பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் செயலைக் காங்கிரசின் தலைமையிலான அரசு தொடங்கி வைத்தது. மோடியின் அரசு இன்று அதை வேகமாக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சேலம் உருக்காலை, கர்நாடகத்தில் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகுத் தொழிற்சாலை, மேற்கு வங்காளத்தில் துர்காபூரில் உள்ள உலோகக் கலப்பு எஃகுத் தொழிற்சாலை ஆகியவற்றைத் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. ஜிண்டால், வேதாந்தா, டாட்டா, அர்செலோர் மிட்டல் ஆகிய முதலாளிய நிறுவனங்கள் அவற்றை வாங்கத் தயாராக உள்ளன. அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுஹாத்தி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களின் பொறுப்பு அதானி நிறுவனத்திற்குத் தரப்பட்டுள்ளது. ரயில்வேத் துறையில் மேற்குவங்காளத்தில் சித்தரஞ்சன் லோகோமோடிவ் வொர்க்ஸ், தமிழ்நாட்டில் பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை, மேலும் பனாரசில் உள்ள டீசல் லோகோமோடிவ் வொர்க்ஸ், கபூர்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலை, ரேபரேலி நவீன இரும்புப் பெட்டித் தொழிற்...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்