Skip to main content

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்

 

வெனிசுவேலாவில் ஜூலை 28, 2024 அன்று நடந்த தேர்தலில் நிகோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஊதுகுழலான முதலிய ஊடகங்களும் அந்தத் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று கூறி அந்தத் தேர்தல் முடிவை எதிர்த்துப் பரப்புரைகளில் ஈடுபட்டன. வெனிசுலாவில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்திய ஆதராவாளர்கள் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்க்கும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அவரது ஆட்சியைக் கவிழ்க்க வலது சாரியினர் மேற்கொண்ட சதி முயற்சிகளையும் தேர்தலின் போது அவர்கள் அரங்கேற்றிய வன்முறைகளையும், எதிர்த்து உலகம் முழுவதும் ஏராளமான நகரங்களில் மக்கள் இயக்கங்கள், இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை ஆகஸ்ட் 17, 2024 அன்று வெனிசுவேலாவுக்குப் பக்கபலமாக சர்வதேச ஒற்றுமைக்கான செயல்பாட்டு தினத்தில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். சர்வதேச மக்கள் கூட்டமைப்பு, ALBA இயக்கங்கள், சிமோன் பொலிவார் நிறுவனம் மற்றும் கரீபிய மக்கள் கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து, ஆகஸ்ட் 9, 2024 அன்று தொடங்கப்பட்ட சர்வதேச ஒற்றுமையின் ஒரு பகுதியான இந்த சர்வதேச செயல் தினம், "ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்போம்! வெனிசுவேலாவின் மீதிருந்து கையை எடு!" என்னும் வெனிசுவேலாவுடனான ஒற்றுமை / ஆதரவு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். 

கினியா மற்றும் கேப் வெர்டேவின் சுதந்திரத்திற்கான ஆப்பிரிக்க கட்சியும் அமில்கார் கேப்ரல் அரசியல் மற்றும் சித்தாந்தத்திற்கான பயிற்சிப் பள்ளியும் 10.8.2024 அன்று உலகின் பலபகுதிகளில் இருக்கும் கினிய மாணவர்களுடன் காணொலிக் காட்சி வழியாக ஒரு மாநாட்டை நடத்தி பொலிவேரியப் புரட்சிக்கு ஒன்றுபட்ட உறுதியான ஆதரவைத் தெரிவித்தனர்.

கினியா- பிஸ்ஸாவில், கினியா மற்றும் கேப் வெர்டேவின் சுதந்திரத்துக்காகப் போராடும் ஆப்பிரிக்கக் கட்சி 10.8.2024 அன்று மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் கினிய மாணவர்கள் வெனிசுவேலாவுக்குத் தங்களது உறுதியான ஆதரவைத் தெரிவித்தனர். 

தென்கொரியாவின் சியோல் நகரத்தில், "ஜனநாயகம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்போம்'--- வெனிசுவேலாவின் மீதிருந்து கையை எடு" என்னும் முழக்கத்துடன் சமூக செயல்பாட்டாளர்கள் 'செயல்பாட்டுக்கான சர்வதேச தினம்' என்ற முழக்கத்துடன் போராட்டங்களை நடத்தினார்கள். ஜூலை 28, 2024 அன்று குடியரசுத் தலைவரின் தேர்தல் முடிவுகளை உலகம் மதிக்க வேண்டும் என்பதோடு வெனிசுவேலாவின் மீதான அமெரிக்காவின் தலையீட்டையும் கண்டித்தனர்.

