Skip to main content

Posts

Showing posts from May, 2024

நெதன்யாகு கொடூரமான மன நோய் கொண்ட அரக்கன்! தெற்கு உலகே இந்தக் கொடூரங்களுக்கு எதிராக விழித்திடு!

  " கண்ணுக்குத் தெரியும் எதிர்காலம் வரை இத்தகைய கொடூரங்களை நிறுத்த மாட்டோம் " எனப் பைத்தியக்கார வெறியுடன் , வெட்ககரமான முறையில் உலகத்துக்கு உறுதியுடன் அறிவித்து , அந்தக் கட்டளையால் இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடிக்கப்பட்ட குழந்தைகளைக் கடந்த 4 மாதங்களாக கொன்றுக் கொண்டிருக்கிறது . வெளிப்படையாகத் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் இத்தகைய கொடுஞ்செயலை இந்த மானுட உலகம் எப்படி அனுமதித்துக் கொண்டு இருக்கிறது ? இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆணையின்படி , 4 மாதங்களாக , சட்டத்திற்கு விரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலின் விமானப்படை இடைவிடாது குண்டு மழை பொழிந்து தாக்கிக் கொண்டு இருக்கிறது ; இஸ்ரேல் ராணுவத்தால் 31,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் ; பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமுற்று உள்ளனர் . இஸ்ரேல் ஆக்கிரமிப்புச் செய்துள்ள பகுதியில் மக்களுடைய அடிப்படைத் தேவைகளான உணவு , தண்ணீர் , மின்சாரம் , எரிபொருள் , மருந்துகள் என்று அனைத்தையும் தனது ஆணைகள் மூலம் காஸாவுக்குத் தட