Skip to main content

Posts

Showing posts from September, 2025

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

இயற்கையைச் சூறையாடும் முதலாளிகளும் அதிகாரவர்க்கமும்!

  28.8.25 அன்று பருவநிலை மற்றும் சூழலியல் நீதி க்கான தேசியக் கூட்டமைப்பு , சத்தீஸ்கர் வனத்துறை ,1740 ஹெக்டேர் பரப்பளவு உள்ள ஹேஸ்டியோ காட்டின் அடர்ந்த வனப்பகுதியில் மேலும் அதிக அளவில் நிலக்கரி எடுப்பதற்காக கெண்டே விரிவாக்கப் பகுதிக்கு அனுமதி அளித்ததை வன்மையாக கண்டித்துள்ளது. நிலக்கரி எடுப்பதற்கான இந்தப் பகுதி ராஜஸ்தானின் ராஜ்ய வித்யுத் உட்பாடன் நிகம் லிமிடெட் ( RRVUNL) நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது ; இந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு சுரங்கம் தோண்டும் வேலையை ஒப்படைத்துள்ளது. அளிக்கப்பட்ட 137 ஹெக்டேர் வனப்பகுதியில் - ஹேஸ்டியோ வனத்தின் ஏராளமான வன உயிரினங்கள் நிறைந்த இந்த வனப்பகுதியில் - பார்சா ஈஸ்ட் மற்றும் கந்தா பேசன் ( PEKB) நிறுவனம் நிலக்கரி எடுப்பதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் ஏற்கனவே வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. உடனடியாக அதிகாரப்பூர்வமாக சத்தீஸ்கர் மாநிலத்தின் வனத்துறை அளித்த இந்த அனுமதி நீக்கப்பட வேண்டும் என்று நாம் உறுதிபடக் கூறுகிறோம். "வனப்பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு சட்டபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் , இந்திய வனப்பகுதியை சார்ந்த பழங்குடியினருக...

முதலாளித்துவத்தின் சடங்குகள்!

  முதலாளித்துவக் கதைகூறலை மேலாதிக்கம் கொண்டதாக வளர்த்தெடுப்பதற்கு முதலாளித்துவத்தின் சடங்குகள் முக்கியமானவை . கதை சொல்வதைத் தவிர முதலாளித்துவத்துக்குத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள வேறு மாற்றுக்கள் இல்லை . இயல்புக்கு மாறான மற்றும் இயற்கைக்கு மாறான செயல்முறைகளும் நிறுவனக் கட்டமைப்புக்களும் மட்டுமே தங்கள் அன்றாட வாழ்க்கையில் சாத்தியமான வாய்ப்புக்கள் என்று மக்களை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கு , மதங்களைப் போல , முதலாளித்துவமும் சடங்குகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது . முதலாளித்துவ சமுதாயத்தின் சமூக , பொருளாதார , மற்றும் சந்தை உறவுகள் தனிநபர்களாலும் சமூகங்களாலும் உள்வாங்கிக் கொள்ளப்படவேண்டும் , அவற்றுக்கு அறிவார்ந்த விளக்கமளிக்க வேண்டும் , அதன் மூலம் உலக வாழ்வில் அவற்றை நிரந்தரமாக்க வேண்டும் . முதலாளித்துவ சமுதாயத்தையும் அதன் கலாச்சாரத்தையும் இயல்பானவையாகவும் இயற்கையானதாகவும் உணரச்செய்ய வேண்டும் . அதற்கு இந்தச் சடங்குகள் உதவுகின்றன . அரசியல் , கலாச்சார , பொருளாதார , சமூக , மற்றும் கல்வித் திட்டங்களைக் கட்டுப்படுத்தவும் பழக்கப்ப...