Skip to main content

நான் ஒரு போதும் திரும்பமாட்டேன்!


விழித்தெழுந்திட்ட பெண் நான்

எரிக்கப்பட்ட எனது குழந்தைகளின் சாம்பலினூடாக

உதித்தெழுந்து புயலானவள் நான்

பீரிட்ட எனது சகோதரனின் குருதியோடையிலிருந்து

உதித்தெழுந்து புயலானவள் நான்.

எனது தேசத்தின் சீற்றமே எனக்கு ஆற்றலை அளித்தது

அழிக்கப்பட்ட, எரிக்கப்பட்ட எனது கிராமங்கள்

எதிரிக்கு எதிரான வெறுப்பை எனக்குள் நிரப்பின

, எம் நாட்டு மக்களே!

நான் பலவீனமானவள், திறனற்றவள்

என்று இனியும் கருதாதீர்

விழித்தெழுந்திட்ட ஆயிரக்கணக்கான பெண்களுடன்

எனது குரல் கலந்துவிட்டது

எனது கரங்கள்

ஆயிரக்கணக்கான போராளிகளின் கரங்களை

இறுகப் பற்றிக்கொண்டுள்ளன.

இந்தத் துயரங்கள் அனைத்தையும் துடைத்தெறிய

அடிமை விலங்குகள் அனைத்தையும் உடைத்தெறிய

விழித்தெழுந்துவிட்ட பெண் நான்

எனது பாதையை நான் கண்டுகொண்டேன்

ஒருபோதும் திரும்பமாட்டேன்.

ஆப்கானிஸ்தானத்தின் மகத்தான கவிதாயினி மீனா பெண்விடுதலைக்காகப் போராடி உயிரீந்தவர். 1977 இல் ஆப்கானிஸ்தான் புரட்சிகரப் பெண்கள் சங்கத்தைத் தோற்றுவித்தவர். இசுலாமிய தீவிரவாதிகளுக்கும் இரசிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எதிராகப் பெண்களின் உரிமைகளுக்காகத் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டவர். அவர் 1987 இல் பாகிஸ்தானின் குவெட்டாவில் அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டார். அவர் தோற்றுவித்த அமைப்பு அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறது. கொல்லப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு மீனா எழுதிய கவிதையின் ஒரு பகுதி.


ஆங்கிலத்தில்: ஷம்சுல் இஸ்லாம்

தமிழில்: நிழல்வண்ணன்

நன்றி: countercurrents.org



Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...