கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் நொண்டிச் சாக்குகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்யும் பரிதாபகரமான நிலையில் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. இ ப் பொழுது உள்ளது. தனது கட்சியின் கொள்கை முடிவுகளையும் தீர்மானங்களையும் ஊடகங்களுக்கு அளிக்கும் முக்கியமான செய்தித் தொடர்பாளர்களையே தனது கட்சிக்கும் ஆட்சிக்கும் தொடர்பில்லாத ஏதோ விளிம்பு நிலையில் உள்ளவர்கள் எனக் கூறித் தனது பொறுப்பிலிருந்து அந்தக் கட்சி தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மே 26ந் தேதி ‘ டைம்ஸ் நவ் ’ தொலைக்காட்சி விவாதத்தின்போது நபிகள் நாயகம் பற்றியும் இஸ்லாம் மதம் பற்றியும் அவதூறான கருத்துகளைக் கூறினார். அதற்குக் கண்டனம் தெரிவித்தும், மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கான்பூரில் கடந்த 3ந் தேதி முஸ்லீம் மக்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். அதில் கலவரம் வெடித்துப் பலர் காயமுற்றனர். நூற்றுக்கணக்கானோரை கைது செய்தது போலிஸ். முஸ்லீம் மக்களின் இருப்பிடங்களை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளுவோம் என அச்சுறுத்தி வருகிறது பா.ஜ.க. அரசு. அதே சமயத்தில் தில்லியில் பா...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்