இந்தியாவை மாற்றி அமைப்பதற்காக அணு ஆற்றலின் நீடித்த பயன்பாட்டுக்கும் மேம்பாட்டுக்குமான சட்டம் (Sustainable Harnessing and Aarancement of Nuclear Energy for Transforming India - SHANTI) 2025 (சாந்தி) என்ற புதிய மசோதா ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் பாராளுமன்றத்தில் , பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றப்பட்டுள்ளது ; இந்த மசோதா முறைப்படி பாராளுமன்றத்தின் நிலைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமல் , விஞ்ஞானிகள் , சுற்றுச்சூழல் நிபுணர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமலேயே மத்தியில் ஆளும் பாஜகவால் வழக்கம் போல நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் சட்டம் இந்தச் சட்டம் இந்தியாவின் அணுசக்தித் துறையை தனியார் முதலீடுகளின் மூலம் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது ; அணுசக்தி துறையின் ஒவ்வொரு பிரிவையும் தனியார்மயமாக்க ம் ஊக்குவிக்கிறது ; மக்களுக்கான பாதுகாப்பு விதிகளைப் புறந்தள்ளி நீர்த்துப் போகச் செய்துள்ளது. முன்னேற்றம் என்ற போலியான முகத் திரையுடன் இந்தச் சட்டம் மக்கள் பாதுகாப்பையும் தேசப் பாதுகாப்பையும் மற்றும் இந்த...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்