பீகாரில் வரும் நவம்பர் மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடத்தவேண்டிய சூழலில் , தேர்தல் ஆணையம் ' சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் ' என்ற பெயரில் 2003 க்குப் பிறகு யாரெல்லாம் வாக்காளர் பட்டியலில் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்களோ அவர்கள் எல்லாம் 11 வகையான ஆவணங்களின் மூலம் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என ஜுலை மாதம் 24 அன்று அறிவிப்பை வெளியிட்டது . ஆனால் , இந்திய அரசு மிக முக்கியமானதாகக் கருதும் ஆதார் அட்டையோ , குடும்ப அட்டையோ அல்லது வாக்காளர் அட்டையோ ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது . பீகாரில் மொத்தம் 7.89 கோடி வாக்காளர்கள் உள்ளனர் . இவர்களில் 4.93 கோடி பேர் 2003 இல் வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள் , 2.96 கோடி பேர் அதற்கு பின்பு வாக்காளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் . பின்னர் சொல்லபட்ட 2.96 கோடி வாக்காளர்கள் , அவர்களுடைய பிறந்த தேதியையோ அல்லது பிறந்த இடத்தையோ நிரூபணம் செய்து , இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது . வெளிநாடுகளிலிருந்து குடியேறியுள்ளவர்களைக் கண்டறிந்து ...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்