Skip to main content

ஒரு நாள் என் கண்மணியைப் பார்த்தேன்!

 
கொலை நிகழ்ந்த முந்திய இரவு சூரியனும் சந்திரனும்

பணப்பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தன

இந்தியக் கொடியை அவளுடைய வாயில் திணித்து

அவளுடைய பேச்சைப் பறித்திருந்தார்கள்

பல மனிதர்கள் மின்னும் வாள்களுடன் விரைந்தார்கள்

தீரச் செயலுக்குப் பெற்ற பரிசைப் போல

அவளை உயரத் தூக்கிப்பிடித்திருந்தார்கள்

அவர்களுடைய முகத்தில் காறித் துப்பிவிட அவள் விரும்பினாள்

ஆனால் அவர்களுக்கு முகங்கள் இல்லை

ஏழு கடல்களின் சக்தியும் தாக்கியதைப் போல

அவளைச் சங்கிலியால் பிணைத்திருந்தனர்

அந்தக் காமுகர்கள்

அவள் மீது வீசப்பட்ட வேட்டைக்காரர்கள் வலைக்கு எதிராக

போராடிக் கொண்டிருந்த அவள்

சுற்றியிருந்த விளக்குகளுக்குப் பின்னால் மறைந்து போனாள்

மழையெனக் கொட்டிக்கொண்டிருந்தது

அவளுடைய கண்ணீர்

ஆனாலும் தாகமெடுத்த நூற்றுக்கணக்கான நாக்குகளுக்கு

தாகம் தீரவில்லை.

ஆற்றின் கரைகளில் சதைக் கோளங்கள்  

சிதறிக் கிடந்தன

அவளுடைய ஆடைகள் கந்தல் கந்தலாய்

கிழிக்கப்பட்டிருந்தன

அந்த நெறித்த தழுவலில் அவளது உயிரின்

தசை நார்கள்  மண்ணில் இரத்தத்தைக் கொட்டித் தீர்த்தன

இருளின் அரக்கர்கள் அவளுடைய கண் விழிகளைக்

கோலியாக்கி விளையாடினார்கள்

அவளுடைய தாலியை வணிகனிடம் விற்று

குடித்துக் களிவெறியாடினார்கள்

அவளுடைய மலருடலின் இதழ்களை

ஒவ்வொன்றாகக் கசக்கினார்கள்  

பின்னர் அவளை எடுத்துச் சென்றார்கள்

எங்கென்று யாருக்குத் தெரியும்?

எனது கண்மணியை ஒருநாள் பார்த்தேன்

என்னை நான் கண்ணாடியில் பார்த்தேன்

அவளுடைய முகம் கறையான் புற்றாக உயர்ந்திருந்தது

அதன் உச்சியில் ஒரு செந்நாகம் படமெடுத்து

ஆடிக்கொண்டிருந்தது

கண்ணீர் வற்றிய அவளுடைய விழிகள்

மின்னும் குத்துவாள்களாக வானோக்கி முளைத்திருந்தன

அவளுடைய கருத்த உடலில் கங்கையும்

யமுனையும் ஓடின

அவளுடைய வாயில் நெருப்பு எரிந்தது

கிராமத்துப் புதரில் நச்சரவம் ஒன்று

தங்கியிருந்தது

அதன் மொத்த உடலும் நோய் பிடித்து

பல வண்ணப் புள்ளிகளைக் கொண்டிருந்தது

பார்க்கும் இடங்களிலெல்லாம்

நான் புலிகளைப் பார்க்கிறேன்

சிங்கங்களைப் பார்க்கிறேன்

சிறுத்தைகளைப் பார்க்கிறேன்

எனது கண்மணியின் உடலைக் கிழித்துப் போட்டது

எந்த மிருகம்?

மரங்களும் கற்பாறைகளும் நிமிர்ந்து நிற்கின்றன

வானை நிரம்பிக் கொண்டிருப்பது யாருடைய குரல்?

இந்தியாவின் தெருக்களில் வெள்ளிக் குத்துவாட்கள்

அணிவகுத்துச் செல்கின்றன  

இரத்தத்தில் முக்கியெடுத்த கந்தைகள்

ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

 

சித்தலிங்கய்யா

தமிழில் நிழல்வண்ணன்

 

கர்நாடகாவின் எதிர்க் கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் சித்தலிங்கய்யா தேவய்யா (1954, பெங்களூர்) 1970 களில் கன்னடத்தில் தலித் இலக்கியத்தைத் தொடங்கிவைத்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கர்நாடகா தலித் சங்கர்ஷ சமிதியின் நிறுவன உறுப்பினரான அவர் தனது கவிதை மூலமாகவும் எடுத்துக்காட்டாகத் திகழும் எதிர்ப்புப் பாடல்கள் மூலமாகவும் தலித்துக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பல தலைமுறைகளுக்குத் தூண்டுகோளாக இருந்துவருகிறார். ஐம்பது ஆண்டுகளாக சித்தலிங்கய்யாவின் கவிதைகள் ஆணாதிக்க சாதி அமைப்பு முறையின் தீவிர விமர்சனங்களாக இருந்துவருகின்றன.

 

நன்றி: ஜனதா வீக்லி

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட