வேலைநேரம் நீட்டிப்பும், முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை அதிகரிக்க வழிவகுக்கும் முதலாளித்துவக் கட்சிகளும்!
கர்நாடக அரசு கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சட்டத்தில் (Karnataka Shops and Commercial Establishments (Amendment) Bill 2024) திருத்தம் செய்வதற்கான மசோதா ஒன்றை கர்நாடக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொண்டு வந்தது . தொழிற்சங்கங்களின் , தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அதனைச் சட்டமாக்குவதைக் காலம் தாழ்த்தி வந்தது . ஆனால் , ஆந்திர அரசு வேலைநேர அதிகரிப்பிற்கான சட்ட முன்வடிவைக் கொண்டு வந்த பின் கர்நாடக அரசும் மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்துவருகின்றது . மகாராஷ்டிரா , உத்திரப்பிரதேசம் , அரியானா , ஹிமாச்சல்பிரதேசம் , பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வேலைநேரத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகளைச் செய்திருக்கும் நிலையில் , ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்குதேசம் தலைமையிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு , ஒரு நாளின் வேலைநேரத்தை 10 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது . இதற்கு ஏற்பத் தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே . பார்த்தசாரதி தெரிவித்துள்ளார் . அந்தச் சட்டத்தில் வழக்கமான வேலைநேரத்தைத் தாண்டிக் கூடுதலாக வேலை செய...