Skip to main content

இலஞ்சத்தின் மீதும் ஊழலின் மீதும் கட்டமைக்கப்பட்டுள்ள முதலாளிய வர்க்கத்தின் ஆட்சி

 


ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருவதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜக கட்சி 2024-2025 நிதி ஆண்டில் மட்டும் முதலாளிகளிடமிருந்து 6088 கோடி ரூபாய்களை தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது. 2023-2024 நிதி ஆண்டில் அது முதலாளிகளிடமிருந்து பெற்ற தேர்தல் நிதி 3967 கோடி ரூபாய்கள். தேர்தல் பத்திரம் மூலம் நிதி வசூலிப்பது சட்ட விரோதமானது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும் தேர்தல் அறக் கட்டளைகள் என்ற அமைப்புகளின் மூலம் முதலாளிகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்து வருகின்றனர். அவை மட்டுமல்லாமல் தனி நபர்கள் மூலமாகவும் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்று வருகின்றன.

2023-2024 நிதி ஆண்டில் 1129 கோடி ரூபாயைத் தேர்தல் நிதியாகப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 2024-2025 நிதி ஆண்டில் 522.13 கோடி ரூபாயைத் தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது. இதை விட 12 மடங்கு அதிகமாக பாஜக பெற்றுள்ளது. ஆட்சியில் உள்ள கட்சிக்குத் தேர்தல் நிதி அளிப்பதன் மூலம்தானே முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிக்கும் ஒப்பந்தங்களையும் இலட்சக்கணக்கான ரூபாய் மானியங்களையும் அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். முதலாளிகளிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் பணத்தை வாரி இறைத்து மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமரும் இவர்கள் முதலாளிகளின் ஏஜண்டுகளாகச் சேவை செய்கின்றனர்; முதலாளிகளுக்குத் தேவையான சட்டங்களை, மக்கள் விரோதச் சட்டங்களை, பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றனர். நிதி அளிக்கும் முதலாளிகளுக்குச் சலுகை காட்டுகின்றனர். மக்களுடைய வரிப் பணத்திலிருந்து இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மானியமாக அளிக்கின்றனர்; முதலாளிகளுடன் சேர்ந்து இவர்களும் அவற்றில் கொள்ளை அடிக்கின்றனர்.

முதலாளிகளிடமிருந்து பெறும் இலஞ்சத்தை தேர்தல் நிதி என்ற பெயரில் சட்டபூர்வமாக்கி உள்ளனர் இந்த முதலாளிகளின் ஏஜண்டுகள். இலஞ்சத்தின் மீதும் ஊழலின் மீதும் கட்டப்பட்டுள்ள இந்த அமைப்பைத்தான் ஜனநாயக ஆட்சி என்று இந்த முதலாளியக் கட்சிகளும் அவர்களின் ஊதுகுழல்களான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தம்பட்டம் அடித்து வருகின்றன.

Comments

Popular posts from this blog

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...