த, மக்களுக்காக எழுதிய, மக்களுக்காகப் போராடிய மாபெரும் தலைவர். இடையறாத அரசியல் மற்றும் சித்தாந்த விவாதங்களில் சுரண்டப்படும் மக்களின் விடுதலையில் அவர் உறுதியுடன் இருந்தார். அப்படிப்பட்ட விவாதங்கள் ஒன்றில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். கட்சியைவிட்டு விலக நேர்ந்த போதும் அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து விலகவில்லை. வர்க்கப் போராட்டத்துக்கான அறைகூவலை அவர் ஒருபோதும் நிறுத்தியதில்லை.

சுரண்டப்படும் மக்களே எழுக! அடிமை விலங்குகளை உடைத்தெறியுங்கள், மலையெனக் குவியும் அவமதிப்புக்களைப் புறந்தள்ளுங்கள், சுரண்டலின் அதிகார மையத்தை தகர்த்தெறியுங்கள் இதுவே தோழர் ரானோவின் இரக்கமற்ற போர் முழக்கம், இதுவே அவரது தடுமாற்றமற்ற அரசியல் நிலைப்பாடு.

வங்காள தேச மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற மாபெரும் பாட்டாளிவர்க்கத் தலைவர் ரானோவின் புகழ் நீடு வாழ்க!

(ஆதாரம்: Wikipedia, countercurrents.org இல் வெளிவந்த வங்காள எழுத்தாளர் ஃபரூக் சௌதுரி அவர்களின் கட்டுரை, Daily Star’s Google News.)


தமிழில் நிழல்வண்ணன்

Comments

  1. வங்க தேசம் புரட்சி பாதை செல்லாமல் போனது வருத்தம் அடைய செய்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட