Skip to main content

Posts

Showing posts from November, 2023

சுற்றுச்சூழல் விதிமீறல்களும் உத்திரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தும்!

  உத்திரகாண்ட் மாநிலம் சார் தாம் (நான்கு மதத் தல) தேசிய நெடுஞ்சாலை (Char Dham National Highway Project) திட்டத்தின் ஒரு பகுதியாக உத்திரகாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் பர்கோட் சில்கியாரா சுரங்கப்பாதை இடிந்ததில் அதில் பணியாற்றி வந்த 41 தொழிலாளர்கள் நவம்பர் 12 ஆம் தேதியன்று அதிகாலை 5.30 மணி அளவில் சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அவர்கள் மீட்டெடுக்கப்பட்டனர். இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய நான்கு மதத் தலங்களை இணைக்க கூடிய நான்கு மதத் தல தேசிய நெடுஞ்சாலை திட்டம் 2016இல் திட்டமிடப்பட்டது. 12000 கோடி மதிப்பிலான 889 கி.மீ நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை திட்டம் இமயமலை பகுதியில் விரிந்த சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. பர்கோட் - சில்கியாரா சுரங்கப் பாதையானது 13 மீட்டர் அகலமும், 9 மீட்டர் உயரமும் கொண்டது. 4.5 கி.மீ தொலைவு கொண்ட இந்த இருவழி சுரங்கப் ப

நிலப்பறிப்பும் குண்டர் சட்டமும்!

  திருவண்ணாமலையில் மேல்மா மற்றும் அதனைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் மூன்றாவது சிப்காட் பூங்காவை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 2.7.23 முதல் போராடி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் இருபது பேரை தமிழ் நாடு அரசு கடந்த நான்காம் தேதி (4.11.2023) கைது செய்தது. பிறகு அவர்களில் ஏழு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருவண்ணாமலை ஆட்சியர் ஆணை பிறப்பித்தார். விவசாயிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்தது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உடனே தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளில் ஆறு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஆணையிட்டுள்ளார். அவர்களது குடும்பத்தினர் வேண்டிக் கொண்டதாலும் இனிமேல் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டோம் என்று அவர்கள் உறுதி அளித்ததாலும் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை இரத்து செய்து உள்ளதாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. ஆனால் மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் என்பவரின் மீதான குண்டர் சட்டம் மட்டும் ரத்து செய்யப்படவில்லை. எதிர்க் கட்சியாக இருக்கும்போது நண

கவிதைகளில் காசாவின் கண்ணீரும் செந்நீரும் …

கவிதைகளில் காசாவின் கண்ணீரும் செந்நீரும் …   தமிழில் நிழல்வண்ணன்   1.    ஓ ! காசாவின் குழந்தைகளே !                  மொஹம்மது ஃபஹத் உல்லா ஓ காசாவின் குழந்தைகளே நீங்கள் தான் எவ்வளவு வேதனையில் இருக்கிறீர்கள் நீங்கள் அழுகிறீர்கள் , புனித வீதியில் ஓடுகிறது உங்கள் தூய இரத்தம் உங்களில் சிலர் பிறந்து சில மாதங்களே ஆகின்றன சிலர் இன்னும் தொட்டிலில் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள் சிலர் தத்தித் தவழ்ந்து நடை பயில்கிறீர்கள்   உங்கள் அன்னையரின் கருவறையில் இருந்தபோது இந்த உலகம் அழகானது என்று நினைத்திருப்பீர்கள் காசா ஏன் உங்கள் நம்பிக்கைகளுக்கு மாறாக இருக்கிறது வானமெங்கும் தீச்சுவாலையும் புகை மூட்டமுமாய் ? பள்ளி இருக்கைப் பலகைகளில் நீங்கள் அமராமல் இருக்கச் செய்வது எது ? கொடூரமாகக் காயமுற்று மருத்துவமனைப் படுக்கைகளில் உணர்விழந்து கிடக்கிறீர்கள் ! சில நாட்களுக்கு முன்பு உங்கள் பெற்றோரின் அரவணைப்பில் நீங்கள் பறவைகளைப் போல கீச்சொலி எழுப்பித் திரிந்தீர்கள் இப்போதோ உங்கள் தந்தை தாயும் செய்