Skip to main content

புதிய சட்டத் தொகுப்புகளுக்கான விதிமுறைகளில் 12 மணிநேர வேலைநாள் விதிமுறையை கைவிடுக!

தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023இல் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட 12 மணிநேர வேலைநாள் சட்டத்திருத்ததை தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பின்னர், தமிழக அரசு இந்தச் சட்டத்தின் மீதான மேல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தமிழக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். 

எனினும், இந்த சட்டத்திருத்ததை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவிக்கவில்லை, அடுத்த கட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக மட்டுமே அறிவித்துள்ளது. மீண்டும்  இதன் மீதான மேல் நடவடிக்கைகள் எப்பொழுது வேண்டுமானாலும் முன்னெடுக்கப்படலாம். எனவே இந்த சட்டத்திருத்ததை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.

இது மட்டுமல்லாமல், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான தமிழக அரசின் விதிமுறைகளில் வேலைநாளை எட்டு மணி நேரம் என்பதற்கு பதிலாக 12 மணி நேரம் என வரையறை செய்துள்ளது. 

இந்திய அரசு தொழிலை இலகுவாக நடத்துதல் என்ற பெயரில் முதலாளி வர்க்கத்தின் சுரண்டல் நலனை பாதுகாக்கும் வண்ணம், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டங்களை திருத்தம் செய்து 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றியமைத்துள்ளது. இந்தச் சட்டத் தொகுப்புகளுக்கான விதிமுறைகள் அந்தந்த மாநில அரசுகள் வகுக்க வேண்டும். இந்திய அரசின் சட்டத் தொகுப்பில் வேலை நேரத்தை பற்றி கூறும் பொழுது எட்டு மணிநேரம் அல்லது உரிய அரசு (மாநில அரசு) முடிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசோ தொழிலாளர்களின் நலன் கருதி எட்டு மணிநேர வேலைநாளை விதிமுறைகளில் வகுக்காமல்,  12 மணிநேரம் என வரையறை செய்துள்ளது. இது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும்.

ஊதிய சட்டத்தொகுப்பு (தமிழ்நாடு) விதிகள் 2022,  பிரிவு 6(2) இல் ஒரு நாளின் வேலை நேரம் 12 மணி நேரம் எனவும், பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிநிலைமைகள் (தமிழ்நாடு) - 2022 விதிமுறைகள்,  பிரிவு 27இல்  ஒரு நாளின் வேலை நேரத்தை 12 மணி நேரம் எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

தொழிற்சாலைகள் சட்டத் திருத்தங்களை காட்டிலும், மேற்குறிப்பிட்ட புதிய தொழிலாளர் சட்டங்களும் அதற்கான விதிமுறைகளும் தான் தொழிலாளர்கள் மீது கடும் சுமைகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. புதிய வேளாண் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தொழிலாளர் விரோதப் போக்கை கொண்டிருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


                                                - சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

Comments

Post a Comment

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட