Skip to main content

Posts

அ.கா. ஈஸ்வரனின் பதில் மீது சில கருத்துகள்

  MELS இணைய வழிப் பயிலரங்கில் லெனின் எழுதியுள்ள ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் பற்றி தோழர். அ.கா.ஈஸ்வரன் அறிமுக உரை ஆற்றியுள்ளார் ( https://senthalam.com/1402 ) . மார்க்சியத்தைப் பற்றிய அவருடைய தவறான புரிதலை விளக்கி  “சோசலிசப் புரட்சி ஒரு செயல்தந்திரம்” - அ.கா.ஈஸ்வரன் கண்டுபிடித்துள்ள புதிய கோட்பாடு! என்னும் கட்டுரையை வெளியிட்டோம் ( https://senthazhalmagazine.blogspot.com/2025/06/blog-post_30.html ) . ஆனால், எமது விமர்சனத்தை புரிந்துக் கொண்டு பதிலளிக்காமல் தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கின்றார். எமது கட்டுரையின் மீது அ.கா.ஈஸ்வரன் எழுதிய மறுப்புரைக்கான பதில் தான் இந்தச் சிறிய பதிவு. நீங்கள் (அ.கா.ஈஸ்வரன்) கூறுவது போல ரசியாவில் அக்டோபரில் லெனின் சோசலிசப் புரட்சியை நடத்தியதற்குக் காரணம் ரசியாவில் தோன்றிய இரட்டை ஆட்சிமுறை காரணமல்ல. முதல் கட்டத்தில் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்தது. அதனால் முதலாளியப் புரட்சி கட்டம் முடிவுற்றது. அதன் காரணமாகவே சோசலிசப் புரட்சி திட்டத்தை லெனின் முன் வைத்தார். அதனைத் தெளிவாகவே லெனின் கீழ்க்காணும் வரிகளில் குறிப்பிடுகிறார். “ இன்...
Recent posts

மனிதப்பண்பை அழிக்கும் ஏகாதிபத்தியப் போர்கள்!

  அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஐரோப்பிய ஆளும் வர்க்கமும் தங்களுடைய மேலாதிக்கத்துக்காக நடத்திக் கொண்டிருக்கின்ற போரின் சிதைவுகளில் உலக அமைதி உருக்குலைந்து அழிந்து கொண்டிருக்கிறது . இந்தப் போர்கள் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை , வீடுகளை , மகிழ்ச்சியை, வாழ்வாதாரங்களை சூறையாடிவிட்டன ; அத்துடன் அவர்களது நூலகங்களையும் கல்வி கற்கும் இடங்களையும் அருங்காட்சியகங்களையும் , ஆவணக் காப்பகங்களையும் வரலாறுகளையும் சூறையாடிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஐரோப்பிய மேலாதிக்கங்களும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது, ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், அமைதியையும் உயர்த்திப் பிடிப்பது என்ற பொய்யின் அடிப்படையில் ஏவப்பட்ட போர்களால் ஆப்கானிஸ்தான் , பெய்ரூட் , போஸ்னியா , கம்போடியா , கிரனெடா , ஈரான் , ஈராக் , கொரியா , கொசோவோ , லாவோஸ் , பனாமா, பாலஸ்தீனம் , சோமாலியா , வியட்நாம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் மக்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் . ஈரான் மற்றும் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களும் , அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக...

அதிகாரவர்க்கத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்!

  திருப்புவனம் அருகில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணி புரிந்து வந்தவர் அஜித்குமார் என்ற இளைஞர். அவர் நகை காணாமல் போனது சம்பந்தமாக தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதையால் 29..6.25 அன்று கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கை கூடப் பதியப்படாமல், விசாரணை என்ற பெயரில் மூன்று நாட்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு அந்த இளைஞர் போலிசாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலைக்கு எதிராக மக்கள் மத்தியிலிருந்தும், எதிர்க் கட்சிகளிடமிருந்தும், தனது கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் பரந்த அளவில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதால், மக்களைச் சமாதானப்படுத்தவும், எதிர்ப்பை மழுங்கடிக்கவும் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் பணமும், வீட்டு மனைப் பட்டாவும், அவருடைய தம்பி நவீன் குமாருக்கு ஆவின் நிறுவனத்தில் வேலையும் தந்துள்ளது. தனிப்படையில் இருந்த போலீஸ்காரர்கள் ஐந்து பேரைக் கைது செய்துள்ளது. போலீஸ் துணை கண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்து...