Skip to main content

Posts

சிறுபான்மையினரைக் குறிவைக்கும் புல்டோசர்கள்!

தில்லிக்குத் தெற்குப் பகுதியில் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள நுஹ் பகுதி முன்பு மேவாட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 11 இலட்சம். அதில் 79% மக்கள் முஸ்லீம் மக்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். கால்நடை வளர்த்தலும் பால் பண்ணைகளும் அவர்களுக்கு வருமானம் அளிக்கும் தொழிலாக உள்ளது. இது ஆரவல்லி மலைத்தொடர்களை ஒட்டி அமைந்துள்ள வளமான, அழகான பகுதியாகும். நுஹ் பகுதியில் பண்டைய கால மூன்று சிவன் கோயில்கள் உள்ளன. மேலும் இந்தப் பகுதியைத் தன் மாடுகள் மேயக் கிருஷ்ணன் பயன்படுத்தி வந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை அரசியலாக்கி அரசியல் இலாபம் தேடத் திட்டமிட்டுள்ளனர் இந்துத்துவவாதிகள். அதற்காக இந்துக்களின் புனிதமான இந்தப் பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விஸ்வ இந்து பரிசத் மூன்றாண்டுகளுக்கு முன்பு பிராஜ்மண்டல் யாத்திரையைத் தொடங்கியது. பிராஜ் மண்டல் என்றால் கிருஷ்ணனின் மண்டலம் என்று பொருள். முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் இந்த வளமான பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் சங் பரிவாரங்களின் திட்டம். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் விஷ்வ ...

அல்லூரி சீதாராம ராஜு – ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி

அல்லூரி என்று அவரது குடும்பப் பெயரால் வெகுமக்களால் அழைக்கப்பட்டவர் சீதாராம ராஜு . அவருடைய தந்தையார் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் , அவர் புகைப்பட நிலையம் வைத்திருந்தார் . ஊர் ஊராக மாறிச் சென்று கடைசியாக , அன்றைய ஆந்திராவின் கல்வி , கலாச்சார மற்றும் அரசியல் மையமாக இருந்த இராஜமுந்திரி நகரில் குடியேறினார் . அல்லூரி காக்கிநாடாவில் படித்துக் கொண்டிருந்தபோது , மபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான சிரீ மாத்துரி அன்னபூர்ணய்யா மற்றும் மாபெரும் அறிஞரான ரால்லப்பள்ளி அச்சுத ராமய்யா ஆகியோரின் அரசியல் தொடர்பு அவருக்குக் கிடைத்தது . அவருடைய பதினைந்தாவது வயதில் கல்விக்காக விசாகப்பட்டினத்துக்குச் சென்றார். . இருந்தாலும் அவருக்குப் பள்ளிப்படிப்பில் கவனம் செல்லவில்லை . அவர் இந்திய அரசியல் சூழலில் தீவிர ஆர்வம் காட்டி அது தொடர்பான அறிவினைப் பெறத் தொடங்கினார் . 1857 ஆம் ஆண்டில் முதல் சுதந்திரப்போரில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்திருந்த கோண்டு வனப் பகுதிக்கு சிரீ அல்லூரி சீதாராம ராஜு சென்றார் . அங்கு வனப் ப...