Skip to main content

Posts

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்

  வெனிசுவேலாவில் ஜூலை 28, 2024 அன்று நடந்த தேர்தலில் நிகோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஊதுகுழலான முதலிய ஊடகங்களும் அந்தத் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று கூறி அந்தத் தேர்தல் முடிவை எதிர்த்துப் பரப்புரைகளில் ஈடுபட்டன. வெனிசுலாவில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்திய ஆதராவாளர்கள் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்க்கும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவரது ஆட்சியைக் கவிழ்க்க வலது சாரியினர்   மேற்கொண்ட சதி முயற்சிகளையும் தேர்தலின் போது   அவர்கள் அரங்கேற்றிய வன்முறைகளையும் , எதிர்த்து உலகம் முழுவதும் ஏராளமான நகரங்களில் மக்கள் இயக்கங்கள் , இடதுசாரிக் கட்சிகள் , தொழிற்சங்கங்கள் ஆகியவை ஆகஸ்ட் 17, 2024 அன்று வெனிசுவேலாவுக்குப்   பக்கபலமாக சர்வதேச ஒற்றுமைக்கான செயல்பாட்டு தினத்தில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். சர்வதேச மக்கள் கூட்டமைப்பு , ALBA இயக்கங்கள் , சிமோன் பொலிவார் நிறுவனம் மற்றும் கரீபிய மக்கள் கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து , ஆகஸ்ட் 9, 2024 அன்று தொடங்கப்பட்ட சர்வதேச ஒற்றுமையின் ஒரு பகுதியான இந்த சர்வதேச செயல் தினம
Recent posts

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

வங்கதேசப் போராட்டக் களத்தின் பின்புலமும், படிப்பினைகளும்!

  வங்காளதேசத்தின் பிரதமர் நாட்டை விட்டுத் தப்பியோடும் வரையில் , மேற்கத்திய ஊடகங்களும் , சர்வதேச நிதி நிறுவனங்களும் அந்த நாடு பொருளாதாரத்தில் வெகுவேகமாக முன்னேறி வருவதாகப் பிரச்சாரம் செய்து வந்தன . அப்படி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தால் மக்கள் ஏன் வீதிக்கு வந்து இத்துணைப் பெரிய போரட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும் ? அதுவும் அரசு பணிகளில் இடஓதுக்கீடு சம்பந்தமான பிரச்சனை அதற்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும் ? என்ற கேள்விகள் எல்லோருக்கும் எழுகின்றது . வங்காளதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெகுவிரைவில் டென்மார்க்கையும் , சிங்கப்பூரையும் விஞ்சிவிடும் என்றும் , தனிநபர் உள்நாட்டு உற்பத்தியின் அளவானது இந்தியாவைவிட அதிகமாக உள்ளது எனவும் சர்வதேச நாணய நிதியம் ஆருடம் உரைத்தது . வங்காளதேச அரசின் அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் அதன் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 6.6% என்ற அளவில் உள்ளது . குறைந்த கூலிக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பால் அபரிமிதமான இலாபம் ஈட்டிவரும் ஆயத்த ஆடை உற்பத்தியானது உலகளாவிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைக் கொண்டு இந்த வளர்ச்சி காட்டப