Skip to main content

Posts

Showing posts from February, 2025

அமேசானின் பொருளாதார பயங்கரவாதம்!

  பயங்கரவாதம் என்பது வன்முறைச் செயலாகும் --- அது பெரும்பாலும் அரசியல் ரீதியா ன அல்லது ஒரு கருத்தியல் ரீதியான நோக்கத்துடன் அப்பாவி மக்களை த் துன்புறுத்தும் செயலாகும். இதன் அடிப்படையில் அமேசான் நிறுவனம் கனடாவின் குவெபெக் நகரத்திலிருந்த தனது இருப்புக் கிடங்கு ஒன்றில் தொழிற்சங்கம் உருவாவதை த் தடுப்பதற்காக அங்கிருந்த தனது 7 இருப்புக் கிடங்குகளையும் மூடியது ஒரு பொருளாதார வன்முறை ச் செயலாகும். இதனால் வேலை இழக்கும் 1700 தொழிலாளர்களின் வாழ்க்கை மிக மோசமாக ச் சீரழியும் ; சிலர் இதிலிருந்து எப்பொழுதுமே மீண்டு வர மாட்டார்கள். இந்த வேதனை அவர்களது குடும்பம் மற்றும் அவர்களது சமூகம் முழுவதையும் பாதிக்கும் ஒன்றாகும். இந்த க் கிடங்குகளை மூடுவதற்கு இட்டுச் சென்ற தொடர் நிகழ்வுகளில் இந்த த் தொழிலாளர்களின் பங்கு ஒன்றும் இல்லை. லாவல் நகரத்தில் இருந்த ஒரு கிடங்கில் 2024- ஆம் ஆண்டில் தொழிற்சங்கம் சட்டரீதியாக அமைக்கப்பட்டது. மற்ற ஆறு கிடங் கு களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் இதில் இணையவில்லை என்றாலும் தொழிற்சங்கத்தை உடைத்து நொறுக்கும் அமேசான் நிறுவனத்தின் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தங்களை ச் ...

பாஜகவின் ஆணவமும் தி.மு.க.வின் போலித்தனமும்!

  ஒருங்கிணைந்த  கல்வி  திட்டம் (Samagra Shiksha) என்ற திட்டத்திற்காகத் தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய ரூ .2152 கோடியை கடந்த ஓராண்டு காலமாக ஒன்றிய அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது . இதனால் 40 இலட்சம் மாணவர்களும் 32000 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் . புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டால் தான் இந்த நிதியை அளிப்போம் என மோடியின் அரசாங்கம் முரட்டுப் பிடிவாதம் பிடித்து வருகிறது . அதன் மூலம் தமிழ்நாடு அரசாங்கம் புதிய மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது . ஒன்றிய அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தமிழ்நாடு அரசாங்கம் புதிய மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் , மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் , அப்பொழுதுதான் நிதி வழங்குவோம் என்றும் ஆணவத்துடன் அறிவித்துள்ளார் ; மேலும் , மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தாதன் மூலம் தமிழ்நாடு அரசாங்கம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படுகி...