Skip to main content

நான் ஒரு போதும் திரும்பமாட்டேன்!


விழித்தெழுந்திட்ட பெண் நான்

எரிக்கப்பட்ட எனது குழந்தைகளின் சாம்பலினூடாக

உதித்தெழுந்து புயலானவள் நான்

பீரிட்ட எனது சகோதரனின் குருதியோடையிலிருந்து

உதித்தெழுந்து புயலானவள் நான்.

எனது தேசத்தின் சீற்றமே எனக்கு ஆற்றலை அளித்தது

அழிக்கப்பட்ட, எரிக்கப்பட்ட எனது கிராமங்கள்

எதிரிக்கு எதிரான வெறுப்பை எனக்குள் நிரப்பின

, எம் நாட்டு மக்களே!

நான் பலவீனமானவள், திறனற்றவள்

என்று இனியும் கருதாதீர்

விழித்தெழுந்திட்ட ஆயிரக்கணக்கான பெண்களுடன்

எனது குரல் கலந்துவிட்டது

எனது கரங்கள்

ஆயிரக்கணக்கான போராளிகளின் கரங்களை

இறுகப் பற்றிக்கொண்டுள்ளன.

இந்தத் துயரங்கள் அனைத்தையும் துடைத்தெறிய

அடிமை விலங்குகள் அனைத்தையும் உடைத்தெறிய

விழித்தெழுந்துவிட்ட பெண் நான்

எனது பாதையை நான் கண்டுகொண்டேன்

ஒருபோதும் திரும்பமாட்டேன்.

ஆப்கானிஸ்தானத்தின் மகத்தான கவிதாயினி மீனா பெண்விடுதலைக்காகப் போராடி உயிரீந்தவர். 1977 இல் ஆப்கானிஸ்தான் புரட்சிகரப் பெண்கள் சங்கத்தைத் தோற்றுவித்தவர். இசுலாமிய தீவிரவாதிகளுக்கும் இரசிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எதிராகப் பெண்களின் உரிமைகளுக்காகத் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டவர். அவர் 1987 இல் பாகிஸ்தானின் குவெட்டாவில் அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டார். அவர் தோற்றுவித்த அமைப்பு அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறது. கொல்லப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு மீனா எழுதிய கவிதையின் ஒரு பகுதி.


ஆங்கிலத்தில்: ஷம்சுல் இஸ்லாம்

தமிழில்: நிழல்வண்ணன்

நன்றி: countercurrents.org



Comments

Popular posts from this blog

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...