Skip to main content

ஒரு தீப்பொறி!

 
இந்த நல்லிணக்கம் உனக்கேன் உறுத்துகிறது?

மறந்துவிடாதே ஒருபோதும்

கூண்டுப் பறவையின் பாடல் கூட

காட்டுத் தீயைப் போல

உலகெங்கும் பரவலாம்

அதன் அலகில் இருக்கும் வறண்ட புல்

கூடுகட்டுவதற்காக இருக்கலாம்

ஆனால் நீ செய்வதென்ன

சிறு பொறியால் அதைப் பற்றவைத்து

கொழுந்துவிட்டு எரியச் செய்கிறாய்

மார்பின் அளவல்ல ஒரு மனிதனை உருவாக்குவது

முதலைக் கண்ணீர் கூருணர்வைக் காட்டாது

பிணியுற்ற பறவை குறித்து நீயும் நானும்

என்ன உணர்கிறோம் என்பதுதான் விடயம்

நீ கூண்டில் அடைத்துள்ள பறவையின் பாடல்

எங்கள் குரல்வளையில் ஆழ வேர்கொண்டுள்ளது

ஆம், மக்கள் ஒரு கலைஞனை அரவணைக்கிறார்கள்

அதிகாரம் படைத்தவர்களுக்கு அவர்களைப் பற்றிப்

பேசவும் பாடவும் பாணர்கள் வேண்டும்

மாறிக்கொண்டிருக்கும்

காற்றின் திசையை உணர்ந்துகொள்

கூண்டின் கதவைத் திறந்துவிடு

இல்லாவிட்டால்

சுயமோகத் தங்க எழுத்துக்களில்

வடிவமைக்கப்பட்ட உனது மூடங்கியைக்

கவனமாகப் பார்த்துக்கொள்

ஒரு சிறு தீப்பொறி அதிவிரைவில் காட்டுத் தீயாக

ஆகிவிடுகிறது.

 

சிரிதர் நந்தேத்கர்

தமிழில் நிழல்வண்ணன்

 

சிரிதர் நந்தேத்கர் புகழ்பெற்ற மராத்திக் கவிஞர், மொழிபெயர்ப்பாளரும் பதிப்பாசிரியரும் கூட. தற்போது மராட்டியத்தில் அவுரங்காபாத்தில் வசிக்கும் அவர் ஆங்கிலம் கற்பிக்கிறார். திலீப் வி சவான் இக்கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர் ஆங்கில இலக்கியம் கற்பிக்கிறார்; செய்தித்தாள்களுக்கு பத்திகள் எழுதுகிறார்; ஆங்கிலம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மொழிபெயர்ப்புச் செய்துவருகிறார். 

நன்றி: ஜனதா வீக்லி

Comments

Popular posts from this blog

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...