முதலாளிய உற்பத்திமுறை இலாபத்தை அடிப்படையாகக் கொண்டது . மென்மேலும் இலாபத்தைப் பெருக்குவதும் மூலதனத்தைக் குவிப்பதும்தான் அதன் நோக்கம் . தொடர்ந்து சந்தையைத் தக்கவைத்துக்கொள்ளவும் , மேலும் சந்தையை விரிவாக்கவும் அது பல வழிகளை மேற்கொள்கிறது . தொழில்நுட்பத்தில் மேம்பாடு தொடர்ந்து தொழில்நுட்பங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தேவைகளைப் புதியதாக உருவாக்கி தன் உற்பத்தியைத் தொடர்வதும் இலாபம் சம்பாதிப்பதும் ஒரு வழி . எடுத்துக்காட்டாக , அலைபேசியை (cellphone) எடுத்துக்கொள்வோம் . அதில் புதிய புதிய மாற்றங்களை தொழில்நுட்பத்தின் மூலம் புகுத்துவதன் மூலம் முந்தைய தயாரிப்புகளை (models) கால வழக்கு ஒழிந்துபோகச் செய்கிறது . மேம்பாடு செய்யப்பட்ட அலைபேசிகளுக்கு புதிய சந்தையை உருவாக்குகிறது . அது போலவே , கணினி , தொலைக்காட்சிப் பெட்டிகள் , குளிர் சாதனப் பெட்டிகள் , சலவை இயந்திரங்கள் , மோட்டார் வாகனங்கள் என நுகர்வுப் பொருட்கள் அனைத்திலும் புதிய புதிய மேம்பாடுகளைத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் கொண்டு வந்து முதலாளியம் தொடர்ந்த...
22.10.2025- இல் ' ஏற்றுமதிக்கான விவசாயப் பொருட்களை அதிக அளவில் விளைவிக்க வேண்டும் ' என்று இந்திய விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் தனது உரையில் அறிவுறுத்தினார். இதன் பொருள் இந்திய விவசாயிகள் உணவு தானியங்களை விளைவிப்பதிலிருந்து விலகி , அதற்குப் பதிலாக அயல்நாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதே ஆகும். இது சமீபகாலமாக உலக வங்கி போன்ற நிறுவனங்களும் அவற்றின் குரலை எதிரொலிக்கும் இந்திய பொருளாதார வல்லுநர்களும் மிக உறுதியாக வெளிப்படையாக வலியுறுத்திக் கொண்டிருப்பதாகும் ; இதுவே ஏகாதிபத்திய நாடுகளின் வேண்டுதலும் ஆகும். ஏகாதிபத்திய நாடுகள் , உதாரணமாக அமெரிக்கா அந்த நாட்டின் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களின் மொத்த மதிப்பில் பாதிக்கும் மேலாக கடந்த பல வருடங்களாக அவர்களுக்கு மானியங்கள் வழங்குகின்றது ; இந்த விவசாயிகள் அவர்களுடைய நாட்டின் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்யும் விளைபொருட்களை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். ஆகையால் ஏகாதிபத்திய நாடுகள் இந்தியா போன்ற நாடுகள் தங்களது விளை நிலங்களை உள்நாட்டுத் தேவைக்கான உணவு...