Skip to main content

Posts

பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கவா மக்கள் வாக்களித்தார்கள்?

கொரோனா ஊரடங்கு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் முதலாளிய வர்க்கத்தினரின் நலன்களுக்குத் தேவையான அனைத்துச் சட்டங்களையும் வேகவேகமாக நிறைவேற்றி வருகின்றனர். அவற்றிற்கு மக்கள் தங்களுடைய எதிர்ப்புகளைக் காட்ட முடியாமல் வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு முடிந்து மக்கள் வேலைகளுக்குத் திரும்பும்போது இந்தியாவில் உள்ள பொதுத்துறைகள் அனைத்தும் இந்த நாட்டு முதலாளிகளின் கைகளிலும்   அந்நிய நாட்டு முதலாளிகளின் கைகளிலும் சென்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் அந்த அளவுக்கு வேகமாகப் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. இந்திய ரயில்வேத் துறை உலகிலேயே நான்காவது பெரிய   ரயில்வேத் துறை. இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மக்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உருவாக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது. இந்தத் துறையில் 109 வழித்தடங்களையும் 151 தொடர்வண்டிகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதை அண்மையில்   அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள ரயில் பெட்டி தயாரிக்கு...

இந்திய ஆட்சியாளர்களின் தற்சார்பு வேடம்!

இந்திய- சீன எல்லைப் பிரச்சனையைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என ஆளும் கட்சியினர் அறைகூவல் விடுத்து வருகின்றனர் . ஒவ்வொரு குடிமகனும் தேசபக்தியை வெளிபடுத்த வேண்டிய தருணம் இது எனவும் , அப்படி செய்யாதவர்கள் தேசவிரோதிகள் எனவும் அச்சுறுத்துகின்றனர் . இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியினரும் ‘நாங்கள் தேசப்பற்றில் பா.ஜ.க - வி னருக்குச் சளைத்தவர்கள் இல்லை’ என்பதை   நிரூபிக்க அவர்கள் பங்கிற்கு   சீனாவிற்கு எதிரான வெறியை மூட்டி வருகின்றனர். ஆட்சியிலிருப்பவர்கள் தமது ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ஆட்சியை இழந்து வெளியில் இருப்பவர்கள் மீண்டு எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காகவும் தேசப் பற்று வேடத்தைத் தீவிரமாகப் போட்டு வருகின்றனர். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரின் ஒரு பகுதியாக சீனாவில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் அமெரிக்க மற்றும் இதர பன்னாட்டு மூலதனங்கள் சீனாவிலிருந்து வெளியேறும் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது . சீனாவிலிர...