Skip to main content

Posts

Showing posts from February, 2023

வடவர் வருகையும் தியாகுவின் முதலாளிய வர்க்க சேவையும்!

14.02.2023 அன்று ‘வடவர் வருகையும் தமிழ்நாடும்’ என்னும் தலைப்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தோழர் தியாகு உரையாற்றியிருந்தார். உரையின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு அந்நிய மண்ணிற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பற்றி விவரித்த தியாகு பின்னர் அதற்கான தீர்வாக அவர்களுடைய வருகையைத் தடுக்க வேண்டும் என்பதை முன்வைக்கிறார். வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்குக் கடவுச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இதன் மூலம் அவர்கள் தமிழ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும் என்கிறார். அப்படியானால், நாடுகளுக்கிடையே கடவுச் சீட்டு முறை இருப்பதால் தொழிலாளர்கள் புலம் பெயராமல் இருக்கின்றார்களா? அல்லது தடுக்கப்படுகின்றனரா? ஒவ்வொரு நாடும், அந்த நாட்டின் முதலாளி வர்க்கத்தினருக்குத் தேவையான உழைப்புச் சக்தி மிகக் குறைந்த கூலியில் எவ்வளவு தேவைப்படுகிறதோ அந்தளவிற்கு அவை தொழிலாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றன. உள்நாட்டு முதலாளிகள் தங்கள் நாட்டுத் தொழிலாளர்களுக்கு முதலில் வேலை வாய்ப்பை வழங்கி விட்டுப் பின்னர் எஞ்சியவற்றை அயல் நாட்டுத் தொழிலாள

எது வன்முறை? எவர் வன்முறையாளர்?

” ஒரு நபர் ( அ ) குழுவுக்கு எதிராக காயம் , மரணம் , உளவியல் தீங்கு , வளர்ச்சியின்மை ( அ ) இழப்பு இவற்றை ஏற்படுத்தும்படியாக , இவை நிகழும் வாய்ப்புக்களை உருவாக்கும்படியாக உண்மையாகவோ ( அ ) அச்சுறுத்தும்படியாகவோ உடல் வலிமை ( அ ) அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும் ” இது வன்முறை பற்றிய உலக சுகாதார அமைப்பின் வரையறை . பொதுவெளியில் வன்முறை என்பதற்கான சாதாரணப் புரிதல் என்னவாக இருக்கிறது ? ஒரு மனிதனை சிலர் சேர்ந்து தாக்குவது , சிலரை பலர் தாக்குவது , அதிகாரத்தின் வழியாக கட்டுக்குள் வைப்பது , ஆக்கிரமிப்பது . இதுதான் பிரதானமான சமூகப் புரிதல் . இதை வரலாற்று வழியிலும் சற்று விரிவாக , ஆழமாக பார்க்க வேண்டியதிருக்கிறது . விலங்கினங்கள் தன் உணவுக்கும் வேட்டையாடுவதற்கும் , தனது வசிப்பிடத்தில் வேறு விலங்குகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் சக விலங்குகள் மேல் வன்முறையை மேற்கொள்ளும் . இதுதான் வன்முறையின் ஆதிப் பருவமாக இருந்தது . இதை விலங்கின உணர்வு என்கிறோம் . அதுவே , மனிதர்களின் வேட்டையில் வேறு வடிவம் எடுத்தது . அப்போது அ