Skip to main content

கவிதை - ஊசி துளைக்கப்பட்ட கரங்கள்


ஊசி துளைக்கப்பட்ட கரங்கள் 

அவள் கரங்களின் சித்திரவேலைப்  பின்னலில் 

பேரழகு வடிவங்கள் மிளிர்ந்தன

அழுக்கடைந்த சிறிய இருட்டறையில்

ஒளிமிக்க நிலாக்களும் விண்மீன்களும் 

அவளுடைய தோல் போர்த்திய கரங்களால்

ஆடைகளில் உயிர்பெற்று மின்னின.

குவிந்து கிடந்த நூற்கண்டுகள்

அவளுடைய ஊசி துளைத்த விரல்களால்

இரவின் ஒளியில் மின்மினிகளாய்

துணிமணிகளில் மாயம் புரிந்தன

கடிகாரம் நள்ளிரவு மணியை ஒலித்தபோது

அவளது காய்த்துப் போன கரங்களால் 

அவள் படைத்த மெல்லிய அலங்கார  ஆடைகளை 

அணியும் பேறு அவளுக்கில்லை என்பது

அவளுக்குத் தெரியும்

அனைத்து வலிகளும் 

உங்கள் வாழ்வின் அனைத்து உயிராற்றல்களையும்

உறிஞ்சக் கூடிய ஒரு கருந்துளையின் 

ஆற்றல் போல் வருவதில்லை 

சில வலிகள்

நீங்கள் உருவாக்கிய அந்தக் கணத்தில் 

உங்கள் கரங்களிலிருந்து பறித்துச் செல்லப்படும் போது.  

பளிச்சிடும் வண்ண ஆடைகள் 

வடிவத்திலும் வரும். 


மகிழ்ச்சியற்ற  கொண்டாட்டம்

அவர்கள் ஜொலிக்கும் சிவப்பு வண்ண

மேலங்கிகளை அணிந்திருக்கிறார்கள்

இடுப்பில் தங்கமென மின்னும் கச்சைகள்

படாபடோபமான மணவிழாத் தலைப்பாகை

தூரத்தில் இருந்தாலும் கூட்டத்தில்

அவர்கள் தனித்துத் தெரிகிறார்கள்

ஆனால் அவர்களை யாரும் பார்க்கவில்லை 

தங்களுடன் கொண்டுவந்த

பித்தளை இசைக்கருவிகளை இசைத்தவாறே

பின்னணியில் அவர்கள் கரைந்து போனார்கள்

மணவிழா அரங்குக்கு பேருந்தில் வந்து

இறங்கியதிலிருந்து அனைவரும் ஆயத்தமாகும் வரை

மணிக் கணக்கில் காத்திருந்தார்கள்

அவர்கள் உரத்து எழுப்பிய இசையில் 

அழகிய ஆடை அணிந்த மனிதர்கள்

மகிழ்ச்சியுடன் நடனமாடினார்கள்

ஆனால் இசைக் கலைஞனிடமிருந்து 

ஒருவர்  எதிர்பார்ப்பதைப் போல

அவர்கள் விழிகள் மூடியிருக்கவில்லை

அவர்களுடைய முகங்கள் 

இசையின் களிப்பில் மகிழ்ந்திருக்கும் 

அமைதியான முகக்கவசமாக இல்லை.

அவர்கள் சோர்ந்து போயிருந்தார்கள் 

அவர்கள் அணிந்திருந்த மின்னும் ஆடைகளால்

கண்களின் கருவட்டங்களை மறைக்க முடியவில்லை

அவர்களுடைய உற்சாகம் பொங்கும் இசையால்

அவர்களுடைய அவநம்பிக்கையை  

மறைக்க முடியவில்லை. 

அவர்கள் பிற சிறுசிறு வேலைகள் தவிர்த்து

சிறிது கூடுதலாகப் பணம் ஈட்ட வந்திருந்தார்கள்

அவர்கள் மகிழ்ச்சி பொங்கத் திரிந்த

விருந்தினர்களைக் கவனித்தார்கள்

வான வேடிக்கைகளைக் கவனித்தார்கள்

குதிரைமீது வந்த மணமகனைக் கவனித்தார்கள்

ஆனால் எந்தக் கொண்டாட்ட மனநிலையும்

அவர்களுடைய இதயங்களுக்கு ஒளியூட்டவில்லை

இரவினூடே அழகிய வண்ண உடைகளில் திரும்பிய அவர்கள்

காரை உதிர்ந்த சுவர்களில்  

தங்கள் இசைக்கருவிகளைத்

தொங்கவிட்டார்கள் 


தழும்பேறிய மனிதர்கள்

வியர்வையும் கரிப்புகையும் படிந்திருந்தன 

அவர்களுடைய முகங்களில் 

அவர்களுடைய உருவங்கள் மாறியிருந்தன

நிலக்கரி சுமக்கும் இயந்திரங்களைப் போல 

குறுகிய பாதாளப் பாதைகளில் 

புழுதி நிறைந்த காற்றைச் சுவாசித்து 

நுரையீரல்கள் கருத்துத் தடித்தன

அவர்களுடைய பாதங்களுக்கடியில் 

அகழ்வுண்ட பூமி துடித்தது. 

மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன 

மண் வாரி இயந்திரத்தின் கொடுங்கரங்களால் 

மண் சுரண்டி எடுக்கப்பட்டது.

அவர்கள் தழும்பேறிய பூமியில்

உழைத்துக் கொண்டிருக்கும்  

தழும்பேறிய  மனிதர்கள்.


மூன்று கவிதைகளும் அலிகாரைச் சேர்ந்த மாணவர், எழுத்தாளர்.

மாளிகா இக்பால் மே நாளை ஒட்டி எழுதியவை. 

தமிழில்: நிழல்வண்ணன்

நன்றி: countercurrents.org. 


Comments

  1. Three different situations how they labour for their livelihood for others to enjoy. Really nice 👍

    ReplyDelete
  2. மூன்று கவிதைகளும் அருமை. எழுதிய
    தோழர் இக்பாலுக்கும்,
    மொழி பெயர்த்த
    தோழர்
    நிழல் வண்ணன் அவர்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துகளும், வணக்கங்களும்..
    அதிலும் மகிழ்ச்சியற்ற கொண்டாட்டங்கள் கவிதை மனதை பிசைந்துவிட்டது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடி...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...