Skip to main content

Posts

Showing posts from February, 2022

காவித்துண்டும் வேண்டாம்! ஹிஜாப்பும் வேண்டாம்!

கர்நாடகாவிலும், காசுமீரிலும் பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் மூலம் மத உரிமைகளைப் பின்பற்றுவது குறித்து விவாதங்கள் நாடெங்கும் இன்று முன்வந்துள்ளன. இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி மத அடிப்படையில்  பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களிடம் தங்களுடைய வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அதிகரித்துக் கொள்ளவும்  கர்நாடகத்திலும் மத்தியிலும் ஆட்சியில் உள்ள முதலாளிய வர்க்கத்தின் நம்பகமான ஏஜண்டான  பா.ஜ.க. திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது.  நடந்தது என்ன? கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பைச் சேர்ந்த 8 மாணவிகள், ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்புகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்தப் பள்ளியில் ஹிஜாப் அணிவது நடைமுறையில் இல்லை. அந்தப் பள்ளியில் மொத்தம் 76 முஸ்லீம் மாணவிகள் பயில்கின்றனர், அதில் 8 மாணவிகள் மட்டும் பெற்றோர் மூலம் டிசம்பர் மாதம் பள்ளித் தலைமையிடம் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கேட்டனர். பள்ளி நிர்வாகம் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால்

பாட்டாளி வர்க்கத்திற்கு வழி காட்டும் ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டம்!

  தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உலக அளவில் செல்போன் மற்றும் மின்னணு உதிரிப் பாகங்களைப் பிற நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. ஆப்பிள் , மைக்ரோசாப்ட் , சியோமி போன்ற பல நிறுவனங்களுக்கு உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றது , இந்தியாவில் நோக்கியா நிறுவனத்திற்கும் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்கும் நிறுவனமாக 2007 இல் கால் பதித்தது ; இன்று தமிழ்நாடு , ஆந்திரப் பிரதேசம் , மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தனது கிளைகளை விரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் 3 கண்டங்களில் 12 லட்சம் தொழிலாளர்களின் உழைப்பில் வளரும் இதன் ஆண்டு வருமானம் சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய் ஆகும். உலகத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் உதிரிப் பாகங்களில் சுமார் 40% ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் பன்னாட்டு நிறுவனம் உலகம் முழுவதும் தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பதால் ஒரு மாபெரும் பன்னாட்டு உற்பத்தி மையமாக உருவாகி , தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் , அரசிடம் தனக்கா