ஏராளமான நாடுகளில் மக்கள் திரள் இயக்கங்கள் அவர்களுடைய நாட்டில் உள்ள வெனிசுவேலாவின் தூதரகங்கள் முன் திரண்டு, பொலிவரியாவின் புரட்சி மற்றும் ஜனநாயகத்துக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர் கலீசியாவின் வீகோ , தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா, அங்கோலாவின் லுவாண்டா , நார்வேயின் ஆஸ்லோ, செர்பியா, எகிப்து, மாலி மற்றும் செனெகல் ஆகிய நாடுகளில் இருந்த மக்களமைப்புகள் அவர்கள் நாட்டிலுள்ள வெனிசுவேலாவின் தூதரகங்களில் தங்களின் ஒற்றுமையை அறிவித்த கூட்டங்களை நடத்தின. கங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் நாட்டின் கின்ஷாசா நகரில் இளம் விவசாயிகளின் அமைப்பினர் [The League of Young Peasants of the DRC (Ljp-RDC), "வெனிசுவேலாவின் மீதிருந்து கையை எடு" என்ற பதாகைகளுடன், முழக்கத்துடன் போராட்டங்கள் நடத்தினார்கள். தென் கொரியாவின் சியோலில், "உலகப் போர்களைத் தூண்ட வேண்டாம்! அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!" என்று பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் சமூகச் செயல்பாட்டாளர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். இத்தாலியில் ரோமில் சமூக செயல்பாட்டாளர்கள் வெனிசுவேலா குடியரசுத் தலைவர் நிகோலஸ் மதுரோவுக்கும், "சாவிஷ்ட்டா மக்கள்" என்று அன்புடன் அழைக்கப்படும் பொலிவரியாவின் புரட்சியாளர்களுக்கும் தங்களது ஆதரவு முழக்கங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்திப் போராட்டங்கள் நடத்தினார்கள்.

கடந்த 20-ஆம் நூற்றாண்டு முழுவதும் லத்தின் அமெரிக்க நாடுகளில் ஜனநாயக விரோதமான சதித் திட்டங்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈடுபட்டது. அதைப் போலவே இப்பொழுதும் நிகோலஸ் மதுரோவின் வெற்றிக்குப் பின் ஆட்சி மாற்றத்தை அது வலியுறுத்தியது. அதற்கு எதிராக ஆகஸ்ட் 9, 2024 அன்று அமெரிக்காவின் செயல்பாட்டாளர்கள் நியூயார்க் நகரத்திலுள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அலுவலகத்துக்கு முன் பெருந்திரளாகக் கூடினார்கள்; வெனிசுவேலாவில் மதுரோவை வீழ்த்திவிட்டு புதிய ஆட்சி அமைக்க வலியுறுத்தி ஆதரவு தெரிவித்ததாக ---- அது தயார் செய்த போலித் தரவுகளை கடுமையாக விமர்சித்தனர்; ஆகஸ்ட் 17, 2024 அன்று "பாக்ஸ் நியூஸ் தலைமை அலுவலகத்தில்' பேரணி நடத்தினார்கள. சோசலிசம் மற்றும் விடுதலை கட்சியின் உறுப்பினர்கள் [PSL-- Party for Socialism and Liberation] பாஸ்டன் நகரத்தில் 'பாஸ்டன் குளோபின்தலைமை அலுவலகத்தின் வெளியே பேரணி நடத்தினார்கள். சான் பிரான்சிஸ்கோவில், PSL கட்சியின் செயல்பாட்டாளர்கள், உலகின் பெரும் பணக்காரரான இலான் மஸ்கின் உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான X -ன் தலைமை அலுவலகத்தின் வெளியே மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டுவது மற்றும் தவறான தகவல்களைச் சமூக வலைதளத்தில் பரப்பும் இலானுடைய செயலைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்தினார்கள்.

ஆகஸ்ட் 17,2024 வெனிசுவேலாவில் வலதுசாரிகளை எதிர்த்தும், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த சாவோவின் ஆதரவாளர்களான இடது சாரிகள் வழிகாட்டுதலில் கராகசிலும் மற்றும் பிற நகரங்களிலும் மதுரோவுக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்தன. 

இதற்கிடையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகோலஸ் மதுரோ தலைமையிலான போராட்டங்களில் கராகசின் மத்திய பகுதியில் பெருந்திரளாக பங்கு கொண்டார்கள்; குறிப்பிடத்தக்கதாக சமூக அரசியல் இயக்கங்களும், சாவோவின் ஆதரவாளர்களான இடதுசாரி அமைப்புகளும் நடத்திய போராட்டங்களில் உறுதியான பங்கு கொண்டனர்.

வெனிசுலாவில் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியை முறியடிக்க இன்று உலகெங்கும் மக்கள் ஒன்று திரண்டு தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர். உலகின் “பழமையான ஜனநாயக நாடு” என்ற வேடம் கலைந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகம் இன்று உலகம் முழுவதும் அம்பலப்பட்டு நிற்கிறது.

 - கவிதா

(ஆதாரம்:Monthly Review Online ஆகஸ்ட் 24. 2024 ல் வந்த கட்டுரை)

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட