Skip to main content

நவம்பர் சோசலிசப் புரட்சியின் படிப்பினையிலிருந்து கற்போம்!


ரசியாவில் ஜார் மன்னனைத் தூக்கி எறிந்த 1917 பிப்ரவரி முதலாளியப் புரட்சிக்குப் பிறகு  லெனின் தனது புகழ் பெற்ற  ஏப்ரல் ஆய்வுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:



”ரசியாவில் இப்போதுள்ள சூழ்நிலையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த நாடு புரட்சியின் முதல் கட்டத்திலிருந்து இரண்டாவது கட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதாகும். முதல் கட்டம், பாட்டாளி வர்க்கத்துக்குப் போதுமான வர்க்க உணர்வும் அமைப்பும் இல்லாமையினால் முதலாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை வழங்கியது. இரண்டாவது கட்டம், பாட்டாளி வர்க்கத்தின் கையிலும் உழவர் வர்க்கத்தின் மிகவும் வறிய பிரிவினரின் கையிலும் அதிகாரத்தை         வழங்க வேண்டும்.”
(லெனின்  தொகுப்பு நூல்.24 பக்.22 )



ஓராண்டுக்குப் பிறகு நவம்பர் புரட்சியைத் திரும்பிப் பார்த்த லெனின் பின்வருமாறு எழுதினார்:


 நமது கருத்தின் சரியான தன்மையை புரட்சி மேற்கொண்ட பாதை உறுதி செய்திருக்கிறது. முதலாவது, ’அனைத்து’ உழவர்களையும் ஒருங்கிணைத்து முடியரசுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் மத்தியகாலத்தன்மைக்கும் எதிராக நடத்திய போராட்டம்; இந்த அளவுக்கு முதலாளிய வர்க்க ஜனநாயகப் போக்குடையதாக புரட்சி அமைந்திருந்தது. பிறகு கிராமப் பணக்காரர்கள், குலாக்குகள், கொள்ளை இலாபக்காரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய முதலாளியத்துக்கு எதிராக ஏழை உழவர்கள், அரைப் பாட்டாளிகள் மற்றும் சுரண்டப்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து நடத்திய போராட்டம்; இந்த அளவுக்கு புரட்சி ஒரு சோசலிசப் போக்குடையதாக அமைகிறது. முதல் கட்டத்துக்கும் இரண்டாவது கட்டத்துக்கும் இடையில் ஒரு செயற்கையான சீனச் சுவரை எழுப்ப முயல்வதும் பாட்டாளி வர்க்கத்தின் ஆயத்த நிலைமை, பாட்டாளி வர்க்கம் ஏழை உழவர்களோடு  கொண்டிருந்த ஐக்கியத்தின் அளவு என்பதை விடுத்து வேறு எதனைக் கொண்டும் இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்க முயல்வதும் மார்க்சியத்தை அபாயகரமான வழியில் சிதைப்பதாகும்; அதைக் கொச்சைப்படுத்துவதாகும்; அதற்குப் பதிலாக மிதவாதத்தைக் கொண்டு வருவதாகும்.          
-(லெனின்,தொகுப்பு நூல்..28,பக்.300)


Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடி...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...