Skip to main content

Posts

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யிலுள்ள அணியினரின் சிந்தனைக்கு...

  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ள தனது 24வது காங்கிரசுக்காக முன் வைத்துள்ள வரைவு அரசியல் தீர்மானம் மற்றும் அரசியல் பரிசீலனை அறிக்கை பற்றி சில கருத்துகளை அந்தக் கட்சியிலுள்ள அணியினரின் சிந்தனைக்கு இங்கு முன் வைக்கின்றோம். 1. கிராமப்புறங்களில் ஆளும் வர்க்கங்களில் ஒரு பகுதியாக கிராமப்புறச் செல்வந்தர்கள் இருக்கின்றனர்’ என்றும், ‘கிராமப்புறச் செல்வந்தர்களுக்கும் ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், விவசாயம் மற்றும் இதரத் துறைகளில் ஈடுபட்டு வரும் கிராமப்புற உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடே கிராமப் பகுதிகளில் நிலவும் அடிப்படை முரண்பாடாகும்’ என்றும், .‘கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டத்திற்கான ஆணி வேராக அமைகின்ற கிராமப்புற செல்வந்தர்களின் கூட்டுக்கு எதிராக கிராமப்புற ஏழைகளின் போராட்டங்கள் எதுவுமில்லை. தற்போது மாறிவிட்ட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமான நிலத்தைக் கைப்பற்றி அதை ஏழை விவசாயிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான போராட்டங்களை நீடித்த வகையில் தொடர்வது மிகவும் கடின...

நிகழ்காலப் பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசை திருப்ப பழைய கல்லறைகளைத் தோண்டும் கயவர்கள்!

  மார்ச் 17 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இந்துத்துவப் பாசிச அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிசத்தும், பஜரங் தளமும் இணைந்து முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அது கலவரத்தைத் தூண்டி ஓர் உயிரைப் பலி கொண்டுள்ளது.; முப்பதுக்கும் மேற்பட்டோரை காயமடைச் செய்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி சிலரின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்துள்ளது அந்த மாநிலத்தின் பாஜக தலைமையில் உள்ள அரசு.   ஏறக்குறைய 318 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த முகலாய மன்னர் அவுரங்கசீப் அடக்கம் செய்யப்பட்ட சமாதி இன்று கலவரம் செய்ய தேவைப்பட்ட , தேடப்பட்ட காரணங்களில் ஒன்றாகியுள்ளது.   கலைஞனின் பொறுப்பை மறந்து , பொறுப்பற்ற முறையில் சமுதாய அமைதியைக் குலைக்கும் என்று தெரிந்தும் சுயலாபத்துக்காக எடுக்கப்படும் அபாயகரமான படைப்புகளைச் சிலாகித்துப் பேசுவது--- ஊடகங்களில் தேர்தல் பிரச்சார மேடைகளில் தன் பதவியின் பொறுப்பை உறுதியுடன் மறுத்துச் செயல்படுவது என்று சர்வ சாதாரணமாகிவிட்டது பிரதமர் மோடிக்கு. அவரை இந்தியர்களின் பிரதமர் என்று சொல்லலாமா அல்லது இந்துக்களின் பிரதமர் ...

சுயநலம் மிக்க சிறு கும்பல் ஆட்சியினர் உண்மையில் என்ன விரும்புகின்றனர்?

  நாம் மிக மிக அபாயகரமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுயநலம் கொண்ட சிறு கும்பலின் ஆட்சி மற்றும் எதேச்சதிகாரம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நம்முடைய ஜனநாயகத்தை ப் பாதுகாக்க நாம் துணிவு கொண்டிருந்தோமா என்பதை வருங்காலத்தில் நமது சந்ததியினர் நினைவு கூர்வார்கள். கெட்டிஸ்பர் க் கில் 1863--- ஆம் ஆண்டு , அடிமை முறைக்கு எதிராக போராடி ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிர் நீத்த போர்க்களத்தில் , " இந்த தேசம், கடவுளின் கீழ், ஒரு புதிய சுதந்திர பூமியாக உருவாகும் --- மக்களுடைய மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இந்த பூமியில் மடிந்து போகாது" என்று முழங்கிய அமெரிக்காவின் அதிபர் ஆபிரகாம் லிங்க ன் பக்கம் நாம் நின்றோமா என்பதை அ வர்கள் நினைவு கூர்வார்கள். நாம் அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த லிங்கனின் கனவின் பக்கம் நிற்கப் போகிறோமா, இல்லை, இந்த நாட்டில் கோடீஸ்வர்களுடைய, கோடீஸ்வரர்களுக்காக, கோடீஸ்வரர்களால் ஆன ஒரு அரசாங்கம் அமைவதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? ஆனால் சிறு கும்பல் ஆட்சி பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதாது. உண்மையில் அமெரிக்காவில் மூன்று மிகப்பெரிய பணக...